’மார்க்’ திரைப்பட விமர்சனம்
போரடிக்காத ஒரு முழுமையான மாஸ் ஆக்ஷன் கமர்ஷியல் படத்திற்கான அத்தனை அம்சங்களும் நிறைந்த ’மார்க்’
ஒரே நாளில் 16 சிறுவர்கள் கடத்தப்படுகிறார்கள். அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சுதீப்புக்கு, முதல்வர் கொலை செய்யப்பட்ட வீடியோ ஆதரத்தை கைப்பற்றும் பொறுப்பும் வழங்கப்படுகிறது. ஒரு பக்கம் கடத்தப்பட்ட சிறுவர்களை தேடும் சுதீப், மறுபக்கம் வீடியோ ஆதாரத்தையும் தேடுவதோடு, இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பாகவும், மாஸாகவும் சொல்வதே ‘மார்க்’.
இடைநீக்கம் செய்யப்பட்டாலும், காக்கி சட்டை போடாமலேயே போலீஸ் கடமையை செய்யும் சுதீப், தனது அதிரடியான நடிப்பு மூலம் படம் முழுவதும் மாஸாக வலம் வருகிறார். சில நிமிடங்களில் சுமார் 50 பேர்களை அடித்து துவைக்கும் க...
‘டியர் ரதி’ திரைப்பட விமர்சனம்
நாயகன் சரவண விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே பெண்களிடம் பேசுவது என்றால் ஒருவித பயம். அதனால் அவருக்கு கைகூடிய இரண்டு காதல் கைவிட்டு போய் விடுகிறது. பெண்களிடம் அவருக்கு இருக்கும் பயத்தை போக்குவதற்காக அவரது நண்பர் பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்து செல்கிறார். அங்கு பாலியல் தொழிலாளியான நாயகி ஹஸ்லி அமானை சந்திக்கும் நாயகனுக்கு அவர் மீது ஒருவித ஈர்ப்பு வருகிறது. அதனால், அவருடன் பழக ஆசைப்படுபவர், அவருடன் ஒருநாள் முழுவதும் செலவிட விரும்புகிறார். அதற்கு ஹஸ்லி அமானும் சம்மதிக்க, இருவரும் சேர்ந்து தங்களது ஒருநாள் பயணத்தை தொடங்குகிறார்கள். மறுபக்கம் ஹஸ்லி அமானை பெரும் கூட்டம் ஒன்று தேடி வருகிறது.
நாயகன் உடனான ஒருநாள் பயணத்தையும், பெரும் கூட்டத்தின் தேடுதல் பயணத்தையும் எதிர்கொள்ளும் நாயகி ஹஸ்லி அமான் யார் ?, இவற்றை அவர் எப்படி எதிர்...
‘ரெட்ட தல’ விமர்சனம் 3/5
படத்தின் பெயருக்கேற்ப அருண்விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.ஒருவர் வறுமையில் வாழ்பவர்.இன்னொருவர் பெரும் பணக்காரர்.வறுமையில் வாழும் அருண்விஜய் பணக்காரரை கொன்றுவிட்டு அந்த இடத்துக்குப் போகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்புடன் சொல்ல முயன்றிருக்கிறது படம்.
இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அருண்விஜய் அதற்காக மெனக்கெட்டிருக்கிறார்.தோற்றம் மற்றும் உடைகளில் மட்டுமின்றி நடிப்பிலும் நுட்பமான வேறுபாடுகளைக் காட்டியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிகமாக மெனக்கெட்டிருக்கும் அருண் விஜய், திரைக்கதை தொய்வு அடையும் இடங்களில் தனது நடிப்பு மூலம் தொய்வில் இருந்து மீட்டு விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, கதையின் மையப்புள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், திரைக்கதையில் எந்தவித பாதிப்பையும...
சிறை விமர்சனம் 3.5/5
கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருக்கிறார் அப்துல்ரவூப்..அவரை விசாரணைக்காக வேலூரிலிருந்து சிவகங்கை அழைத்துச் செல்கிறது கதிரவன் தலைமையிலான குழு. இடையில் அந்தக் கைதி தப்புகிறார்.அவரைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? அந்தக் கைதியின் பின்னணி என்ன? எதற்காகக் கொலை செய்தார்? என்கிற கேள்விக்களுக்கான விடைகளை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கும் படம் சிறை.
காவலர் கதிரவன் வேடத்தில் நடித்திருக்கும் விக்ரம்பிரபு, காவலர் வேலைக்குச் சென்றால் காவலர் தேர்வு, நேர்முகத்தேர்வு என எதுவும் இல்லாமல் உடனடியாக வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள். அந்த அளவுக்குக் காவலராகவே மாறியிருக்கிறார்.தோற்றம் மட்டுமின்றி உடல்மொழி,வசன உச்சரிப்பு ஆகிய எல்லாவற்றிலும் நேர்த்தியாக இருக்கிறார்.நடிப்பிலும் வரவேற்புப் பெறுகிறார்.இறுதியில் மற்ற காவலர்களிடம் அவர் பேசும் வசனம் படத்துக்கும் அவருக்கும் பெரும் பல...
’சாவீ’ திரைப்பட விமர்சனம் 3/5
நாயகன் உதய தீப், தனது தந்தையை தன் இரண்டு மாமன்கள் தான் கொலை செய்ததாக நினைத்து அவர்கள் மீது கோபமாக இருக்கிறார். அதே சமயம், மாமன் மகளை காதலிக்கவும் செய்கிறார். இதற்கிடையே, அவரது ஒரு மாமன் விபத்தில் இறந்து விடுகிறார். துக்க வீட்டில் அசதியில் அனைவரும் தூங்கி விட, பிணம் காணாமல் போகிறது. காணாமல் போன பிணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்குகிறது.
குடும்ப உறுப்பினர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொள்ளும் நிலையில், நாயகனின் மற்றொரு மாமனும் இறந்து விடுகிறார். இந்த தொடர் மரணங்களின் பின்னணி மற்றும் காணாமல் போன பிணம் என்ன ஆனது, என்பதை பிளாக் காமெடி ஜானரில் சொல்வதே ‘சாவீ’.
சாவு வீடு என்ற தலைப்பை ’சாவீ’ என்று மாற்றியிருக்கிறார்கள். புதிய தலைப்புக்கும் கதைக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதது போல் தான், இயக்குநர் என்ன சொல்ல வருகிறார், என்பது ஆரம்பத்தில் ...
’நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்பட விமர்சனம் 3/5
நாயகன் கார்த்தீஸ்வரன், பல வழிகளில் மோசடி செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார்.
போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் தப்பித்தாரா? , அவர் செய்த மோசடிகள் என்ன ? அதை அவர் எப்படி சாமர்த்தியமாக செய்கிறார், அவர் இப்படி செய்வதற்கு என்ன காரணம் ?, ஆகிய கேள்விகளுக்கான விடை தான் படத்தின் கதை.
படத்தை இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அப்பாவி முகம், சாதுவான தோற்றம் என்று சாதாரணமாக வலம் வரும் கார்த்தீஸ்வரன் செய்யும் மோசடிகள் அனைத்தும், அடங்கப்பா....ரகங்களாக அதிர்ச்சியளிக்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி கம்பீரமாகவும், அழகோடும் வலம் வருகிறார்...
’அங்கம்மாள்’ திரைப்பட விமர்சனம்
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித் துணி என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் அங்கம்மாள்.
இளம் வயதில் கணவரை இழந்த கீதா கைலாசம், தனது இரண்டு மகன்களை வளர்ப்பதற்காகக் கடுமையாக உழைக்கிறார். பால் வியாபாரம், விவசாயம் என்று கடுமையான உழைப்பாளியாக மட்டும் இன்றி, தைரியமான பெண்ணாக இருக்கிறார். அந்தக் காலப் பெண்கள் போல ஜாக்கெட் அணியாத பெண்மணியாக இருப்பதுதான் இந்தக்கதை படமாகக் காரணம்.
மூத்த மகனான விவாசாயி பரணி திருமணமாகி அம்மாவுடன் இருக்க, இளைய மகன் சரண் நன்றாக படித்து மருத்துவராகிறார். அவர் பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க, அவரது காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கிறார்கள். பெண் வீட்டார் ஜாக்கெட் அணியாமல் இருக்கும் தனது அம்மாவை பார்த்து தவறாக நினைப்பார்கள் என்பதாலும், காலத்துக்கு ஏற்ப தனது அம்மாவும் மாற வேண்டும்...
‘பிபி180’ (BP180) திரைப்பட விமர்சனம்
சென்னை, காசிமேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் தன்யா ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர், முன்னாள் எம்.எல்.ஏ, மருத்துவ செயலாளர் என்று யாருடைய மிரட்டலுக்கும், உத்தரவுக்கும் அடிபணியாமல் நேர்மையாக ஒரு விசயத்தை செய்கிறார். இதனால், அப்பகுதியில் உள்ள பயங்கரமான ரவுடி டேனியல் பாலாஜி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.
இந்த விவகாரத்தில் தலையிடும் சென்னை காவல்துறை ஆணையர், டேனியல் பாலாஜியை அழைத்து மிரட்டி அசிங்கப்படுத்தி விடுகிறார். இதனால் கடும் கோபம் அடையும் டேனியல் பாலாஜி, காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி தன்யா ரவிச்சந்திரனை பழிவாங்க துடிக்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாகவும், கொஞ்சம் லாஜிக் மீறலோடும் சொல்வது தான் ‘பிபி 180’.
யின் நாயகியாக மருத்துவர் தங்கம் என்ற கதாபாத்திரத்தில், தைரியமான பெண்ணாக நடித்திருக்கு...