டிஎன் 2026 – திரைப்பட விமர்சனம்
வட மாநிலத்தை சேர்ந்த நட்டி நட்ராஜ், சென்னைக்கு பிழைப்புக்காக வந்து எதிர்பாரதவிதமாக நடிகராகி விடுகிறார். அவரது முதல் படம் மக்களிடம் வரவேற்பு பெறுவதோடு, மக்கள் மனதில் அடுத்த எம்.ஜி.ஆர் என்ற இடத்தையும் பிடித்து விடுகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ஜமீன்தார் தம்பி ராமையாவும், நட்டி எம்.ஜி.ஆர் இடத்தை பிடிப்பார் என்பதை கணிப்பதோடு, அவருக்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து சினிமாவில் அவரை உச்ச நடிகராக்கும் பயணத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.
சினிமாவில் உச்ச நடிகராக உயரும் நட்டியை அரசியல் பேச வைப்பதோடு, புதிய அரசியல் கட்சியையும் தொடங்க வைக்கும் தம்பி ராமையா, 2026 ஆம் ஆண்டு அவர் தான் தமிழகத்தின் முதல்வர், என்ற நம்பிக்கையையும் அவரது மனதில் பதிய வைத்து அரசியலில் பயணிக்க வைக்கும் நிலையில், நட்டி நட்ராஜ் எடுக...
'Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்பட விமர்சனம்
காதலித்து திருமணம் செய்து கொண்ட எஸ்.ஜெ.சூர்யா, திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியால், இனி எந்த காதலர்களுக்கும் இத்தகைய நிலை ஏற்பட கூடாது என்பதற்காக, பல வருட உழைப்பிற்குப் பிறகு 2040 ஆம் ஆண்டில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany - LIK) என்ற செயலியை உருவாக்குகிறார். இந்த செயலி மூலம் தங்களுக்கு பொறுத்தமான காதல் ஜோடியை தேர்வு செய்வது முதல், அவர் எங்கே, என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதோடு, 24 மணி நேரமும் அவர்களை கேமரா மூலம் கண்காணிக்கவும் முடியும்.
இதனால், காதலர்களில் யார் ஏமாற்றினாலும், அது அவர்களுக்கு தெரிந்து விடுவதோடு, காதலர்கள் பிரிய நினைத்தால் இழப்பீடு வாங்கிக் கொடுத்து அதை நிறைவேற்றுகிறது இந்த லிக் செயலி. காதலர்களிடம் மட்டும் இன்றி, தம்பதிகளிடமும் பெரும் வரவேற்ப...
’லீடர்’ திரைப்பட விமர்சனம் 3.5/5
தூத்துக்குடியைச் சேர்ந்த கார் மெக்கானிக்கான நாயகன் லெஜண்ட் சரவணன், தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். தாய் இல்லாத தன் மகள் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர், மகளுக்காக எதையும் செய்யும் துணிச்சல் மிக்கவர்.
தூத்துக்குடி துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வில்லன் பாகுபலி பிரபாகரன், மூலம் நடக்க இருக்கும் நாசவேலையை தடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா முயற்சிக்கிறார். அது முடியாமல் போக, துறைமுகத்திற்குள் அடிக்கடி சென்று வரும் லெஜண்ட் சரவணனை வைத்து அந்த வேலையை செய்ய முடிவு செய்கிறார். அதன்படி, அவரது மகளை வைத்து ஆண்ட்ரியா போடும் திட்டத்தால் லெஜண்ட் சரவணன், பிரபாகரனின் கடத்தல் பொருளை போலீஸிடம் சிக்க வைப்பதோடு, அவரது சாம்ராஜ்யத்தையே அழிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்.
அதற்கு ஏற்றவாறு லெஜெண்ட் சரவணனின் ...
கார் ஓட்டுநராக வேலை செய்யும் சமுத்திரக்கனி, அளவான குடும்பம், வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை, என்று மகிழ்ச்சியாக இருந்தாலும், சொந்த வீடு மற்றும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் கடனாளியாகி விடுகிறார். அவசரத்திற்கு கடன் வாங்க தொடங்கும் சமுத்திரக்கனி, அதையே தனது ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியாக மாற்றிக் கொள்ளும் போது, அவரை பெரும் சிக்கல் சூழ்ந்து கொள்கிறது. அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை, பல்வேறு ஆசைகளை வளர்த்துக்கொண்டு அதன் மூலம் அவதிப்படும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலாக சொல்வதே ‘கார்மேனி செல்வம்’.
இருப்பதை வைத்து நிறைவாக வாழாமல், நிறைவை தேடி...தேடி... வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது, என்ற மெசஜை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ராம் சக்ரி, ஒரு சராசரி குடும்பத்தின் கனவுகள் மற்றும் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை...
தமிழ் ஈழப் போராட்டம் மற்றும் போர்க் காலங்களில் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘நீளிரா’ ஒரு நீண்ட இரவில் நடக்கும் கதை என்றாலும், ஈழப் போரின் பின்னணி, அம்மக்கள் எதிர்கொண்ட அவலங்கள் மற்றும் சமாதானம் என்ற பெயரில் அம்மண்ணில் அடியெடுத்து வைத்த இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களை உணர்வுப்பூர்வமாக சொல்கிறது.
விடிந்தால் திருமணம், சுற்றி பதற்றமான சூழல், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஒருவித பயத்தோடு இருந்தாலும், திருமண வீட்டார் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். இதற்கிடையே போராளிகளை தேடி இந்திய ராணுவம் அங்கு வருகிறது. மறுபுறம் அவர்கள் இருப்பதை அறிந்த போராளிகள் அவர்களை தாக்க தயாராகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க இந்திய ராணுவப்படை திருமண வீட்டுக்குள் நுழைகின்றது.
ஒரு பக்கம் போராளிகள், மறுபக்கம் இந்திய ராணுவப்படை என போ...
ஸ்கை பிக்சர்ஸ் “ஃபைவ் ஸ்டார்” கே. செந்தில் மற்றும் டாக்டர். என். யோகேஸ்வரன் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் ,அஜய் கார்த்தி , சங்கீதா,பவானி ஸ்ரீ, அபர்ணதி ,அனந்த் நாக் ,பிரகாஷ் ராஜ் ,கிஷோர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’காளிதாஸ் 2’
சென்னை புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இதே அடுக்குமாடி குடியிருப்பில் அபர்ணதி – அனந்த் நாக், தம்பதிகள் 4 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
மறுநாள் புதுவருடம் பிறப்பதால் அந்த குடியிருப்பில் ஆட்டம், பாட்டு என்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதே சமயம் அபர்ணாதியின் 4 வயது பெண் குழந்தை காணாமல் போகிறது. இதனையடுத்து குழந்தையை கண்டுபிடிப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ அங்கு வருகிறார்கள்.
அதே குடியிருப்ப...
ஜார்ஜ் மரியன் தனது உருவம் மற்றவர்கள் கேலி செய்யும் விதத்தில் இருந்தாலும் தன் மகன் ஜி.வி.பிரகாஷ், அம்சமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடையும் ஜார்ஜ் மரியன், அவரை பொத்தி பொத்தி வளர்க்கிறார். ஆனால், உருவ கேலிக்கு ஆளாகும் தன் தந்தையால் தனக்கு அவமானம் ஏற்படுவதாக கருதும், ஜி.வி.பிரகாஷ், அவரை விட்டு விலகி, தனது அடையாளத்தை மறைத்து வாழ விரும்புகிறார்.
வேலைக்காக பெங்களூர் செல்லும் ஜி.வி.பிரகாஷ் அங்கு நாயகி ஸ்ரீ கெளரி பிரியாவை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. பணக்காரரான ஸ்ரீ கெளரி பிரியாவின் தந்தை அப்பாஸ், மகள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். திருமண ஏற்பாடுகள் தொடங்கும் போது ஜி.வி.பிரகாஷின் தந்தை ஜார்ஜ் மரியனின் எளிமையான தோற்றம் மற்றும் எதார்த்தமான செயல்களை பார்த்து கோபமடையும் அப்பாஸ், அவரை அவமானப்படுத்தும் வகையில் பேசி விடுகிறார். உருவத்தை பார்த்து ஒருவரது தகுதி...
உலகின் பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் பண்பாடு ஆகியன தமிழ்ப்பண்பாட்டுடன் இயைந்திருக்கின்றன என்பது இப்போது வெளிப்படுகிற செய்தி.இங்கிருந்து சுமார் 5000 கிமீ தொலைவில் இருக்கும் கொரியாவின் பண்பாடுகளுக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்கிற ஆழமான தகவலை அழகான காட்சிமொழியுடன் கலந்து கொடுத்திருக்கும் படம் மேட் இன் கொரியா.
தமிழ்நாட்டின் ஒரு மலைப்பாங்கான ஒரு சிறியகிராமத்தில் வசிக்கும் நாயகி பிரியங்கா மோகனுக்கு, தென் கொரிய கலாச்சாரம் மற்றும் கலைகளின் மீது மிகுந்த ஆர்வம்.அதனால் அங்கு செல்லும் கனவை வளர்த்துக் கொள்கிறார்.ஆனால் வாழ்க்கைச் சூழலில் அது நடக்காமல் போகிறது.திடீரென அவருக்கு கொரியா செல்லும் சூழல் நேர்கிறது.மகிழ்வுடன் செல்லவேண்டிய அந்த நாட்டுக்கு துயருடன் செல்லவேண்டிய நிலை.எதிர்பாராதவிதமாக கொரியாவின் தலைநகரான சியோல் (Seoul) நகரத்திற்குச் செல்கிறார்.தெரியாத மொழி, அறிமுகமி...
பெரும் பணக்காரர் சத்யராஜின் ஒரே மகளான ஐஸ்வர்யா அர்ஜூன், தான் செல்ல வேண்டிய ஒரு இடத்திற்கு போகும் வழியில் சிலரால் பல இடையூறுகளை சந்திக்கிறார். நாயகன் நிரஞ்சனாலும் அவருக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கிடையே, அவர் செல்ல இருந்த இடத்தில் பெரும் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்கிறார்கள். காலதாமதமாக வந்ததால் ஐஸ்வர்யா அர்ஜூன், அந்த விபத்தில் இருந்து தப்பித்து விடுகிறார். விபத்தில் சிக்காமல் தான் உயிர் பிழைத்ததற்கு காரணம், வழியில் தனக்கு இடையூறு செய்தவர்கள் தான் என்று உணரும் ஐஸ்வர்யா அர்ஜூன், அவர்களை மீண்டும் சந்தித்து நன்றி தெரிவிக்க முடிவு செய்கிறார்.
அதன்படி, அவர்களை மீண்டும் சந்திக்க ஐஸ்வர்யா அர்ஜூன் மேற்கொள்ளும் பயணத்தில் அவருக்கு காதலோடு, சில பிரச்சனைகளும் வருகிறது. அது என்ன ?. அதில் இருந்து விடுபட்டு அவர் நினைத்ததை செய்தாரா ?, என்பதை பாசம், கதல், அன்பு ஆகிய உணர்வுகளை போற்ற...