வியாழக்கிழமை, ஜூலை 9
Shadow

தமிழக அரசியல்

மாஜி அமைச்சர்கள், எம்.பி.க்கள் உட்பட 44 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்… அதிரடி ஆட்டம் காட்டும் ஓபிஎஸ்!!

மாஜி அமைச்சர்கள், எம்.பி.க்கள் உட்பட 44 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்… அதிரடி ஆட்டம் காட்டும் ஓபிஎஸ்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
44 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்.. அதிரடி காட்டும் ஓபிஎஸ்!! அதிமுகவில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமன், காமராஜ் உள்ளிட்ட 44 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக இபிஎஸ் அறிவித்தார். இதைத்தொடர்ந்து இபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ்-ம் பரபரப்பாக பேட்டியளித்தார். இந்நிலையில், கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, பொள்ளாச்சி ஜெயராமன், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், காமராஜ் உள்ளிட்ட 44 பேரை கட்சியை விட்டு நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். சிட்லபாக்கம் ராஜேந்திரன், பெஞ்சமின், கே.சி.கருப்பணன், கேசி வீரமணி, ரா.குமரகுரு, எம்.பரஞ்சோதி ஆகியோரும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 44 பேரும் அடிப்படை உறுப்பினர்...
மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் மோடி

மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த செவாய்க்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார் இந்த நிலையில் 2 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொடர்பான அறிகுறிகள் குறித்து மு.க ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது என காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று அவர் வீடு திரும்புவார் என திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். இதுகுறித்து பிரதமருக்கு நன்றிய கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் நன்கு குணமடைந்து வருவதாக தெரிவித்தார். மேலும் சென்னையில் வரும் ஜூலை 28ஆம் தேதி துவங...
கொடநாடு வழக்கு- ஜெயலலிதா கார் ஓட்டுநரிடம் தனிப்படை விசாரணை!

கொடநாடு வழக்கு- ஜெயலலிதா கார் ஓட்டுநரிடம் தனிப்படை விசாரணை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் 3-வது நாளாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து, நேற்று மதுரையை சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான லாஜி வோரோவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை இன்று விசாரணை நடத்தி வருகிறது. மன்னார்குடி சேரம்குளத்தை சேர்ந்த குணசேகரனை கோவையில் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். கனகராஜ் குறித்து ஜெயலலிதாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்...
சிஎன்இராமமூர்த்தி எழுதிய “வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற வரலாற்று ஆவண புத்தகத்தை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார்!

சிஎன்இராமமூர்த்தி எழுதிய “வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற வரலாற்று ஆவண புத்தகத்தை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார்!

HOME SLIDER, NEWS, Photos, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  #வன்னியஇனத்திற்கானசமூகநீதியும்திராவிடமுன்னேற்றக்கழகமும்" #வன்னியர்  கூட்டமைப்பு மற்றும் #அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் #சிஎன்இராமமூர்த்தி அவர்கள் எழுதிய "வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்" என்ற வரலாற்று ஆவண புத்தகத்தை மாண்புமிகு தமிழ்நாடு #முதல்வர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தமிழகத்தில் மிகப் பெரும்பான்மையான மக்களை கொண்ட சமூகமான வன்னிய மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்னென்ன நன்மைகள் செய்துள்ளது, எப்போதெல்லாம் செய்துள்ளது என்பதையும், அதற்கு வன்னியர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி என்னவெல்லாம் முயற்சிகள் எடுத்தார் என்பதையும் ஆதாரப்பூர்வமாக ஆவணங்களுடன் "வன்னிய இனத்திற்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்" என்ற தலைப்பில் ஒரு வரலாற்று ஆவண நூலை சி.என்.இராமமூர்த்தி எழுதி இரு...
அரசு பஸ்களை தனியாருக்கு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்- சீமான் வலியுறுத்தல்!

அரசு பஸ்களை தனியாருக்கு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்- சீமான் வலியுறுத்தல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அரசுப் பேருந்துகளைப் படிப்படியாகத் தனியார் வசம் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஊழல் மற்றும் அரசின் நிர்வாக திறமையின்மையை மறைக்க மக்கள் சேவை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. முதற்கட்டமாக சென்னையில் 1000 பேருந்துகளைத் தனியார் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வரும் செய்திகள் பொது மக்களிடத்திலும், போக்கு வரத்து ஊழியர்களிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்துத் துறையைத் தனியாரிடம் ஒப்படைத்தால் அவை லாப நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என்பதால் பயணிகள் அதிகம் இல்லாத சிறிய கிராமங்களுக்குப் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் பேராபத்து ஏற்படக்கூடும். மேலும், வி...
விடிய விடிய நடைபெற்ற நெய்தல் கலைவிழாவில் பங்கேற்ற கனிமொழி எம்.பி –  தூத்துக்கு!

விடிய விடிய நடைபெற்ற நெய்தல் கலைவிழாவில் பங்கேற்ற கனிமொழி எம்.பி – தூத்துக்கு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
தூத்துக்குடியில் தமிழர்களின் கலை,மண் சார்ந்த வாழ்வியல் முறை, பாரம்பரிய உணவு வகைகளை நினைவு கூறும் விதமாக கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் நெய்தல் கலை விழா கடந்த 7-ந் தேதி மாலை வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. நேற்று மாலை சக்கை குச்சி ஆட்டம், கிராமிய கலை நிகழ்ச்சி, கலை மாமணி முத்துலட்சுமி வில்லுப்பாட்டு, துடுப்பாட்டம், சிலம்பாட்டம்,பறையாட்டம், கலை நிகழ்ச்சிகள், திரைப்பட புகழ் செந்தில்-ராஜலட்சுமி குழுவினரின் இசை நிகழ்ச்சிகள், புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிராயன் கூத்து நிகழ்ச்சிகள் என இரவு 2 மணி வரை நடைபெற்றது. இன்று அதிகாலை விடிய விடிய நடைபெற்றதால் அதனை காண பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட புகழ் ராஜலட்சுமி-செந்தில் தமிழக அரசு பெண்களுக்கு பேருந்தில் இலவச பயண சலுகை வழங்குவது போல் கலைஞர்களுக்கும் பேருந்து பயண சலுகை வழங்க வேண்டும் என்று கனிமொழி...
நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்பியாக இசையமப்பாளர் இளையராஜா நியமனம்

நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்பியாக இசையமப்பாளர் இளையராஜா நியமனம்

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்பியாக இசையமப்பாளர் இளையராஜா நியமனம் நியமன எம்பியாக இசையமைப்பாளர் இளையராஜாவை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளதை பிரதமர் மோடி டிவிட்டரில் அறிவித்தார் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு இளையராஜா அறிமுகமானார் நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள் கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்கள் இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2018ம் ஆண்டு இளையராஜ...
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக புதன்கிழமை விசாரணை- சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு!

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக புதன்கிழமை விசாரணை- சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் கடந்த மாதம் 23-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்டது. ஆனால் 23-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவை மீறி நடந்த இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில் ஐகோர்ட்டு அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வ...
சென்னையில் 4ம் தேதி தொழில் முதலீட்டாளர் மாநாடு!

சென்னையில் 4ம் தேதி தொழில் முதலீட்டாளர் மாநாடு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னை தாஜ் ஓட்டலில் வரும் 4ஆம் தேதி தொழில் மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டில் புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும். இந்த மாநாட்டின் மூலம் ₨.3,494 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நான் முதல்வன் திட்டத்தால் இளைஞர்களுக்கு திறன்மேம்பாடு வழங்கப்படுகிறது கடந்த ஓராண்டு காலத்தில் தொழில்துறையில் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. 29 திட்டங்களுக்கு நிலம் அடையாளம் காணும் பணி நிறைவடைந்துள்ளது. 25 திட்டங்கள் அனுமதி பெறும் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்....
பாஜக கூட்டணி வேட்பாளர் முர்மு சென்னை வந்தால் பிளவுபட்ட அதிமுகவில் யாரை சந்திப்பார்?

பாஜக கூட்டணி வேட்பாளர் முர்மு சென்னை வந்தால் பிளவுபட்ட அதிமுகவில் யாரை சந்திப்பார்?

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
    பாஜக கூட்டணி வேட்பாளர் முர்மு சென்னை வந்தால் பிளவுபட்ட அதிமுகவில் யாரை சந்திப்பார்?     குடியரசு தலைவர் தேர்தல் வருகிற ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அப்பதவிக்காக ஆளும் பாஜக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்குவதால், கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோர போட்டியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய  யஷ்வந்த் சின்ஹா பல்வேறு மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கோரி சென்னைக்கு பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், இன்று சென்னை வந்தடைந்த அவர், அண்ணா அறிவாலயத்தில்  முதலம...