செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

தமிழக அரசியல்

சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு!

சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட உள்ளாட்சிகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு உள்ளன. இந்த விபரம், விரைவில் அரசிதழில் வெளியிடப்பட உள்ளது.மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதனிடையே, அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாரித்தல், தேர்தல் அலுவலர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.     விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், மாநகராட்சி மேயருக்கான இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி பட்டியலின பெண்களுக்கு ஒது...
தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட்டம்!

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப்பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திரு உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள் தமிழக மக்களால் மக்கள் திலகம் என்றும் புரட்சித்தலைவர் என்றும் அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் இலங்கையில் கண்டி அருகேயுள்ள நாவலப் பிட்டியில். 1917-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ல் பிறந்தார். தனது சிறுவயது முதற்கொண்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கி பின்னர் இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றுத் திரைத்து...
நீதிபதி சந்துருவுக்கு “அம்பேத்கர் விருது”, திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தந்தை பெரியார் விருது தமிழக அரசு அறிவிப்பு

நீதிபதி சந்துருவுக்கு “அம்பேத்கர் விருது”, திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தந்தை பெரியார் விருது தமிழக அரசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அம்பேத்கர் விருது முன்னாள் நீதிபதி சந்துருவுக்கும், தந்தை பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை வழங்கி கௌரவித்துவருகிறது. அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான திருநாவுக்கரசுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதேபோன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் 2021...
ஆற்று மணல்  விற்பனைக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு…!

ஆற்று மணல்  விற்பனைக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  ஆற்று மணல்  விற்பனைக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு...! நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆற்று மணலை எடுத்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கான எளிய வழிமுறைகளை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், ஏழை, எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி எடுத்துச் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை, பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இருப்பை பொருத்து வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது தற்பொழுது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சு...
பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா?

பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா? தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கல்லூரிகளின் கட்டுமான பணிகள் பல மாதங்களாக நடந்து வந்தது. இந்த கட்டிடங்களை வரும் 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திரந்து வைக்க முடிவு செய்யப்பட்டிர்ருந்தது. அதே தினத்தில் மதுரையில் தமிழக பாஜக சார்பில் பொங்கல் விழவை நடத்த திட்டமிட்டிருந்தார்கள். அந்த பொங்கல் விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருவதால் மீண்டும் இரவு ஊரட...
காலையில் மதுரை மாலையில் திருச்சி  திடீரென சிறை மாற்றப்பட்ட ராஜேந்திரபாலாஜி! காரணம் என்ன?

காலையில் மதுரை மாலையில் திருச்சி திடீரென சிறை மாற்றப்பட்ட ராஜேந்திரபாலாஜி! காரணம் என்ன?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
காலையில் மதுரை மாலையில் திருச்சி திடீரென சிறை மாற்றப்பட்ட ராஜேந்திரபாலாஜி! காரணம் என்ன? நிர்வாக காரணங்களுக்காக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கி தருவதாக கூறி சுமார் 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவரை கைது செய்விருந்த நிலையில் தலைமறைவானார். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அவரை கைது செய்வதற்காக தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில்  கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நேற்று காலை காரில் சென்று கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியை தமிழக தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் கைது செய்ய்யப்படும்...
சட்டப்பேரவையை அவமதிக்கும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறோம்” – விடுதலைச் சிறுத்தைகள்

சட்டப்பேரவையை அவமதிக்கும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறோம்” – விடுதலைச் சிறுத்தைகள்

Assembly news, HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சட்டப்பேரவையை அவமதிக்கும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறோம்” விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு “ அனைத்துக்கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய The Undergraduate Medical Degree Courses Bill, 2021 ஐ, குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் சட்டப் பேரவையை மேதகு ஆளுநர் சிறுமைப்படுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசையும் அதைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்களையும், அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதிக்கிற ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புறக்கணித்து வெளிநடப்புச் செய்கிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்...
ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமின் பெற வேண்டும்: நீதிமன்றம் கருத்து

ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமின் பெற வேண்டும்: நீதிமன்றம் கருத்து

HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல்
ஆவின் ஊழல் தொடர்பான வழக்கில் தலைமறைவாக உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமின் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை தேடிவருகிறது. கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது. இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்து உதவி செய்ததாக திருப்பத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கியிருக்கலாம் என தனிப்படை அங்கும் விரைந்தது. எனினும், இதுவரை ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய முடியாமல்...
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் இன்று தொடக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் இன்று தொடக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் இன்று தொடக்கம் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022-ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் பொங்கல் வைப்பதற்கு  தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி,திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றுடன் துணிப்பையும் வழங்கப்படுகிறது. மொத்தம் 2 கோடியே 15 லட்சத்து 48,060 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று ...
10.5% இட ஒதுக்கீடு ஏமாற்றும் இராமதாஸ் – போராடும் சி.என்.ஆர் – முக நூலில் வெளுத்த நாகரத்தினம்

10.5% இட ஒதுக்கீடு ஏமாற்றும் இராமதாஸ் – போராடும் சி.என்.ஆர் – முக நூலில் வெளுத்த நாகரத்தினம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
10.5% இட ஒதுக்கீடு ஏமாற்றும் இராமதாஸ் - போராடும் சி.என்.ஆர் - முக நூலில் வெளுத்த நாகரத்தினம் வன்னியர்களுக்கான, 10.5% சதவிகித, உள் இட ஒதுக்கீட்டு சட்டம், எப்படி, கருவானது/உருவானது❓ எப்படி "குறை" பிரசவ சட்டமானது❓ **************** 1987 ல், MGR ஆட்சியில், 25 வன்னிய உயிர்களை பலி கொடுத்து, 1989ல் பின்னர் வந்த, தி.மு.க ஆட்சியில், வன்னியர் உள்ளிட்ட 108 ஜாதிகளை உள்ளடக்கிய, MBC என்ற பெயரில் 20% சதவிகித, "தொகுப்பு" இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இது, எல்லோருக்கும் தெரிந்த, செய்திதான். அந்த, அரசாணை‌ ஆவணத்தில், 108 ஜாதிகளுக்கான, மக்கள் தொகையும், ஜாதிவாரியாக, தனித்தனியாக, குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி குறிப்பிட்டிருந்தும், மதிப்பெண் அடிப்படையில், மக்கள் தொகையின் அடிப்படையில், ஜாதிவாரி தேர்வு பட்டியல் தாயாரிக்கப்படாமல்,108 ஜாதிகளுக்கும், ஒரே மதிப்பெண் பட்டியல் (Random list) தயார் ச...