'வாழை' படத்தில் எனது நடிப்பிற்கு வழங்கிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர் ஜே எஸ் கே
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பல்வேறு தரப்புகளில் இருந்து பெரும் பாராட்டுகளை பெற்ற 'வாழை' திரைப்படத்தில் வியாபாரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்து ஜொலித்து வரும் ஜே எஸ் கே.
இது குறித்து பேசிய அவர், "இந்த சிறந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும், திரைப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் திலீப் சுப்பராயன் மாஸ்டர் அவர்களுக்கும் 'வாழை' படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமா...
ஏ ஆர் முருகதாஸ் படத்துக்கு 15 கோடி ரூபாய் செலவில் தாராவி செட்!
ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்துக்கு இடையிலேயே ஏ ஆர் முருகதாஸ் அடுத்து சல்மான்கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்.
இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக நடிக்க சத்யராஜும் நடிக்கின்றனர்.
இதன் முதல் கட்ட ஷூட்டிங் கடந்த ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டது.
தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் தாராவியில் சில காட்சிகளை எடுக்க வேண்டியுள்ளதாம்.
அதற்காக தாராவி போன்ற செட் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த செட்டுக்காக 15 கோடி ரூபாய் அளவுக்கு செலவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது....