பாஜக தலைகீழாக நின்றாலும், குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜகவால் கால் வைக்கவே முடியாது – குஷ்பு சீண்டல்
சமூக வலைதளமான டுவிட்டரில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு இடையே கடுமையான வார்த்தை போர் நடந்துள்ளது. இவர்களின் காரசார கருத்து பதிவிற்கு பதில் கருத்து பதிவிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிய தமிழிசை கூறிய கருத்தை வைத்து, சண்டையை துவக்கினார் குஷ்பு.
குஷ்பு : மக்கள் அரசியலில் சேர்வது அவர்களின் கொள்கைள் மற்றும் விருப்பத்திற்காக மட்டுமே. நீங்கள் தான் உங்கள் கட்சியில் சேரும்படி கெஞ்சிக் கொண்டு இருக்கிறீர்கள்.
தமிழிசை : குஷ்பு அரசியலில் இணைந்தீர்களா? கட்சிகளுக்கு தாவினீர்களா? திமுக.,வில் இருந்து விலகி காங்.,கில் இணைந்தது மிகச் சிறந்த கொள்கையாலா என அனைவருக்கும் தெரியும்.
குஷ்பு : திமுக.,விலிருந்து விலகுவதற்கு 6 மாதத்திற்கு முன்பிருந்து இருகட்சிகளுடனும் எனக்கு நல்லுறவு இருந்தது. உங்கள் மூளையை சரிசெய்து க...









