வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

ஊழல் புகாரில் 2 நீதிபதிகள் சஸ்பெண்ட்: டெல்லி ஐகோர்ட் அதிரடி

ஊழல் புகாரில் 2 நீதிபதிகள் சஸ்பெண்ட்: டெல்லி ஐகோர்ட் அதிரடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லி துவாரகா மாவட்ட கோர்ட் நீதிபதிகள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான ஆதாரங்களும் டெல்லி ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. லஞ்ச ஊழல் புகாரில் டெல்லி துவாரகா மாவட்ட கோர்ட் நீதிபதிகள் இருவரை தற்காலிக பணிநீக்கம் செய்து டெல்லி ஐகோர்ட்  உத்தரவிட்டது இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சாட்டையை சுழற்றிய டெல்லி ஐகோர்ட், துவாரகா மாவட்ட கூடுதல் நீதிபதி ஜிதேந்தர் மிஷ்ரா, நவீன் அரோரா (சிறப்பு நீதிபதி, மின்சாரம்) ஆகியோரை  பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது...
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தமிழருவி மணியன் ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தமிழருவி மணியன் ஆலோசனை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் ரஜினிகாந்த்  கடந்த மே மாதத்தில் தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்தார். மாவட்ட வாரியாக ரசிகர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடி தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டார். சந்திப்பின்  போது அவர் பேச்சிய பேச்சு  பெரும்பரபரப்பையும் பலவித எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து ரஜினி தீபாவளிக்கு அரசியல் அறிவிப்பை வெளியிடுவார், காலா படப்பிடிப்பிற்கு பிறகு அரசியலுக்கு வருவார், 2.0 பாடல் ரிலீசுக்குப் பிறகு அரசியலுக்கு வருவார் என்று பல தகவல்கள் வெளியாகின. கடைசியாக அவருடைய பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடப் போகிறார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் கிறிஸ்துமஸ்க்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளார். வருகிற 26 ந்தேதி தொடங்கி 31 ந்தேதி வரை 6 நாட்கள்  தினமும் 1000 ரசிகர்களை சந்தித்து பு...
இந்திய கோடீஸ்வர பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ் சினிமா ஹீரோக்கள்..!

இந்திய கோடீஸ்வர பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ் சினிமா ஹீரோக்கள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  போர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் 100 பிரபலங்களை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி இந்த ஆண்டு சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார். சினிமா படங்களில் நடித்தது தவிர, பல்வேறு விளம்பரங்களில் தோன்றியதன் மூலம் கடந்த 1-10-2016 முதல் 30-9-2017 வரை சல்மான் கான்(51) 232 கோடியே 83 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பெற்றுள்ள ஷாருக்கான் 170.05 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். 100.72 கோடி ரூபாய் வருமானத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாம் இடத்தில் உள்ளார். அக்ஷய் குமார் மற்றும் முன்னாள் கிரிக்கெட்  சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் முறையே 4, 5 வது இடத்தில் உள்ளனர். அவர்களுக்கு 98.25 கோடி ரூபாயும், 82.50 கோ...
கனிமொழி, ஆ.ராசாவை மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து வாழ்த்தி வரவேற்றார்..!

கனிமொழி, ஆ.ராசாவை மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து வாழ்த்தி வரவேற்றார்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் இன்று டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னை திரும்பினர்.  தங்கை கனிமொழியை செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து வரவேற்றார்  2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் ஆர். ராசா , கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள்மீது போடப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக நீதிபதி கூறியுள்ளார். வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்றிருந்த கனிமொழி, ஆர்.ராசா ஆகியோர் 2ஜி வழக்கில் விடுதலையான பின்னர் சென்னை திரும்பினர். விமானநிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.  சென்னை திரும்பிய கனிமொழியை வரவேற்க விமான நிலையத்திற்கு நேரில் வருகை தந்தார் மு.க.ஸ்டாலின். ஆர்.ராசா மற்றும் கனிமொழி வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்தில் திமுகவினர...
நடிகை நயன்தாரா புகைப்படத்தை அனுப்பி காதல் வலை வீசி கொள்ளை கும்பலை பிடித்த பெண் போலீஸ் அதிகாரி

நடிகை நயன்தாரா புகைப்படத்தை அனுப்பி காதல் வலை வீசி கொள்ளை கும்பலை பிடித்த பெண் போலீஸ் அதிகாரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
பீகாரில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி நடிகை நயன்தாரா புகைபடத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பலை காதல் வலையில் வீழ்த்தி பிடித்து உள்ளார். பாரதீய ஜனதா அமைச்சர் ஒருவரின் மொபைல் போனை  திருடி ஒரு பயங்கரமான கும்பல் பயன்படுத்தி வந்தனர். ஒரு பெண் போலீஸ் அதிகாரி அந்த கும்பலில் உள்ள ஒருவரை காதலிப்பதாக பொய் கூறி அந்த கும்பலையே பிடித்து உள்ளார். அந்த பெண் போலீஸ் அதிகாரி நடிகை நயன்தாரா படத்தை அந்த கும்பலிடம் காட்டி தான் நம்ப வைத்து உள்ளார். பீகாரின் தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.  தர்பங்கா மாவட்டம் போலீசில் உள்ள பெண் அதிகாரிதான் இந்த சாகசத்தில் ஈடுபட்டார். பாரதீய ஜனதா தலைவர் சஞ்சய் குமார் மகோதன் என்பவரின் விலையுயர்ந்த மொபைல் ஒன்று திருட்டு போனது  இதனை முகம்மது ஹஸ்னைன் என்ற திருடன் திருடி உள்ளான். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து பொறுப்பு பெண் போலீஸ...
”நீதி நிச்சயம் வெல்லும்” குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு லாலு பிரசாத் யாதவ் டுவிட்

”நீதி நிச்சயம் வெல்லும்” குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு லாலு பிரசாத் யாதவ் டுவிட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கால்நடைத் தீவன  ஊழல் தொடர்பான 2-வது வழக்கில், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் குற்றவாளி என  ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் இன்று  தீர்ப்பளித்துள்ளது.  அவருக்கான தண்டனை விவரம் ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, லாலு பிரசாத் யாதவை காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தது. லாலு பிரசாத் யாதவ், பிர்சா           முண்டா    சிறைச்சாலையில் அடைக்கப்பட உள்ளார். தனக்கு எதிராக தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், லாலு பிரசாத் யாதவ் தனது டுவிட்டரில், நீதி நிச்சயம் வெல்லும் என்று தெரிவித்துள்ளார். லாலு பிரசாத் யாதவ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:- “ உண்மையைச் சுற்றி தற்போது பொய் சூழ்ந்துள்ளது. மிக ...
சென்னை புறநகர் பகுதிகளில் ஏ.சி ரெயில்களை இயக்க திட்டம்..!

சென்னை புறநகர் பகுதிகளில் ஏ.சி ரெயில்களை இயக்க திட்டம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை உள்பட 4 நகரங்களில் தானியங்கி கதவுகளுடன் கூடிய ஏ.சி. பெட்டிகள் கொண்ட புறநகர் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மும்பை மேற்கு புறநகர் ரெயில் சேவையின் ஒரு பகுதியாக 12 குளிர்சாதன வசதி பெட்டிகள் கொண்ட ரெயிலை இன்னும் ஒரு சில தினங்களில் இயக்க முடிவாகியுள்ளது. இதுபற்றி ரெயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, உண்மையில், 2019-2020ம் ஆண்டில் இருந்து அனைத்து புதிய உள்ளூர் ரெயில்களும் குளிர்சாதன வசதியுடன் தானியங்கி கதவுகளை கொண்டு இருக்கும்.  இறுதியாக சென்னை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் செகந்திராபாத் ஆகிய நகரங்களிலும் இதனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என கூறியுள்ளார். இந்த புதிய ஏ.சி. ரெயில்களுடன் பழைய ரெயில்களும் அடுத்தடுத்து இயக்கப்படும்.  ஆனால் கட்டணம் வேறுபடும். மும்பையில் சர்ச்கேட் மற்றும் போரிவிலி பகுதிகளுக்கு இடையே டிசம்பர் 25ந்தேதி அல்லது 2018 ஜனவரி 1ந...
டெல்லியில் பிரதமர் மோடி விழாவுக்கு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை..!

டெல்லியில் பிரதமர் மோடி விழாவுக்கு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லி மெஜந்தா லைன் பிரிவில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, வரும் 25 ஆம் தேதி துவக்கி வைக்கிறார். இந்த விழாவுக்கு கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை. தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் மெட்ரோ ரயில் பாதையை  விரிவாக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வகையில், ஜானக்புரியில் இருந்து நொய்டா வரை  12.5 கி.மீட்டர் தூரம் வரை மெஜந்தா பிரிவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்களை இயக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன.  மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் முடிந்த நிலையில், வரும் டிசம்பர் 25 ஆம் தேதியன்று பிரதமர் மோடி, இந்த பாதையில் ரயில் பாதையை துவக்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெறும் துவக்க ...
அப்துல் கலாமை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

அப்துல் கலாமை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமேசுவரம் அருகே உள்ள மண்டபம் பகுதிக்கு சென்றார். அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ராமநாத சாமி கோவிலில் தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து  பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்துக்கு சென்று அவர் மரியாதை செலுத்தினார். பின்னர், மதுரைக்கு காரில் சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு விமான நிலையத்தில் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை...
குழந்தைபேய்கள் மிரட்டும் சங்குசக்கரம்..!

குழந்தைபேய்கள் மிரட்டும் சங்குசக்கரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற  படங்களை தயாரித்த லியோவிஷன் வி.எஸ்.ராஜ்குமார் மற்றும் சினிமா வாலா பிச்சர்ஸ் கே.சதீஷ் ஆகியோர் இணைந்து இந்த சங்கு சக்கரம் படத்தை தயாரித்துள்ளார்கள்.    குழந்தைகளை மையப்படுத்தி வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, ராஜா சின்ன ரோஜா’, ‘அஞ்சலி’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. அதிலும் பேய்ப்படங்கள் பார்ப்பது என்றாலே குழந்தைகளுக்கு ஜாலி தான். ஆனால் இதுநாள்வரை குழந்தைகளை மிரட்டிய பேய்ப்படங்கள் தான் வந்திருக்கின்றன. இந்தமுறை குழந்தைகளே பேயை மிரட்டும்  புதுமையான விதமாக வரும் டிச-29ஆம் தேதி வெளியாக உள்ள படம் தான் மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சங்கு சக்கரம்‘. இந்த சங்கு சக்கரம்’ படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியான ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தைப்போலவே இந்தப்படம் இரு...