வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

ஆ.ராசா, கனிமொழி விடுதலையை ஸ்வீட் கொடுத்து கோலாகலமாக வீட்டில் கொண்டாடிய மு.க. ஸ்டாலின்

ஆ.ராசா, கனிமொழி விடுதலையை ஸ்வீட் கொடுத்து கோலாகலமாக வீட்டில் கொண்டாடிய மு.க. ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாடினார். நாடே பெரிதும் எதிர்பார்த்த 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி வழங்கினார். இந்த தீர்ப்பை வரவேற்று அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். அப்போது அவர் கூறுகையில், திமுகவை அவமானப்படுத்தி அழிக்க போடப்பட்ட வழக்குதான் ஸ்பெக்ட்ரம். திமுக மீதான களங்கம் துடைக்கப்பட்டுவிட்டது. அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானப்படுத்தி போடப்பட்டதுதான் இந்த வழக்கு. குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு மகிழ்ச்சிக்குரிய ஒன்று. திமுக எந்த தவறும் செய்யவில்லை என்று சிறப்பு நீதிமன்றம் நிரூபித்து விட்டனர். 2ஜ...
2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை: சி.பி.ஐ. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு

2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை: சி.பி.ஐ. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது (2004-2009 மற்றும் 2009-2014)  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. இதையடுத்து, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் மீதும், 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அமலாக்கப்பிரிவும் தனியாக விசாரணை நடத்தியது. டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தன. அதன்பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர்கள், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு தரப்பு ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யு...
நாடே எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு

நாடே எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, politics, செய்திகள்
நாடே எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு நாடே மிகவும் எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி நாளை தீர்ப்பளிக்க உள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக திமுகவின் ஆ. ராசா பதவி வகித்த காலத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது என்பது சிபிஐ தொடர்ந்த வழக்குகள். இந்த வழக்கில் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இவ்வழக்கை நீதிபதி ஓ.பி. ஷைனி விசாரித்து வந்தார். இவ்வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நாளை தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி ஓ.ப...
லொள்ளுசபா ஜீவா நாயகனாக நடிக்கும் “கொம்பு”..!

லொள்ளுசபா ஜீவா நாயகனாக நடிக்கும் “கொம்பு”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
லொள்ளுசபா ஜீவா நாயகனாக நடிக்கும் “கொம்பு” ஸ்ரீ சாய் சீனிவாசா பிக்சா்ஸ் சார்பில் எம். பன்னீா் செல்வம் பி.வானதி இருவரும் கூட்டாக தயாரிக்கும் படத்தின் பெயா் தான் “கொம்பு”. லொள்ளுசபா புகழ் ஜீவா நாயகனாக நடிக்கும் இதில் திஷாபாண்டே, பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சாமிநாதன், ஈஸ்வா் சந்திரபாபு, காயத்ரி, புவிஷா, சங்கா், அஸ்மிதா, யோகிராம், இன்னும் பலா் நடிக்கின்றனா். தேவ்குரு இசையையும், சுதீப் ஒளிப்பதிவையும், கதிரேசன் படத்தொகுப்பையும், கஜினிகுபேந்தா் சண்டைபயிற்சியையும், ராதிகா நடனபயிற்சியையும், இ.கார்த்திகேயன் தயாரிப்புநிர்வாகத்தையும் புதியவரான இ. இப்ராகிம் கதை, திரைக்கதை, வசனத்தையும் கவனிக்கின்றனா். இரு இளம்பெண்களின் மா்ம மரணத்தை ஆராய்ச்சி செய்ய நாயகன் தலைமையில் ஐவா் குழு அந்த வீட்டிற்கு வருகிறது. அதன் பிறகு நடைபெறும் சம்பவங்களை கதைக் களமாக்கி நகைச்சுவையுடன், திரில்லையும் கலந்து “கொம்பு...
குஜராத் வெற்றிக்கு  பா.ஜ.,  மோடிக்கு மட்டும் இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் மாலை மரியாதை செலுத்த வேண்டும் – சிவசேனா விமர்சனம்..!

குஜராத் வெற்றிக்கு பா.ஜ., மோடிக்கு மட்டும் இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் மாலை மரியாதை செலுத்த வேண்டும் – சிவசேனா விமர்சனம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி  அண்மைக்காலமாக பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறது. குஜராத் தேர்தல் முடிவுக்கு பிறகும் தொடர்ந்து விமர்சன கணைகளை தொடுத்து வரும் சிவசேனா, குஜராத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டு இருக்கலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. கடந்த முறை 115 தொகுதிகளில் வென்ற பாரதீய ஜனதா, இம்முறை 16 தொகுதிகளை இழந்தது. அதேவேளையில், காங்கிரஸ் 2012 ஆம் ஆண்டு தேர்தலின் போது 61 தொகுதிகளில் வென்றிருந்த நிலையில், தற்போதைய தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த  நிலையில், பாரதீய ஜனதா வெற்றி குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள சிவசேனா, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக முறைமுக...
பிரதமர் மோடியை புதுமண தம்பதி விராட் கோலி-அனுஷ்கா சர்மா சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!

பிரதமர் மோடியை புதுமண தம்பதி விராட் கோலி-அனுஷ்கா சர்மா சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!

HOME SLIDER, NEWS, politics, நடிகைகள்
புதுடெல்லியில் பிரதமர் மோடியை புதுமண தம்பதி விராட் கோலி-அனுஷ்கா சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் கடந்த 11ம் தேதி இத்தாலியில் நடைபெற்றது. அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் டிசம்பர் 21 மற்றும் 26ம் தேதி நடைப்பெற உள்ளது. இந்நிலையில்  புதுடெல்லியில் பிரதமர் மோடியை புதுமண தம்பதி விராட் கோலி-அனுஷ்கா சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர். அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்....
பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீசுக்கு சிக்கல் ஏற்படுத்தும் ஜன்னல் ஓரம் பட கடன்…!

பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீசுக்கு சிக்கல் ஏற்படுத்தும் ஜன்னல் ஓரம் பட கடன்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அரவிந்த் சாமி-அமலாபால் ஜோடியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீஸ் நடிகர் விமல் புகாரால் கேள்விக்குறியதாகி உள்ளது. பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளர் முருகன் சில ஆண்டுக்கு முன் ஜன்னல் ஓரம் என்ற் படத்தை தயாரித்தார். இதில் பார்த்திபன், விதார்த் இவர்களோடு விமல் நடித்தார். அந்த பட ஷூட்டிங் நேரத்திலும், ரிலீஸ் ஆகும் போதும் விமல் தனது பெயரை வைத்து  கடன் வாங்கி கொடுத்தாராம். ஆண்டுகள் ஓடியும் கடன் அடைக்கப்படவில்லை.  அந்த கடன் வட்டியோடு வளர்ந்து நிற்கிறது. தயாரிப்பாளர் முருகன் இப்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை தயாரிக்கிறார். இதில் அரவிந்த் சாமி, அமலாபால் ஜோடி நடிக்கின்றனர். அதே நேரம் விமல் சொந்த படமாக மன்னர் வகையறா என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். வாங்கிய கடன் பட ரிலீஸ் நேரத்தில் சிக்கலான சூழலை ஏற்படுத்தும் என உணர்ந்து கடன் வாங்கி திருப்பி தராத தயாரிப்பாளர் முருகனி...
2 மாநில தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறதா பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி

2 மாநில தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறதா பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமர் மோடியை பிரகாஷ் ராஜ்  என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர்" என விமர்சித்தார். அது முதல் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் அரசுக்கு எதிராக பல்வேறு     கேள்விகளை எழுப்பி வருகிறார். இந்த நிலையில் பாரதீய ஜனதா குஜராத், மற்றும் இமாசலபிரதேசம்  ஆகிய 2 மாநிலங்களில் வெற்றி பெற்று உள்ளது.  இது குறித்து  நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அன்புள்ள பிரதம மந்திரி, வெற்றிக்கு வாழ்த்துக்கள் ... ஆனால் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார். முன்னதாக பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமரை பிரகாஷ் ராஜ் என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர் என விமர்சித்திருந்தார். பிரதமரின் நடவடிக்கைக்கு எதிராகவும், தமிழக அரசியலின் தற்போதையை ந...
குஜராத் தேர்தல் முடிவு… தம்பட்டம் அடித்த பா.ஜனதாவிற்கு மக்கள் அடித்த எச்சரிக்கை மணி – சிவசேனா விமர்சனம்

குஜராத் தேர்தல் முடிவு… தம்பட்டம் அடித்த பா.ஜனதாவிற்கு மக்கள் அடித்த எச்சரிக்கை மணி – சிவசேனா விமர்சனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
குஜராத்தில் பா.ஜனதா 99 தொகுதிகளை வென்று தொடர்ந்து 6-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பா.ஜனதாவுக்கு கடும் சவால் அளித்த காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) ஒரு தொகுதியில் வென்றது.  பாரதீய பழங்குடியினர் கட்சிக்கு 2 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என நிர்ணயம் செய்து பணியாற்றியது, ஆனால் 100 தொகுதிகளை கூட எட்டமுடியவில்லை.  இவ்விவகாரம் தொடர்பாக பிற எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. மம்தா பானர்ஜி “இப்போதைய நேரத்தில் ஒரு சமமான தீர்ப்பை வழங்கிய குஜராத் மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள். இது தற்காலிகமான மற்றும் அவமானப்படாத வெற்றியாகும், இருப்பினும் பாரதீய ஜனதாவிற்கு இது தார்மீக ரீதியிலான தோல்விதான். பொதுமக்களுக்கு நேரிட்ட அட்டூழியங்கள், அதீத கவலை மற்றும...
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட்டு பாடும் ரஜினி

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட்டு பாடும் ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகியுள்ளதால், இசை நிகழ்ச்சி மூலம் கொண்டாடி வருகிறார். மேலும் பல்வேறு பெருநகரங்களிலும் தனது இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த வகையில் தலைநகர் டெல்லியில் அவர் நடத்தவுள்ள நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பாட்டு பாட இருக்கிறார். வரும் 23-ம் தேதி (டிசம்பர் 23) அன்று என்கோர் (Encore) என்ற தலைப்பில் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்தும் கலந்துக் கொள்ள இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானை கவுரவிக்கும் வகையில் ரஜினிகாந்த் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பாடுகிறார்  ...