வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

சுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா

சுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் "திருட்டுப்பயலே 2". இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில்  ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலாய் காத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக இயக்குநர் சுசிகணேசன் திருட்டுப்பயலே 2 படத்தில் நயனா எனும் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளார்.  நயனா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். உலகமெங்கும் திருட்டுப்பயலே 2 திரைப்படம் நவம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது....
ஆர்யா நடிப்பில் ஸ்டுடியோகிரீன் தயாரிக்கும் ‘கஜினிகாந்த்’

ஆர்யா நடிப்பில் ஸ்டுடியோகிரீன் தயாரிக்கும் ‘கஜினிகாந்த்’

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோகிரீன் பட நிறுவனம் மெகா பெருட்செலவில் தயாரிக்கும் படம் ‘கஜினிகாந்த்’ இதில் ஆர்யா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சயிஷா நடிக்கிறார். சந்தோஷ் இயக்கும் இந்த படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது.  இப்படத்தை ஹர ஹர மஹா தேவகி, மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து    படங்களை இயக்கிய சந்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக “வனமகன்” சயிஷா நடிக்கிறார். மேலும் பாலமுரளி பாலு  இசையமைக்க, பல்லு அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்பை  கவனிக்க, கோபி ஆனந்த் கலைஇயக்கத்துக்கு  பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது....
வேட்டைக்காரனை ‘வாழைப்பழ’ காமெடியில்  ஏமாற்றிய ஞானமான சிங்கராஜாவும் மாயப்பூனையும்..!

வேட்டைக்காரனை ‘வாழைப்பழ’ காமெடியில் ஏமாற்றிய ஞானமான சிங்கராஜாவும் மாயப்பூனையும்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  தயாரிப்பாளர்: ஆக்ஷன் கதையெல்லாம் வேணாம்பா... த்ரில்லிங்கா பிராடு பன்ற கதை... கிளைமாக்ஸ்ல ஆடியன்சோட சேர்ந்து தியேட்டர்காரனும் ஷாக் ஆகனும்’ அப்படி ஏதாவது கதையிருந்தா இருந்தா சொல்லு வாய்ப்பு தேடுபவர்: சார் இது ஆக்ஷன் கதைன்னு சொல்ல முடியாது... ஆனா ஆக்ஷன் இருக்கும்சார்... த்ரில்லர் கதைன்னு சொல்ல முடியாது ஆனா த்ரில்லர் இருக்கும் சார்... கிளைமாக்ஸ் பயங்கர ஷாக்கா இருக்கும்சார்... தயாரிப்பாளர்: பில்டப் எல்லாம் போதும்பா... கதைய சொல்லு... நம்ம கதையோட ஹீரோ யார்னு கேட்டீங்கன்னா ஜல் ஜல்னு சத்தம் வரும் சலங்கைதான்... சார்... சிறுத்தை புலி பூனை சிங்கம், நரின்னு மிருகங்கள் வாழுற காடு தான் நம்ம படத்தோட லொகேஷன்.... ஒருநாள் சிங்கம் இரைதேட போகும்போது பெருசா ஒண்ணும் கிடைக்காம தவிச்சுது... இரைதேடப்போன சிங்கத்தை காணோம்னு அதோட குகையில குட்டி சிங்கங்களும், வாசல்ல பல நரிகளும் காத...
கோடங்கி சொல்லும்   11 கோடியில் உருவான  வாழைப்பழ கிளைமாக்ஸ்..!

கோடங்கி சொல்லும் 11 கோடியில் உருவான வாழைப்பழ கிளைமாக்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், முன்னோட்டம்
      கோடங்கி சொல்லும் 11 கோடியில் உருவான வாழைப்பழ கிளைமாக்ஸ்..! முக்கிய குறிப்பு: இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையானது... நிஜமானதாக நீங்கள் நினைத்தால் கம்பெனி... பொறுப்பு இல்லை...   நல்ல கதை வேண்டுமே என்று ஆபீசில் மண்டையை உடைத்துக் கொண்டிருந்த தயாரிப்பாளருக்கு கதவு தட்டப்படும் சத்தம் கேட்க... யெஸ் கம்மின்... உள்ளே வந்து நின்றான் ஒரு வாலிபன் கையில் ஒரு பைல்... பார்த்த உடனே ஏதோ கதை சொல்ல வந்தது தெரிந்து விட்டது... கதை சொல்ல வந்தவர்: சார் சதுரங்கவேட்டை டைப்ல ஒரு கதை தேடுறீங்கன்னு சொன்னாங்க... எங்கிட்ட ஒரு கதையிருக்கு சொல்லவா சார்... தயாரிப்பாளர்: ம்... இது ஒரு சினிமா சீட்டிங் கதை சார்... தயாரிப்பாளர்: யோவ்... சினிமாவே ஒரு சீட்டிங்தான்... அதுல என்னய்யா... சரி மேல சொல்லு... கதை சொல்ல வந்தவர்: சினிமாவையே தன் கட்டுப்பாட்டுல வ...
அன்புசெழியன் போன்றவர்கள் இல்லையென்றால் சினிமா எடுக்க முடியாது – சீமான்

அன்புசெழியன் போன்றவர்கள் இல்லையென்றால் சினிமா எடுக்க முடியாது – சீமான்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
அன்புசெழியன் போன்றவர்கள் இல்லையென்றால் சினிமா எடுக்க முடியாது - சீமான் சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை தவிர்த்து இருக்க வேண்டிய மரணம். அதனை தடுத்திருக்க வேண்டும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற துயரம் தொடரக்கூடாது. யாரையும் குறை சொல்ல முடியாது. பைனான்சியர் அன்புசெழியன் போன்றவர்கள் இல்லையென்றால் யாரும் சினிமா எடுக்க முடியாது. தன்னிடம் வந்து பணம் வாங்குங்கள் என்று அவர் கூறுவதில்லை. நாம் தான் விரும்பி பணம் வாங்குகிறோம், சாதாரண சாமானியர்களை நம்பி பல கோடி ரூபாய் கொடுக்கிறார். அரசு வங்கிகளே கடன் கொடுத்து விட்டு திருப்பி செலுத்தாதவர்களை கட்டி வைத்து அடிக்கவில்லையா?, போலீசார் அடித்தது இல்லையா?. இதுபோல் தான் கடனை கொடுத்து விட்டு அதனை கேட்கும் முறையில் கடுமை காட்டும்போது அது தன்மான இழப்பாகிறது. உயிரிழப்பு ஏற்படுகிறது. பணம் கொடுப்பவர்கள் சிலர் தான் உள்ளனர். இவர்கள் எல்லாம் பணம் கொடுப்ப...
தனுஷ் வெளியிடும் சிம்பு பட பாடல்கள்..!

தனுஷ் வெளியிடும் சிம்பு பட பாடல்கள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
கோலிவுட் திரையுலகில் சிம்புவும் தனுஷூம் நண்பர்கள் என்று கூறி கொண்டாலும் இருவரும் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்பட்டு வருகின்றனர். இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மோதி கொள்வதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்தான்இந்த நிலையில் தொழில் அளவில் போட்டியாளர்களாக இருந்தாலும் தாங்கள் உண்மையான நண்பர்கள் என்பதை தற்போது நிரூபித்துள்ளனர். ஆம், சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகும் ‘சக்க போடு போடு ராஜா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.இந்த படத்தின் பாடல்களை வெளியிட நடிகர் தனுஷ் சம்மதித்துள்ளார். இந்த தகவலை இந்த படத்தின் ஹீரோ சந்தானம் தனது டுவிட்டரில் ஒரு வீடியோ செய்தி மூலம் உறுதி செய்துள்ளார்.ஒரே படத்தில் சிம்பு, தனுஷ் இணைவது கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை வரவழைப்பது மட்டுமின்றி இருதரப்பு ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்...
டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது சசிகுமாரின் ‘கொடி வீரன்’

டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது சசிகுமாரின் ‘கொடி வீரன்’

CINI NEWS, HOME SLIDER, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  சசிகுமார் நடித்துள்ள ‘கொடி வீரன்’ படம், 7ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘கொடி வீரன்’. பூர்ணா, மகிமா நம்பியார், சனுஷா என மூன்று ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சசிகுமார், தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், போதுமான தியேட்டர்கள் கிடைக்காததால் வருகிற 30ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சசிகுமாரின் அத்தை மகனும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிர்வாகியுமான அசோக் குமார், கடந்த வாரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து , அன்புச்செழியன் தலை மறைவானார். அவர்  மீது வழக்குப்பதிவு செய...
விவேக்கின் ஜாஸ் சினிமா முறைகேடு: சத்யம் சினிமா தியேட்டர்கள் உள்பட 33 இடங்களில் வருமானவரி வேட்டை

விவேக்கின் ஜாஸ் சினிமா முறைகேடு: சத்யம் சினிமா தியேட்டர்கள் உள்பட 33 இடங்களில் வருமானவரி வேட்டை

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளை குறிவைத்து வருமானவரி துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரடி சோதனை நடத்தினர். சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயா தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். ஜாஸ் சினிமா என்கிற நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். சசிகலா உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் நடந்த சோதனையின் போது நுங்கம்பாக்கத்தில் உள்ள விவேக்கின் வீடும் தப்பவில்லை. வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமா நிறுவனத்திலும் சோதனை நடந்தது. சத்யம் குழுமத்திடமிருந்து ஜாஸ் சினிமா நிறுவனத்தை விவேக் வாங்கி இருந்தார். அதற்கு முன்னர் லக்ஸ் சினிமா என்ற பெயரில் இயங்கி வந்த அந்த நிறுவனத்தின் பெயர் விவேக்கிற்கு கைமாறிய பின்னரே ஜாஸ் சினிமா என்று மாற்றப்பட்டது. இதனை வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அப்போது நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் சிக்கி இருப்ப...
மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஐஸ்வர்யா ராஜேஷ் ‘காக்கா முட்டை’ படத்தில் பிரபலமானார். இப்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் தற்போது வடசென்னை, துருவ நட்சத்திரம், லக்‌ஷ்மி, இது வேதாளம் சொல்லும் கதை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் தனது சினிமா அனுபவம் பற்றி அளித்த பேட்டி.... “எனக்கு கனவு கதாபாத்திரம் என்று எதுவும் இல்லை. எனக்கு அமையும் பாத்திரங்கள் அனைத்தையும் கனவு பாத்திரங்களாகவே நினைக்கிறேன். புது படங்களை ஒப்புக்கொண்டு முதலில் சில நாட்கள் நடிக்கச் செல்லும் போது எனக்கு பயம் ஏற்படும். தேவையான முகபாவங்களை கொடுக்க முடியுமா என்ற எண்ணம் தான் அதற்கு காரணம். என்றாலும் சில நாட்கள் நடித்த பிறகு அந்த பயம் போய்விடும். மணிரத்னம் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. விரைவில் அது நிறைவேற இருக்கிறது. அதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தி பட உலகில் கரன்ஜோஹர் இயக்கத்தில் நடிக்க...
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் 2-ந்தேதி மனு தாக்கல்

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் 2-ந்தேதி மனு தாக்கல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் போட்டியிடுவது உறுதி என்று அவரது ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கனவே கூறினார். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தினகரன் நேற்று தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரத்தை எப்படி எதிர்கொள்வது எப்போது வேட்பு மனு தாக்கல் செய்வது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் தினகரன் அணி மாவட்ட செயலாளர் கள் கூட்டம் இன்று மாலை திருச்சியில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தினகரன் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டார். சென்னையை அடுத்துள்ள சிங்கபெருமாள் ...