குஜராத் வெற்றிக்கு பா.ஜ., மோடிக்கு மட்டும் இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் மாலை மரியாதை செலுத்த வேண்டும் – சிவசேனா விமர்சனம்..!
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி அண்மைக்காலமாக பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறது. குஜராத் தேர்தல் முடிவுக்கு பிறகும் தொடர்ந்து விமர்சன கணைகளை தொடுத்து வரும் சிவசேனா, குஜராத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டு இருக்கலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. கடந்த முறை 115 தொகுதிகளில் வென்ற பாரதீய ஜனதா, இம்முறை 16 தொகுதிகளை இழந்தது. அதேவேளையில், காங்கிரஸ் 2012 ஆம் ஆண்டு தேர்தலின் போது 61 தொகுதிகளில் வென்றிருந்த நிலையில், தற்போதைய தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், பாரதீய ஜனதா வெற்றி குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள சிவசேனா, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக முறைமுக...








