புதன்கிழமை, ஜூன் 10
Shadow

HOME SLIDER

குஜராத் வெற்றிக்கு  பா.ஜ.,  மோடிக்கு மட்டும் இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் மாலை மரியாதை செலுத்த வேண்டும் – சிவசேனா விமர்சனம்..!

குஜராத் வெற்றிக்கு பா.ஜ., மோடிக்கு மட்டும் இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் மாலை மரியாதை செலுத்த வேண்டும் – சிவசேனா விமர்சனம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி  அண்மைக்காலமாக பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறது. குஜராத் தேர்தல் முடிவுக்கு பிறகும் தொடர்ந்து விமர்சன கணைகளை தொடுத்து வரும் சிவசேனா, குஜராத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டு இருக்கலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. கடந்த முறை 115 தொகுதிகளில் வென்ற பாரதீய ஜனதா, இம்முறை 16 தொகுதிகளை இழந்தது. அதேவேளையில், காங்கிரஸ் 2012 ஆம் ஆண்டு தேர்தலின் போது 61 தொகுதிகளில் வென்றிருந்த நிலையில், தற்போதைய தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த  நிலையில், பாரதீய ஜனதா வெற்றி குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள சிவசேனா, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக முறைமுக...
பிரதமர் மோடியை புதுமண தம்பதி விராட் கோலி-அனுஷ்கா சர்மா சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!

பிரதமர் மோடியை புதுமண தம்பதி விராட் கோலி-அனுஷ்கா சர்மா சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!

HOME SLIDER, NEWS, politics, நடிகைகள்
புதுடெல்லியில் பிரதமர் மோடியை புதுமண தம்பதி விராட் கோலி-அனுஷ்கா சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் கடந்த 11ம் தேதி இத்தாலியில் நடைபெற்றது. அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் டிசம்பர் 21 மற்றும் 26ம் தேதி நடைப்பெற உள்ளது. இந்நிலையில்  புதுடெல்லியில் பிரதமர் மோடியை புதுமண தம்பதி விராட் கோலி-அனுஷ்கா சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர். அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்....
பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீசுக்கு சிக்கல் ஏற்படுத்தும் ஜன்னல் ஓரம் பட கடன்…!

பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீசுக்கு சிக்கல் ஏற்படுத்தும் ஜன்னல் ஓரம் பட கடன்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அரவிந்த் சாமி-அமலாபால் ஜோடியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீஸ் நடிகர் விமல் புகாரால் கேள்விக்குறியதாகி உள்ளது. பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளர் முருகன் சில ஆண்டுக்கு முன் ஜன்னல் ஓரம் என்ற் படத்தை தயாரித்தார். இதில் பார்த்திபன், விதார்த் இவர்களோடு விமல் நடித்தார். அந்த பட ஷூட்டிங் நேரத்திலும், ரிலீஸ் ஆகும் போதும் விமல் தனது பெயரை வைத்து  கடன் வாங்கி கொடுத்தாராம். ஆண்டுகள் ஓடியும் கடன் அடைக்கப்படவில்லை.  அந்த கடன் வட்டியோடு வளர்ந்து நிற்கிறது. தயாரிப்பாளர் முருகன் இப்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை தயாரிக்கிறார். இதில் அரவிந்த் சாமி, அமலாபால் ஜோடி நடிக்கின்றனர். அதே நேரம் விமல் சொந்த படமாக மன்னர் வகையறா என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். வாங்கிய கடன் பட ரிலீஸ் நேரத்தில் சிக்கலான சூழலை ஏற்படுத்தும் என உணர்ந்து கடன் வாங்கி திருப்பி தராத தயாரிப்பாளர் முருகனி...
2 மாநில தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறதா பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி

2 மாநில தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறதா பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமர் மோடியை பிரகாஷ் ராஜ்  என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர்" என விமர்சித்தார். அது முதல் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் அரசுக்கு எதிராக பல்வேறு     கேள்விகளை எழுப்பி வருகிறார். இந்த நிலையில் பாரதீய ஜனதா குஜராத், மற்றும் இமாசலபிரதேசம்  ஆகிய 2 மாநிலங்களில் வெற்றி பெற்று உள்ளது.  இது குறித்து  நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அன்புள்ள பிரதம மந்திரி, வெற்றிக்கு வாழ்த்துக்கள் ... ஆனால் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார். முன்னதாக பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமரை பிரகாஷ் ராஜ் என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர் என விமர்சித்திருந்தார். பிரதமரின் நடவடிக்கைக்கு எதிராகவும், தமிழக அரசியலின் தற்போதையை ந...
குஜராத் தேர்தல் முடிவு… தம்பட்டம் அடித்த பா.ஜனதாவிற்கு மக்கள் அடித்த எச்சரிக்கை மணி – சிவசேனா விமர்சனம்

குஜராத் தேர்தல் முடிவு… தம்பட்டம் அடித்த பா.ஜனதாவிற்கு மக்கள் அடித்த எச்சரிக்கை மணி – சிவசேனா விமர்சனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
குஜராத்தில் பா.ஜனதா 99 தொகுதிகளை வென்று தொடர்ந்து 6-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பா.ஜனதாவுக்கு கடும் சவால் அளித்த காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) ஒரு தொகுதியில் வென்றது.  பாரதீய பழங்குடியினர் கட்சிக்கு 2 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என நிர்ணயம் செய்து பணியாற்றியது, ஆனால் 100 தொகுதிகளை கூட எட்டமுடியவில்லை.  இவ்விவகாரம் தொடர்பாக பிற எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. மம்தா பானர்ஜி “இப்போதைய நேரத்தில் ஒரு சமமான தீர்ப்பை வழங்கிய குஜராத் மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள். இது தற்காலிகமான மற்றும் அவமானப்படாத வெற்றியாகும், இருப்பினும் பாரதீய ஜனதாவிற்கு இது தார்மீக ரீதியிலான தோல்விதான். பொதுமக்களுக்கு நேரிட்ட அட்டூழியங்கள், அதீத கவலை மற்றும...
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட்டு பாடும் ரஜினி

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட்டு பாடும் ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகியுள்ளதால், இசை நிகழ்ச்சி மூலம் கொண்டாடி வருகிறார். மேலும் பல்வேறு பெருநகரங்களிலும் தனது இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த வகையில் தலைநகர் டெல்லியில் அவர் நடத்தவுள்ள நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பாட்டு பாட இருக்கிறார். வரும் 23-ம் தேதி (டிசம்பர் 23) அன்று என்கோர் (Encore) என்ற தலைப்பில் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்தும் கலந்துக் கொள்ள இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானை கவுரவிக்கும் வகையில் ரஜினிகாந்த் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பாடுகிறார்  ...
நடிப்பு பயிற்சியில் கலந்துக் கொண்ட சிம்பு..!

நடிப்பு பயிற்சியில் கலந்துக் கொண்ட சிம்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் பல இளம் இயக்குநர்களுக்கு முன்மாதிரியாக திகழ்பவர் இயக்குநர் மணிரத்னம். அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. சமீபத்தில் கார்த்தியை வைத்து அவர் இயக்கிய `காற்று வெளியிடை' ரிலீசாகி ஓரளவுக்கு வரவேற்பையே பெற்றது. இந்நிலையில், மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிசியாக இறங்கி இருக்கிறார். அதன்படி அவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் பிரமாண்டதாக தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திற்கு  சிம்பு சென்றிருக்கிறார். அங்கு, படத்திற்கான கதையை படித்து பார்த்திருக்கிறார். மேலும் நடிப்பு பயிற்சியிலும் கலந்துக் கொண்டிருக்கிறார். சிம்பு இசையி...
வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதில் உலகிலேயே இந்தியர்கள் முதலிடம்: ஐ.நா அறிக்கை

வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதில் உலகிலேயே இந்தியர்கள் முதலிடம்: ஐ.நா அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2017-ம் ஆண்டுக்கான சர்வதேச இடம்பெயர்வோர் அறிக்கையை ஐ.நா வெளியிட்டுள்ளது. இதில் 1.65 கோடி பேருடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதில் சரிபாதி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் உள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டை ஒப்பிடும் போது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. வளைகுடா நாடான ஐக்கிய அமீரகத்தில் மட்டும் சுமார் 33 லட்சம் இந்தியர்கள் இருக்கின்றனர். இது கடந்த 2000-ம் ஆண்டில் 9.7 லட்சமாக இருந்தது. அமெரிக்காவில் 10 லட்சமாக இருந்த எண்ணிக்கை தற்போது 23 லட்சமாக உயர்ந்துள்ளது. சவூதி அரேபியாவில் 22 லட்சம் பேரும், ஓமனில் 12 லட்சம் பேரும், குவைத்தில் 11 லட்சம் பேர் என வளைகுடா நாடுகளில் மட்டும் மொத்தம் 89 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் 13 லட்சம் இந்தியர்களும், கனடாவில் 6 ல...
ஜெ.,வின் வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை: விவேக் ஜெயராமன்

ஜெ.,வின் வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை: விவேக் ஜெயராமன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இளவரசியின் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் அவருடைய மகள் என்றும், அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்றும் சிலர் அவதூறுகளை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் ஆனபிறகும் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் சிலர் தங்கள்  விருப்பத்திற்கு கதை கற்பனைகளை கிளப்பிவிட்டு ஒரு மாபெரும் தலைவியின் புகழுக்கு களங்கம் கற்பிப்பது கொஞ்சமும் சகிக்க முடியாத மனசாட்சியற்ற செயல். வெற்று வார்த்தைகளாக சிலர் பேசும் இத்தகைய அவதூறுகளை ஊடக தர்மத்துடன் நிறைய ஊடகங்கள் வெளியிடாமல் தவிர்த்து வந்தாலும் சில ஊடகங்கள் பரபரப்புக்காக இதனை வெளியிடுவது வேதனை அளிக்கிறது. அவருக்கென்று யார் இருந்திருந்தாலும் அவர் மறைத்திருக்க வாய்ப்பே இல்லை. எவ்வித ஒளிவு மறைவு...
புயல்-மழை நிவாரணம்: பிரதமர் மோடியிடம் முதல்வர் அளித்த கோரிக்கை மனு

புயல்-மழை நிவாரணம்: பிரதமர் மோடியிடம் முதல்வர் அளித்த கோரிக்கை மனு

HOME SLIDER, NEWS, politics
ஒக்கி புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், புயல் மற்றும் பருவ மழையினால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கீழ்க்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சமர்ப்பித்தார்: 1. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 747 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும்; 2. தற்போது பேரிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும். குறிப்பாக, உயிரிழப்பிற்கு ரூபாய் 4 லட்சத்திலிருந்து ரூபாய் 10 லட்சமாகவும், ஊனமடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தவும், வாழை மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 13,500/-லிருந்து ரூபாய் 1,25,000/- ஆகவும், ரப்பர் மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18,000/-லிருந்து ரூபாய் 2,50,000/- ஆகவும் உயர்த்தப்பட வேண்டும்; 3. புயல், காற்று மற்றும் மழையி...