திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கூட்டணிக் கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்து விருந்து கொடுத்து குஷி படுத்திய பாஜக..!

 

எம்பி தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே டெல்லி அசோகா நட்சத்திர ஹோட்டலில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து விருந்து அளித்தார்.

இந்த விருந்தில் தமிழகத்திலிருந்து முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேமுதிகவின் பிரமேலதா விஜயகாந்த், சுதீஷ், பாமகவின் அன்புமணி, ஜி.கே.வாசன், நடிகர் சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மக்களவைத் தேர்தலுக்காக ஏழு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப் பதிவு கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவடைந்தது.

ஏழு கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்ததற்கு பிறகு வெளியான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தாலும் , மாநில கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன என கூறியிருக்கிறார்கள்.

அதோடு தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23ம் தேதி காங்கிரஸ் கட்சி தனது கூட்டணிக் கட்சி தலைவர்களை டில்லியில் விருந்துக்கு அழைத்து உள்ளது.

இந்த சூழலில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு 2 நாள் முன்பே தனது கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அழைத்து விருந்து கொடுத்து உள்ளது பாஜக.

372 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன