நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் விஜயகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்தனர். மேலும் இந்த சந்திப்பின் போது, தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்கியராஜ், பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசிரி.கணேஷ், பொருளாளர் பிரசாந்த், துணை தலைவர்கள் குட்டி பத்தமினி, உதயா மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோர் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐசரி கனேஷ் பேட்டி:
நடிகர் விஜயகாந்த்தை சந்தித்து எங்கள் அணிக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இன்னும் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.
ராதாரவி மட்டுமின்றி எங்கள் அணிக்கு எல்லாருடைய ஆதரவும் உள்ளது என்றார்.
இந்த தேர்தலில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்றும், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி விஷால் அணியினர் எதுவும் செய்யவில்லை என்பதால் தான் நாங்கள் போட்டியிடுகிறோம் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
ரமேஷ் கண்ணா மனு நிராகரிக்கப்பட்டது குறித்து மனு அளித்துள்ளோம் நாளை அதற்கான முடிவு தெரிய வரும்.
பின்னர் பேசிய பாக்யராஜ் கூறும்போது, விஜயகாந்தை சந்தித்து பேசினோம். மேலும் அவர் தெளிவாக எங்களை சந்தித்து பேசினார். அவருடைய ஆதரவை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடக நடிகர்கள் கஷ்டத்தில் உள்ளோம் என்று கேட்கும் போது, தனிப்பட்ட முறையில் என்னுடைய உதவியை செய்வேன் என்று கூறினேன். மேலும் தேர்தல் முடிந்த பின் நலத்திட்டங்கள் செய்வோம் என்று தான் தெரிவித்தேன். ஆனால் தேர்தலுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். இதுகுறித்து தவறான குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார்.