செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

கமல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ரூ.1½ கோடி நன்கொடை !

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளின் கூட்டம் மாங்காட்டில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் நிர்வாகிகள் அனைவரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கூறும்போது, “கட்சியில் நான் செய்யாத எதையும் உங்களை செய்ய அறிவுறுத்த மாட்டேன். அந்த வகையில் எனது வருமானத்தில் இருந்து கட்சிக்காக ரூ.1½ கோடியை நன்கொடையாக வழங்குகிறேன்” என்று தெரிவித்தார்.

இதனை கட்சி நிர்வாகிகள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹான் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார். உங்களால் முடிந்த தொகையை கட்சிக்கு நன்கொடையாக வழங்குங்கள்.

அது சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை என்றார். 100 ரூபாய் சம்பாதிக்கும் நபராக இருந்தால் அதில் ஒரு ரூபாயை அளியுங்கள் என்றும் கமல்ஹாசன், நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.

கட்சி வளர்ச்சிக்காக விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 

105 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன