சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: திமுக

திமுகவில் மீண்டும் மூத்தவர்களே ராஜ்யசபை எம்பி ஆகிறார்கள்… இளைஞர் அணிக்கு வாய்ப்பு இல்லை!

திமுகவில் மீண்டும் மூத்தவர்களே ராஜ்யசபை எம்பி ஆகிறார்கள்… இளைஞர் அணிக்கு வாய்ப்பு இல்லை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திமுகவில் மீண்டும் மூத்தவர்களே ராஜ்யசபை எம்பி ஆகிறார்கள்... இளைஞர் அணிக்கு வாய்ப்பு இல்லை! தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக கடந்த சில நாட்களாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருந்தது. அதிமுக கூட்டணியில் எப்படியும் ஒரு எம்பி பதவியை பெற தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பல நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோதிலும், அதிமுக அதற்கு இணங்கவில்லை. திமுக கூட்டணியில் இந்த பிரச்சனையே இல்லை. இருந்த போதும் சீனியர்களை ஒதுக்கிவிட்டு இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளார். ஏற்கனவே மாநிலங்களவை எம்பி இருந்து வரும் திருச்சி சிவா மற்றும் என் ஆர் இளங்கோ ஆகியோர்களின் ப...
மீண்டும் வைகோவின் சிம்ம குரல் ஒலிக்கப் போகும் மாநிலங்களவை… மதிமுகவினர் உற்சாகம்..!

மீண்டும் வைகோவின் சிம்ம குரல் ஒலிக்கப் போகும் மாநிலங்களவை… மதிமுகவினர் உற்சாகம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மீண்டும் வைகோவின் சிம்ம குரல் ஒலிக்கப் போகும் மாநிலங்களவை... மதிமுகவினர் உற்சாகம்..! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த நிலையில் திடீரென அவர் மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு வெளிவந்தது. இந்த தீர்ப்பில் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்ற கேள்வி எழுந்தது இந்த சூழலில் இன்று வேட்புமனு பரிசீலிக்கப்பட்டபோது வைகோவின் வேட்புமனு தேர்தல் அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து வைகோ மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகி கர்ஜிப்பது உறுதியாகிவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் வைகோவின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்கப்போவதால் அவரது கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று பேட்டியளித்த வைகோ, தனது ராஜ்யசபா எம்பி சம்பளம் முழுவதையும் தனது கட்சியின் கணக்கில் வர...
வைகோ -அன்புமணி உட்பட 6 பேர் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு..!

வைகோ -அன்புமணி உட்பட 6 பேர் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வைகோ -அன்புமணி உட்பட 6 பேர் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு..! பாராளுமன்ற மேல் சபையில் தமிழக எம்.பி.க் கள் 6 பேர் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 6 பாராளுமன்ற மேல்- சபை எம்.பி.க்களை தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்ய வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும். அ.தி.மு.க. வேட்பாளராக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளரான வேலூரை சேர்ந்த முகமது ஜான், மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. தோழமை கட்சியான பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் பேட்டியி...
திமுகவில் அப்பா ஸ்டாலின் வகித்த பதவியை அடைந்த மகன் உதயநிதி..!

திமுகவில் அப்பா ஸ்டாலின் வகித்த பதவியை அடைந்த மகன் உதயநிதி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுகவில் அப்பா ஸ்டாலின் வகித்த பதவியை அடைந்த மகன் உதயநிதி..! திமுகவின் புதிய இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் தி.மு.கவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்படுவார் என நீண்டகாலமாகவே பேச்சுகள் அடிபட்டுவந்த நிலையில், இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவியை இதுவரை வகித்து வந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் தேர்தல் முடிவுக்கு பின் திடீரென பதவியில் இருந்து விலகினார். அதையடுத்து அவர் பதவிக்கு உதயநிதி நியமிக்க படலாம் என்ற கருத்து நிலவியது. இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் அப்பா ஸ்டாலின் வகித்து வந்த பதவியை மகன் உதயநிதி ஸ்டாலின் பெற்று இருக்கிறார். த...
இடைத்தேர்தலில் உதயநிதி  போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்- திருநாவுக்கரசர்

இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்- திருநாவுக்கரசர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்- திருநாவுக்கரசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி தொகுதி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என கே.என்.நேரு பேசியது அவருடைய சொந்த கருத்து. கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான இடங்கள் பங்கீடு குறித்து கட்சிகளின் தலைமைகள் தான் பேசி முடிவு செய்யும். உள்ளாட்சி, சட்டப் பேரவை தேர்தல்களிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும். ஆனால் தோற்றுவிடுவோம் என்ற பயம் இருப்பதால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துமா? என்பது சந்தேகமே. பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றேன் என்று நான் எங்கும் கூறவில்லை. என்னுடைய வெற்றிக்கு தி.மு.க- ...
தினகரனின் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு மஞ்சள் சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்..!

தினகரனின் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு மஞ்சள் சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தினகரனுடன் மோதல் ஏற்பட்டதால் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார். தினகரனின் வலது கரமாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திடீரென தினகரனை விமர்சிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இந்த முட்டல் மோதல் உச்சகட்டத்தை அடைந்ததால் தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து நீக்கப்படுவார் என தினகரன் அறிவித்தார். இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய திட்டமிட்டுள்ளார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அதற்கு பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும், ஓ.பி.எஸ் தரப்பில் எதிர்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திடீரென திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இதற்கு முன்பே தங்க தமிழ்செல்வனை அமமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக தினகரன் அறிவித்திருந்தார். இதற்கிடையில் அமமுகவில் இருந்து வெளியேறிய செந...
மேல்சபை எம்பி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு..!

மேல்சபை எம்பி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மேல்சபை எம்பி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு..! தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 1ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. ஜூலை 8ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வேட்பு மனு பரிசீலனை 9 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப் பெற ஜூலை 11-ஆம் தேதி கடைசி நாள். ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இருந்து கனிமொழி (திமுக), அதிமுகவைச் சேர்ந்த அருணன், மைத்ரேயன், லஷ்மணன், இரத்னவேல் , கம்யூனிஸ்ட் ராஜா(அதிமுக ஆதரவு) ஆகியோரின் பதவி காலம் முடிவடைவதால் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது உள்ள சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 3 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெற முடியு...
திமுக எம்.பி.க்கள் தமிழ் வாழ்க கோஷம் … வந்தே மாதரம் கோஷம் போட்ட அதிமுக எம்.பி… பதவி ஏற்றதும் பரபரப்பு…!

திமுக எம்.பி.க்கள் தமிழ் வாழ்க கோஷம் … வந்தே மாதரம் கோஷம் போட்ட அதிமுக எம்.பி… பதவி ஏற்றதும் பரபரப்பு…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழ் வாழ்க’ என்று கூறி பதவியேற்ற திமுக எம்.பி.க்களுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் கோஷம்..! சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் நேற்று பதவி ஏற்றனர். 313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில் மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாக இன்று பதவி ஏற்றனர். புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் தமிழில் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து சில மாநில எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அதன்பிறகு தமிழக எம்.பி.க்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். வழக்கமாக எம்.பி.க்கள் பதவி ஏற்கும்போது, ‘உளமாற உறுதி கூறுகிறேன்...’ என்று கூறி முடிப்பார்கள். அதன்பிறகு பாராளுமன்ற பதிவேட்டில் கையெழுத்திட்டு அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுவார்கள். ஆனால், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் இன்று பாராளுமன்றத்தில் பதவி ஏற்று முடித்ததும், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களின் பெயர்களை சொல்லி வாழ்க என்று குறிப்பிட்டனர். ...
திமுக தோல்விக்கான காரணத்தை ஆராய கமிட்டி அமைத்த ஸ்டாலின்..!

திமுக தோல்விக்கான காரணத்தை ஆராய கமிட்டி அமைத்த ஸ்டாலின்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக தோல்விக்கான காரணத்தை ஆராய கமிட்டி அமைத்த ஸ்டாலின்..! சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளில் அடைந்த தோல்வி குறித்து ஆய்வு செய்ய திமுக குழு ஒன்றை அமைத்துள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அபாரமாக வெற்றி பெற்றாலும் 22 தொகுதி இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 9 தொகுதிகளை இழந்ததால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனது. இதனால் திமுக ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. திமுக வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 9 தொகுதிகளில் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராய திமுக தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவுக்கு தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையின் கீழ் மொத்தம்...
தமிழகம் கடும் எதிர்ப்பு “இந்தி மொழி கட்டாயம் இல்லை” 3-வது மொழி பாடத்தை மாணவர்களே தேர்வு செய்துகொள்ள மத்திய அரசு திருத்தம்..!

தமிழகம் கடும் எதிர்ப்பு “இந்தி மொழி கட்டாயம் இல்லை” 3-வது மொழி பாடத்தை மாணவர்களே தேர்வு செய்துகொள்ள மத்திய அரசு திருத்தம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தி கட்டாயமில்லை தமிழகத்தின் எதிர்ப்பால் திருத்தம் செய்த மத்திய அரசு. புதிய கல்வி கொள்கையை வகுப்பதற்காக ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் மத்திய அரசு நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு அளித்த அறிக்கையில் மும்மொழி கொள்கை, வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் பள்ளி கல்வியை மாற்றி அமைப்பது, தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. இந்தியாவில் மும்மொழி கொள்கை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், அதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களில் அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்றும், இந்த நடைமுறை 6-ம் வகுப்பில் இருந்து தொடங்கவேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநில மொழியையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என...