Tag: Surya
நீட் விஷயத்தில் சூர்யாவை கேள்வி கேட்டு பொய் பேசும் பாண்டேவை செருப்பால் அடிப்பேன் என ஆவேசமாகிறார் சேவியர்!
https://youtu.be/Ktc2ZqCuVeM
நடிகர்களுக்கு எத்தனை கோடி சம்பளம் கொடுத்தால் உங்களுக்கென்ன பாரதிராஜா ஆவேசம்
https://youtu.be/y9y_7nDdMmM
அதிகார அமைப்புகளின் அத்துமீறலை இனியும் அனுமதிக்க கூடாது – சூர்யா ஆவேசம்
"'அதிகார அத்துமீறல்' முடிவுக்கு வரவேண்டும்!
'மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது' என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில், இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின் 'லாக்கப் அத்துமீறல்' காவல் துறையின் மாண்பை குறைக்கும் செயல். 'இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம்' என்று கடந்து செல்ல முடியாது.
போலீஸாரால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து, 'நலமாக இருப்பதாக' சான்று அளித்திருக்கிறார்.
நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட், பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பரிசோதிக்காமல், 'இயந்திர கதியில்' சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும் முறையாக நடக்...
படம் அல்ல பாடம் – பொன்மகள் வந்தாள் கோடங்கி விமர்சனம்
CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
தாமதமாக வரும் நீதியும் அநீதிதான் என்று ஒற்றை வரியை மிகுந்த வலியோடு உணர்வு ரீதியாக சொல்லி இருக்கிற படம் தான் ஜோதிகா நடிப்பில் டிஜிட்டலில் வெளியான பொன்மகள் வந்தாள்.
இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியில் திடீர் திடீரென பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள். அப்படி ஒரு குழந்தையை கடத்த முயன்ற பெண்ணை இருவர் தடுக்க வருகிறார்கள். அவர்களை அந்த பெண் சுட்டுக்கொலை செய்கிறார். அந்த கொலையாளியை பிடிக்கும் போது போலீசார் அந்த பெண்ணை என்கவுண்டர் செய்கிறார்கள். அதோடு அந்த வழக்கு முடிக்கப்படுகிறது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்ட அந்த என்கவுண்டர் வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுக்கிறார் வக்கீல் வெண்பாவான ஜோதிகா. அவருக்கு உதவியாக பாக்யராஜ்.
அதில் அவர் வெற்றி பெற்றாரா...? என்கவுண்டர் செய்யப்பட்ட பெண் யார்? அந்த பெண்ணால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆட்கள் யார்? பாக்யராஜுக்கு வெண்பா யார்...
நடு வானில் பாடல்… என் 20 வருட சினிமாவில் இதுதான் பெஸ்ட் “சூரரைப் போற்று” சூர்யா நெகிழ்ச்சி!
70 குழந்தைகளுடன் நடுவானில் வெளியிடப்பட்ட 'சூரரைப் போற்று' படத்தின் ஒரு பாடல்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் 'சூரரைப் போற்று' படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களில் ஒன்றான 'வெய்யோன்சில்லி' என்று தொடங்கும் பாடல் நடுவானில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் மற்றும் சூர்யா இருவரும் வெளியிட்டனர்.
இதுகுறித்து நடிகர் சூர்யா கூறியதாவது :-
எனது 20 வருட சினிமாவில் இந்த படத்தை தான் முக்கியமாக கருதுகிறேன். இப்படம் சிறப்பாக வருவதற்காக இயக்குநர் சுதா 10 வருடங்கள் உழைத்திருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல.
மேலும், சுமார் 30 நிமிட காட்சிகள் விமானத்தில் எடுக்கப்பட்டது. அதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனதிற்கு மட்டும் நன்றி கூற முடியாது. படப்பிடிப்பின் போது எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஒவ்வொரு குழுவ...
சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?!
சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?!
லைகா தயாரிப்பில் சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'காப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளது
இந்த படத்தின் முதல் பாடல் 'சிறுக்கி' என்று தொடங்குகிறது.
இந்த பாடலை விஜய்
டிவி புகழ் செந்தில் கணேஷ், ரமணி அம்மாள் பாடியுள்ளனர், ஞானகரவேல் இந்த பாடலை எழுதியுள்ளார்.
இரண்டாவது பாடல் 'விண்ணில் விண்மீன்' என்று தொடங்குகிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மகள் நிகிதா ஹாரீஸ் பாடியுள்ளார். இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார்
மூன்றாவது பாடல் 'ஹே ஹமிகோ' என்று தொடங்குகிறது. லெஸ்லி ...
ராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..!
ராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..!
நடிகர் சூர்யா ‘என்ஜிகே ‘ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துவருகிறார்.
சமீபத்தில் வெளிவந்த காப்பான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் , நடிகை சாய்ஷா மற்றும் அவரது கணவர் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதில் மோகன்லால் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு அறிவிப்பை பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி நாளை ஜூன் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
சூர்யா படத்தில் இணையும் ரஜினி நண்பர்..!
சூர்யா படத்தில் இணையும் ரஜினி நண்பர்..!
சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் சூரைப் போற்று.
இறுதி சுற்று படத்திற்கு பிறகு சுதா இயக்கும் இந்த படம் வெற்றி பெற்ற ஒரு விமான நிறுவன தொழிலதிபர் பற்றிய கதை என்றார்கள்.
படு வேகமாக வளர்ந்து வரும் "சூரரை போற்று” திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்பாபு இணையவுள்ளதாக தெரிகிறது.
மோகன் பாபு தெலுங்கு சினிமா உலகில் 1970-களிலிருந்து பல வெற்றி படங்களில் நடித்தவர் மோகன் பாபு....
சூர்யாவின் மிக உயரமான என்.ஜி.கே. கட் அவுட் அனுமதி இல்லாததால் அகற்ற உத்தரவு
சூர்யாவின் மிக உயரமான என்.ஜி.கே. கட் அவுட் அனுமதி இல்லாததால் அகற்ற உத்தரவு
இந்தியாவிலேயே மிக உயரமான கட் அவுட் நடிகர் சூர்யாவுக்கு "என்.ஜி.கே." படத்திற்காக வைத்தார்கள்.
திருவள்ளூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் திருத்தணியில் இந்த கட் அவுட் வைத்தார்கள். 220 அடி உயரமாக வைக்கப்பட்ட இந்த கட் அவுட் நேற்று முழுக்க டிரண்டிங்கில் வைரலாகியது.
இந்த நிலையில் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த கட் அவுட் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அந்த கட் அவுட்டை அகற்ற உத்தரவிட்டார்கள்.
இதையடுத்து சூர்யா ரசிகர்கள் சோகமடைந்தார்கள்....

