வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: Surya

ஜெய்பீமை போல் கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்!

ஜெய்பீமை போல் கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழில் இயக்குனர் செல்வராகன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமசுடன் இணைந்து 'வாசி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணு ஜி.ராகவ் இயக்கியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இருவரும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'வாசி' திரைப்படத்தை கீர்த்தி சுரேசின் அக்கா தன்னுடைய ரேவதி கலாமந்திர் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் போலவுள்ளது என ரசிகர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்....
எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியானது!

எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் இன்று(18.02.2022) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் சரியாக 6 மணிக்கு வெளியானது. இந்த டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்....
சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். பாண்டிராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிப்ரவரி 4-ஆம் தேதி இப்படம் ரிலீஸாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால், 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், படக்குழுவினர் ரிலீஸ் தேதியை மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் 17 அல்லது 18 ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் வெளியாகும் என்ற...
நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை அள்ளி குவித்த ஜெய்பீம்!

நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை அள்ளி குவித்த ஜெய்பீம்!

Uncategorized
நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை அள்ளி குவித்த ஜெய்பீம்! டி.ஜே. ஞானவேல் இயக்கித்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து அனைவரின் மத்தியில் பெரிதும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ஜெய்பீம். 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. நேரடியாக ஓடிடி-யில் வெளியான இந்த திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படம் சில தினங்களுக்கு முன்பு ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு 9-வது நொய்டா சர்வதேச திரைப்பட விழா 2022-இல் மூன்று விருதுகளை அள்ளி குத்துள்ளது. சிறந்த படத்திற்காக ஒரு விருதும், சிறந்த நடிகருகான ஒரு விருதை நடிகர் சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான ஒரு விருதை நடிகை லிஜிமோல் ஜோஸுக்கும் கிடைத்துள்ளது....
ஆஸ்கர் பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம்!

ஆஸ்கர் பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஆஸ்கர் பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம்! உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. பல நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கும் படங்களுக்கு விருது வழங்கி ஆஸ்கர் கௌரவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு பல படங்கள் போட்டியிட்டு அதில் சில படங்களே தேர்ந்தெடுக்கப்படும். டி.ஜே. ஞானவேல் இயக்கித்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து அனைவரின் மத்தியில் பெரிதும் வெற்றிப்பெற்ற ஜெய்பீம் திரைப்படம், 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இப்பட்டியலில் உலகளவில் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 276 படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், சூர்யா...
இணையத்தில் வைரல் ஆன சூர்யா-ஜோதிகா பொங்கல் கொண்டாட்ட படம்!

இணையத்தில் வைரல் ஆன சூர்யா-ஜோதிகா பொங்கல் கொண்டாட்ட படம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  சூர்யா ஜோதிகாவின் பொங்கல் கொண்டாட்ட படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜெய் பீம் சர்ச்சைகளுக்கு பின் எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்திருக்கும் சூர்யா தனது வீட்டில் காதல் மனைவி ஜோதிகாவுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். அந்த படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூர்யாவிற்கு ஆதரவாக துணை நிற்கும் ரசிகர்கள்!

சூர்யாவிற்கு ஆதரவாக துணை நிற்கும் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவிற்கு ஆதரவாக துணை நிற்கும் ரசிகர்கள்! ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர். இதனிடையே, ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்கிற போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் காட்டப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததோடு, நடிகர் சூர்யாவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பி இருந்தார். இதற்கு சூர்யாவும் அறிக்கை வாயிலாக பதிலளித்தார். இந்நிலையில், 'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்...
யாரையும் அவமதிக்கவில்லை – சூர்யா அறிக்கை!

யாரையும் அவமதிக்கவில்லை – சூர்யா அறிக்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
யாரையும் அவமதிக்கவில்லை - சூர்யா அறிக்கை! ‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நீதிபதி சந்துரு வக்கீலாக இருந்த போது நடத்திய ஒரு வழக்கில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது? என்பதே ‘ஜெய்பீம்’ படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் படத்தில் பேச முயற்சித்து இருக்கிறோம். பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளது போல எந்த ஒரு குறிப்பிட்ட தனி நபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கும், படக்குழுவினருக்கும் இல்லை. ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ‘இந்த திரைப்படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திர...
குருமூர்த்தி சர்ச்சை “பெயர் அரசியல்” செய்யாதீங்க – அன்புமணிக்கு சூர்யா ஹாட் பதில்

குருமூர்த்தி சர்ச்சை “பெயர் அரசியல்” செய்யாதீங்க – அன்புமணிக்கு சூர்யா ஹாட் பதில்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  அன்புமணிக்கு சூர்யா பதில்.. * மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி. நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது’ என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறீவிர்கள் என நினை...
விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு!

விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் - சூர்யா திடீர் சந்திப்பு! நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதே சன் ஸ்டூடியோவில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் இரண்டு படங்களில் படப்பிடிப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சன் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் விஜய் - சூர்யா இருவரும் நட்பு ரீதியாக சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது....