'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.
சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
மேலும், சூர்யா 42 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக நடிகை திஷா பத்தானி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யா 13 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை 2023-ஆம் ஆண்டு மார்ச்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கிரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளிடையே நேற்று திரையரங்குகளில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே, ரோலேக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவின் கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்த சூர்யா டுவிட்டர் பதிவானது தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி, “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!?. உங்களுடன் திரையில் இணைந்து நடிக்கும் கனவு நனவானது.
இதை சாத்தியப்பட...
நடிகர் அருண் விஜய் தற்போது 'ஓ மை டாக்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார்.
இதில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
செல்லப்பிராணியான நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் ஓ மை டாக் படத்தில் அறிமுகமாகியுள்ள அருண் விஜய் மகன் ஆர்னவ் விஜய்க்கு சூர்யாவும், ஜோதிகாவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பட வெளியீட்டையொட்டி தனது செல்லப்பிராணிகளுடன் இதனை பகிர்ந்துள்ளனர்....
வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷுட் சென்னை புறநகரில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார்.
தொடர்ந்து நாவல்களை படமாக்கிவருகிறார் வெற்றிமாறன். லாக்கப் நாவலை விசாரணை என்றும், வெக்கை நாவலை அசுரன் என்றும் படமாக்கியவர், தற்போது விடுதலை என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார்.
இதுவும் ஜெயமோகன் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை படமாக்குகிறார். தனது படத்துக்கும் வாடிவாசல் என்றே பெயர் வைத்துள்ளார்.
முந்தைய நாவல்களை படமாக்குகையில் எப்படி நாவலுக்கு வெளியே கற்பனையாக கதையை எழுதி சேர்த்தாரோ அதுபோல் வாடிவாசல் நாவலிலும் வெற்றிமாறனே எழுதியிருக்கும் புனைவும் இடம்பெறுகிறது.
சூர்யா நடிக்கும் இந்தப் படத்தை தாணு தயாரிக்க, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
ற்கனவே சூர்யா மாடுபிடிக்க பயிற்சி எடுத்துள்ளார். சென்னை இசிஆரில் வாடிவாசல் படத்தில் ...
நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜெய் பீம் சர்ச்சைக்கு சூர்யா மன்னிப்பு கேட்காததை தொடர்ந்து ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட பாமக மாநில சங்க செயலாளர் ஜெயவர்மன் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதற்காக, சென்னை ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு ஏற்கனவே 5 போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளித்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக பாதுகாப்பு வழங்க சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளது....
சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெளிவரவிருக்கும் படம் எதற்கும் துணிந்தவன்.
பாண்டிராஜ் இயக்கிருக்கும் இப்படம் வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
அதன் பின் பாலா மற்றும் வெற்றிமாறன் ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் சுதா கொங்கராவுடன் சூர்யா இணையவுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'செல்ஃபீ' படத்தில் கெளதம் மேனன் மற்றும் ஜி.வி பிரகாஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் ஜி.வி பிரகாஷ் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் சூர்யா-சுதா கொங்கரா இருவரின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஜி.வி பிரகாஷ், "கண்டிப்பாக இருவரும் இணைகிறார்கள், இந்தாண்டின் இறுதியில் இப்படத்திற்கான அறிவ...
நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
இருப்பினும் ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்கிற குற்றச்சாட்டும் அப்போது முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவரான ராஜ்யசபா எம்.பி. அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் நடிகர் சூர்யாவுக்கு பல கேள்விகள் எழுப்பி இருந்தார்.
அந்த அறிக்கையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்து இருந்தார்.
நடிகர் சூர்யாவும் அன்புமணிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், அன்புமணி குறிப்பிட்டது போல எந்தவொரு தனிநபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக்குழுவினருக்கும் தனக்கும் இல்லை.
சொல்பவர் சுட்டிக்காட்டிய தவற்றை உடனடியாக திருத்தினோம்.
படைப்புச் சுதந்திரம் யா...
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
https://youtu.be/cKrz-kWoaSI...