மதுரை மாநகரை தெறிக்க விட்ட, "சீமராஜா" இசைத்திருவிழா!
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த,
'சீமராஜா' இசை வெளியீடு
பாக்ஸ் ஆபிஸ் இளவரசன் சிவகார்த்திகேயனின் பிரபலத்தை பரவலாகக் காட்டியது. சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் பெரும் எண்ணிக்கையில் இந்த இசை விழாவில் குவிந்திருந்தனர். சிவகார்த்திகேயன் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கும் நட்சத்திரமாக மாறியிருப்பதை அங்கு போடப்பட்ட கோஷங்களே பறை சாற்றின.
விழா நடந்த இடம் வண்ண விளக்குகளால் மின்னியது. பெரிய அளவில் நட்சத்திரங்கள் கூடிய ஒரு விண்மீனைப் போலவே ஒரு நாள் முழுக்க மதுரை இருந்தது. நாட்டுப்புற நடனங்கள் மற்றும் பழமையான கிராமிய நாட்டுப்புற கலைகள் பார்வையாளர்களை வரவேற்றன, அந்த பகுதியே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.
"இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், பாடலாசிரியர் யுகபாரதி, ஹீரோ சிவ...
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் " படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
இன்று சினிமாத்துறைக்குத் தேவை வினியோகஸ்தர்கள் என்கிற "ஆக்சிசன்" தான்...
நல்ல படம் என்று பாராட்டப் பட்ட பல படங்கள் நல்ல விநியோகஸ்தர்கள் இல்லாமல் தோல்வியை தழுவிய சோகங்கள் உண்டு..
நல்ல படங்களை கண்டு பிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கி சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்தவர் கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் வி.சத்யமூர்த்தி...
https://youtu.be/SZeh7M4fs_Y
தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி,...
அதற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் விஜய்சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லேன் கோலிசோடா2 போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது "எச்சரிக்கை " இது மனிதர...
திருடப்படும் தமிழ்நாட்டுச் சிலைகளை மீட்டெடுக்கும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்?
எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!
தமிழர் நாகரிகம் – தமிழர் தொன்மை – தமிழர் பண்பாடு என நம் முன்னோர் வாழ்ந்த அடையாளங்களே நம்மை நம் சந்ததியினரை அடையாளப்படுத்துகின்றன. அது அடுத்த தலைமுறையின் வாழ்வியலுக்கு வழிகாட்டுகின்றன. இவற்றையெல்லாம் மூடி மறைக்கும் செயல்களில் நம் இன எதிரிகளாய் உள்ளோர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். காரணம் தமிழர் என்ற இனத்தை புதிய உலகத்திற்கு அடையாளம் காட்ட மறுக்கும் சூழ்ச்சி! இனப்பகையின் வெளிப்பாடு! இதன் வெளிப்பாடாகத்தான் நமது தொன்மையான நாகரிகங்களை வெளிக்காட்டவும், அதை மூடி மறைக்கவும் அவர்கள் முனைகின்றனர். எடுத்துக்காட்டாக, பூம்புகார், கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வாரய்ச்சி அவ்வபோது அரசுகளாலும், எதிரிகளாலும் தடுக்கப்படுகின்றன.
கடந்த சில ஆ...
இயக்குனர் சுசீந்திரன் - யுவன் கூட்டணியின் "ஜீனியஸ்"
இயக்குனர் சுசீந்திரன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி “ நான் மகான் அல்ல “ , ஆதலால் காதல் செய்வீர் என்று ரசிகர்களிடம் நல்ல பெயர்பெற்ற மாபெரும் வெற்றிப்படங்களில் இணைந்து ஒன்றாக பணியாற்றியுள்ளது. இந்த படங்களுக்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா “ ஜீனியஸ் “ என்ற திரைப்படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். கவிஞர் வைரமுத்து வரிகளில் , “ விஜய் சூப்பர் சிங்கர் “ இறுதி சுற்றில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த் இப்படத்தில் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவானது. சூப்பர் சிங்கரில் ஸ்ரீகாந்தின் திறமையை பார்த்து இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் கண்டிப்பாக தன்னுடைய இசையில் பாட இவருக்கு வாய்ப்பு தருவேன் என்று கூறியுள்ளார்.
சிறப்பான கதை கொண்ட படத்துக்கு பின்னணி இசை முக்கியம் என்பதால் இயக்குனர் சுசீந்திரன் ஜீனியஸ்...
பிரமாண்டமான தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பார்க்கப்படும் கலைப்புலி தாணுவின் அடுத்த படைப்பு 60 வயது மாநிறம் .
தலைப்பு ஏதோ போலீஸ் ஸ்டேஷனில் காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு போல ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, விக்ரம்பிரபு மூவரும் நடித்து இருக்கிறார்கள்.
https://youtu.be/lPIOl_rY0RY
முதல் முறையாக இளையராஜா இசையில் இணைகிறார் ராதாமோகன்.
தாத்தா சிவாஜி, அப்பா பிரபு, மகன் விக்ரம்பிரபு என மூன்றாவது தலைமுறைக்கு இசையமைக்கிறார் இளையராஜா.
படம் தொடஙகியதே தெரியாமல் முடித்து ஆகஸ்ட் மாதம் திரையிட இருக்கிறார் தயாரிப்பாளர் தாணு.
...
நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘எந்திரன்’. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளனர். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் ஷங்கர் தன் தரப்பில் உள்ள ஆதார ஆவணங்களை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ‘மாஸ்டர்’ கோர்ட்டில் தாக்கல் செய்து, ஏப்ரல் 27...
ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட "வட சென்னை "படத்தின் டீசர்
பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்க்கு பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டனியில் உருவாகியுள்ள படம் ‘வடசென்னை’. இதில் ஹீரோவாக தனுஷ் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர்,ராதா ரவி இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
https://youtu.be/q5GG5HJ1hVk
சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்திற்க்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கடேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கேங்ஸ்டர் த்ரில்லரான இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.
தனுஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு வட சென்னை படத்தின் டீசரை வெளியிட்டார்.தற்போது படத்தின் டீசர் ஒரே நாளில் யூடூபில் 3மில்லியன் பார்வையாள...
சில நேரங்களில், ஒரு படத்தின் ஜானர் மாதிரியே படப்பிடிப்பும் மிக வேகமாக முடியும். 8 தோட்டாக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் ஜீவி படம் இதை திறம்பட நிரூபிக்கிறது. ஒரு விறுவிறுப்பான திரில்லர் இந்த படத்திற்கேற்ப, படப்பிடிப்பும் அத்தனை வேகத்தில் ஒரே கட்டமாக முடிக்கப்பட்டிருக்கிறது.
"ஒருவேளை, படத்தின் ஜானரின் பாதிப்பு படப்பிடிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்" என்கிறார் தயாரிப்பாளர் எம்.வெள்ள பாண்டியன். அவர் கூறும்போது, "எல்லா புகழும் இயக்குனர் வி.ஜே. கோபிநாத் அவர்களுக்கே. அவர் ஒரு புதுமுக இயக்குனராக இருந்தாலும், அவரது சரியான திட்டமிடல் மற்றும் அதை சமாளித்த அவரது திறமை எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு அறிமுக இயக்குனர் வழக்கத்திற்கு மாறான கதையுடன் அல்லது சிறப்பான கதை சொல்லும் திறனால் ஒரு தயாரிப்பாளரை ஈர்க்கக் கூடும். ஆனால் குறித்த காலத்துக்குள் படத்தை முடித்து கொடுப்பது அரி...