சி.பி.எஸ்.இ., தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஏற்பட்ட பெரும் இன்னல்கள் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று தமிழக அரசுக்கும், சி.பி.எஸ்.இ. நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியது. அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இருந்து 3,685 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக வெளிமாநிலங்களுக்கு செல்லவேண்டி இருந்தது என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளதாக ஒரு பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்வு மையங்களை தமிழ்நாட்டுக்கு உள்ளேயே ஏன் அமைக்க முடியவில்லை என்ற காரணத்தை சி.பி.எஸ்.இ. மற்றும் நீட் தேர்வு நடத்தும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர் ஒவ்வொருவருக்கும் ரெயில் கட்டணம் மற்றும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ம...