Tag: நயன்தாரா
காற்றில் பறந்த அரசு ஆணை உச்சத்தில் டிக்கெட் விலை கோர்ட் உத்தரவை மதிக்காத கட் அவுட் கலாச்சாரம்… களை கட்டும் பேட்ட,விஸ்வாசம்..!
காற்றில் பறந்த அரசு ஆணை உச்சத்தில் டிக்கெட் விலை கோர்ட் உத்தரவை மதிக்காத கட் அவுட் கலாச்சாரம்… களை கட்டும் பேட்ட,விஸ்வாசம்..!
ரஜினிகாந்த் நடித்த பேட்ட, அஜீத் நடித்த விஸ்வாசம் இரு படங்களும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இரு நடிகர்களும் வியாபார ரீதியாக பேசப்படும் நடிகர்கள் என்பதால் இந்த படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
அரசு நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி தராத போதும் சில இடங்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. அதோடு கோர்ட் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு பிரமாண்டமான கட் அவுட்களும் தியேட்டரை மறைக்கும் பிரமாண்டமான அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளது. அதே போல டிக்கெட் விற்பனையில் அரசின் உத்தரவு எதுவும் பின்ப்ற்றப் படவில்லை. ஆயிரங்களில் டிக்கெட் விலை. லோக்கல் போலீசாருக்கு இந்த விதிமீறல்கள் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் மவுனம் சாதிக்கிறார்கள். ரஜினி அரசியல் பரபரப்புகளுக்கிடையில் பேட்ட வந்திருப்ப...
விக்னேஷ்சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரான நயன்தாரா..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இந்த ஆண்டு இவருக்கு சிறந்த ஆண்டு என்றே சொல்லலாம். இவருடைய நடிப்பில் இந்த வருடம் ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளது.தற்போது இவர் அஜித்துக்கு ஜோடியாக ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில், நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை இருப்பதால், தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாட தயாராகி இருக்கிறார் நயன்தாரா.
இதற்காக அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்துடன் நயன்தாரா நிற்கும் புகைப்படமும், விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
தனக்கு பிடித்த நீலக்கலரில் தானும், விக்னேஷ் சிவன் புத்தாடைகளில் அட்வான்ஸ் ஆக கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு ரெடியாகி உள்ளனர்....
மேதகு பிரபாகரனுக்கு பெருமை சேர்க்குமா சீறும்புலி!
மேதகு பிரபாகரனுக்கு பெருமை சேர்க்குமா சீறும்புலி! #Prabhakaran #Vijay #GayathriRaghuram #Nayantara #Atlee
https://youtu.be/bARAx1fdkgQ
அட்லி படத்தில் விஜய் ஜோடியானார் நயன்தாரா..!
ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்
கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கும்
"தளபதி 63" படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா
தனி ஒருவன், கவன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது தளிபதி விஜய் நடிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில் உருவாகவிருக்கும் "தளபதி 63" படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கின்றனர்.
தற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா "தளபதி 63" படத்தில் ஜோடி சேரவுள்ளார்.
பல உச்ச பிரபலங்கள் பணியாற்றும் இப்படத்தில் நடிகை நயன...
விக்னேஷ் சிவனுடன் பிறந்த நாள் கொண்டாடிய நயன்தாரா
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. இருவரும் லிவிங் டுகெதர் பாணியில் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்தி பரவுகிறது. இருவரும் அதை மறுக்காத நிலையில் ஜோடியாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.
நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விக்னேஷ் சிவனுடன் நள்ளிரவு லேடி சூப்பர் ஸ்டார் நயன் என்று எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார். மேலும் அலங்கரிக்கப்பட்ட ‘தங்கமே’ என்ற பெயர் பலகையும் இடம் பெற்றிருந்தது.
நயன்தாராவின் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகிறார்கள். ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படக்குழுவினர் நயன்தாராவின் பர்ஸ்லுக் போஸ்டரையும் வெளியிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார்கள்...
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்!
சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK13 என்ற பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தளத்தை நேர்மறையான விஷயங்கள் தான் அலங்கரித்து வருகின்றன. ராஜேஷ் போன்ற மிகவும் எளிமையான, ஜாலியான ஒரு இயக்குனர் இருக்கும்போதே படப்பிடிப்பு தளம் கலகலப்பாக,பாசிட்டாவாக இருக்கும். தற்போது இன்னும் ஒரு பாசிட்டாவான நபர் படத்துக்குள் வந்திருக்கிறார். ஆம்! SK13 படத்தில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.
இது குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, "எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும், நேர்மறையான விஷயங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன என்பதை கூறுவதில் மகிழ்ச்சி. நான் படப்பிடிப்பை ஆரம்பித்த நேரத்திலிருந்தே இத்தகைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்து வருகிறது. கேஈ ஞானவேல்ராஜா போன்ற ஒரு தயாரிப்பாளர் எங்கள் தேவைகளை அறிந்து, பூர்த்தி செய்வதும் இதற்கு முக்கிய காரணம். நிச்சயமாக, சிவகார்த்திகேய...
”ஐரா” மூலம் இரட்டை வேட அவதாரம் எடுக்கும் நயன்தாரா!
"அறம்" படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடும்" திரை படத்தை இயக்கிய சர்ஜூன் கதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார். ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே எஸ் சுந்தர மூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக்தொகுப்பு செய்ய, "அவள்" படத்தின் கலை இயக்குனர் சிவசங்கர் அரங்கு அமைக்க,டி. ஏழுமலை நிர்வாக தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுடன் கலை அரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோருடன் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.
" நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியது. அறம் படத்தை தொடர்ந்து உச்சத்தை நோக்கி போய் கொண்டு இருக்கும் அவருடைய திரை உலக அந்தஸ்து "ஐரா" படத்தின் மூலம் மேலும் உயரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. சர்ஜூன் கதை சொன்ன மாத்திரத்தில் இந...

