இளம்பெண் மீது தாக்குதல் ஆள் ஏவிய ராதாரவி மீது வழக்கு! கைதாவாரா?!
இளம்பெண் மீது தாக்குதல் ஆள் ஏவிய ராதாரவி மீது வழக்கு! கைதாவாரா?!
தென்னிந்திய டப்பிங் யூனியன் என்றாலே பிரச்சினைகள், பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.
அதிலும் குறிப்பாக நடிகர் ராதாரவி தலைவராக பதவிக்கு வந்ததில் இருந்து சர்வாதிகாரப் போக்கும், எதிர் கேள்வி கேட்பவர்களை சங்கத்தை விட்டு நீக்குவதும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழும்பியது.
அதிலும் மிக குறிப்பாக சங்க கட்டிடம் வாங்கியதில், மாற்றி கட்டியதில் பல லட்சம் முறைகேடு செய்ததாக புகார் எழுந்து நீதிமன்றம் வரை வழக்காக தாக்கல் செய்யப்பட்டது.
அதோடு, அரசின் அனுமதி பெறாமல் விதிமுறை மீறி கட்டிடம் கட்டியதாக எழுந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் கடந்த மாதம் டப்பிங் யூனியன் கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அரசின் விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருப்ப்தால் எந்த நேரத்திலும் அந்த கட்டிடம் அரசால் இடிக்...