சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: russia vs ukraine war update

Ukraine war சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் – ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் கருத்து

Ukraine war சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் – ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் கருத்து

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே தீவிரமாக போர் நடைபெற்று வரும் சூழலில், இந்த விவகாரத்தில்  சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரோ கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தாக்குதல் நடத்த தொடங்கியது. போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உலகநாடுகள் வலியுறுத்திய போதிலும், ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே, சமாதானத்தை ஏற்படுத்த பெலாரஸ் நாடு முயற்சி மேற்கொண்ட நிலையில், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போரை நடத்துகிறது. இவ்வாறு உக்ரைன் சேரும்பட்சத்தில் அது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷ்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது இந்த இரு நாடுகளுக்கும் இந்த...
படைகளை குறைப்பதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என அமெரிக்கா எச்சரிக்கை!

படைகளை குறைப்பதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என அமெரிக்கா எச்சரிக்கை!

HOME SLIDER, ukrain war, World News, அரசியல், உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக உக்ரைன், ரஷ்யா இடையே துருக்கியில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் படைகளைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, கீவ் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் படைகள் உக்ரைனின் வேறு பகுதியில், தாக்குதலை தீவிரப்படுத்த பயன்படுத்தப்படும் என எச்சரித்துள்ளார். ரஷ்யாவின் அறிவிப்பால் கீவ் நகருக்கான அச்சுறுத்தல் முடிந்து விட்டது என கருத முடியாது எனவும் ஜான் கிர்பி வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, பிரசல்சில் ஏப்ரல் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற உள்ள நேட்டோ, உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யா உடனான பேச்சுவார்த்தையில் அமைதிக்கான நேர்மறையான...
ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா, சீனா உள்பட 38 நாடுகள் புறக்கணித்தன!

ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா, சீனா உள்பட 38 நாடுகள் புறக்கணித்தன!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 140 நாடுகள் வாக்களித்தன. தீர்மானத்துக்கு எதிராக ரஷியா, பெலாரஸ், சிரியா, வட கொரியா, எரித்ரியா ஆகிய 5 நாடுகள் வாக்களித்தன. சீனா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்தியா எதிர்பார்த்த அம்சங்கள் இந்த வரைவு தீர்மானத்தில் இல்லை என்பதால் இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய நீதிபதி எதிர்த்து கருத்து தெரிவித்த நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியா புறக்கணித்தது உலக அரங்கில் உன்னிப்பாக கவனிக்கபடுகிறது....
ukraine war – சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 300 டாலரை எட்டுமாம்!

ukraine war – சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 300 டாலரை எட்டுமாம்!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வராத நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 300 டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 135 டாலராக அதிகரித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான தடை விதிக்கப்பட்டிருப்பதால், பேரல் ஒன்றின் விலை 300 டாலர் வரை விலை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில்  நேற்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 5,0 56 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 40,448 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இருப்பினும் வெள்ளி வில...
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா- சுமி நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி!

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா- சுமி நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனின் சுமி நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். எல்லைப் பிரச்னையால் ரஷ்யா - உக்ரைன் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்யா குண்டுமழை பொழிவதால் சேதங்கள் அதிகரித்துள்ளன. கீவ் நகர் அருகே உள்ள சயோட்மையர் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில், பெட்ரோல் கிடங்கில் தீப்பற்றியது. சுமி நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஏராளமான கட்டடங்கள் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் தீக்கிரையாயின மைக்கோலைவ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்தனர். இதேபோல் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலால், அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்தன  ...
உக்ரைன் அகதிகளுக்கு 20 மில்லியன் டாலர் நிதி கொடுத்து உதவிக்கரம் நீட்டும் இங்கிலாந்து ராணி!

உக்ரைன் அகதிகளுக்கு 20 மில்லியன் டாலர் நிதி கொடுத்து உதவிக்கரம் நீட்டும் இங்கிலாந்து ராணி!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் அகதிகளுக்கு உதவுவதற்காக இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் நன்கொடை வழங்கியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி ரஷ்யா முற்றிலும் சேதப்படுத்தி வருகிறது. ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளை விதித்து வரும் உலக நாடுகள், உக்ரைனுக்கு பலவகையிலும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. கடனுதவி, ஆயுதங்கள், படை வீரர்கள், இணைய வசதி, உணவு, தண்ணீர் என பல வகையிலும் உக்ரைனுக்கு உதவிகள் குவிந்து வருகிறது. இதனிடையே குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருவதால் லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி, அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த 7 நாட்களில் மட்டும் 13 லட்சத்திற்கும் அதிகமான மக்...
உக்ரைன் ரஷ்யா போரால் வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டுமாம் ஐ நா சபை தகவல்!

உக்ரைன் ரஷ்யா போரால் வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டுமாம் ஐ நா சபை தகவல்!

HOME SLIDER, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் ஒரு வார காலத்துக்கும் மேலாக நீடித்துவருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலின் காரணமாக அந்நாட்டின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்நாட்டிலிருந்து சாரை சாரையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கு குழந்தைகளுடன் ஏராளமான உக்ரேனியர்கள் சென்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போலந்தின் மெடிகா எல்லைக்கு சென்ற மக்களை அங்கு காத்திருந்த உறவினர்கள் கட்டி அணைத்து வரவேற்றனர். போருக்கு அஞ்சி லட்சக்கணக்கானோர் வெளியேறி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் உதவ ஏராளமானோர் நாடு திரும்பி வருகின்றனர். போலந்தில் வாழ உக்ரேனியர்கள் சிலர் ரயில் மூலம் லீவ் மற்றும் ஒடேசா நகரங்களுக்கு வந்தடைந்தனர். ...
ரஷ்யாவின் தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன உக்ரைன் அதிபர் வேதனை!

ரஷ்யாவின் தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன உக்ரைன் அதிபர் வேதனை!

HOME SLIDER, NEWS, ukrain war, World News
    ரஷ்யாவின் தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன உக்ரைன் அதிபர் வேதனை! ரஷ்யாவின் தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன என்றும் முதல் நாளில் எப்படி ரஷ்யாவை தனியாக எதிர்த்தோமோ 2வது நாளிலும் அப்படியே எதிர்கொள்கிறோம் என்றும் மேற்கத்திய நாடுகள் எங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளது என்றும் இதை எதிர்பார்த்தோம் என்றாலும்கூட அதிக வேதனையை தருகிறது என்றும் கூறியுள்ளார். https://youtu.be/5AcWZ9gguJI...
உக்ரைனிலிருந்து 8.36 லட்சம் பேர் வெளியேற்றம்!

உக்ரைனிலிருந்து 8.36 லட்சம் பேர் வெளியேற்றம்!

HOME SLIDER, ukrain war, World News, உலக செய்திகள்
  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்நாட்டிலிருந்து சாரை சாரையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கு குழந்தைகளுடன் ஏராளமான உக்ரேனியர்கள் சென்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போலந்தின் மெடிகா எல்லைக்கு சென்ற மக்களை அங்கு காத்திருந்த உறவினர்கள் கட்டி அணைத்து வரவேற்றனர். போருக்கு அஞ்சி லட்சக்கணக்கானோர் வெளியேறி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் உதவ ஏராளமானோர் நாடு திரும்பி வருகின்றனர். போலந்தில் வாழ உக்ரேனியர்கள் சிலர் ரயில் மூலம் லீவ் மற்றும் ஒடேசா நகரங்களுக்கு வந்தடைந்தனர். உக்ரைனில் 2.65 லட்சம் கர்ப்பிணிகள் உள்ளதாக கூறியுள்ள ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம், அதில் 80,000 பேருக்கு 3 மாதங்களில் குழந்தை பிறக்கும் என தெரிவித்துள்ளது. உக்ரைனை வ...
ரயிலில் ஏறி தப்ப முயன்றால் துப்பாக்கியை காட்டி மிரட்டும் உக்ரைன் இராணுவம்’ – இந்திய மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு

ரயிலில் ஏறி தப்ப முயன்றால் துப்பாக்கியை காட்டி மிரட்டும் உக்ரைன் இராணுவம்’ – இந்திய மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனில் போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். ரயில்களில் ஏற விடாமல் உக்ரைனிய பாதுகாப்பு படையினரும், மக்களும் தள்ளிவிடுவதாக அங்குகள்ள தமிழர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் நடந்து சென்றாவது எல்லையைக் கடக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, கிடைக்கும் வழிகளில் எல்லாம் உக்ரைனை விட்டு வெளியேற, இந்திய மாணவர்கள் முனைந்து வருகின்றனர். ஆனால், அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற தங்களை, உக்ரைன் ராணுவமும் காவல் துறையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தடுப்பதாக இந்திய மாணவர்கள் பதற்றத்துடன் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் ராணுவ வீரர்கள், காவல்துறையினர் ...