புயல்-மழை நிவாரணம்: பிரதமர் மோடியிடம் முதல்வர் அளித்த கோரிக்கை மனு
ஒக்கி புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், புயல் மற்றும் பருவ மழையினால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கீழ்க்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சமர்ப்பித்தார்:
1. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 747 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும்;
2. தற்போது பேரிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும். குறிப்பாக, உயிரிழப்பிற்கு ரூபாய் 4 லட்சத்திலிருந்து ரூபாய் 10 லட்சமாகவும், ஊனமடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தவும், வாழை மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 13,500/-லிருந்து ரூபாய் 1,25,000/- ஆகவும், ரப்பர் மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18,000/-லிருந்து ரூபாய் 2,50,000/- ஆகவும் உயர்த்தப்பட வேண்டும்;
3. புயல், காற்று மற்றும் மழையி...









