Author: Kodanki
ரஜினிகாந்த் பாபா முத்திரையில் இருந்த தாமரை திடீரென மாயம்..!
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு கடைசி நாளில் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக அரசியல் களத்தில் பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது.
அதிலும் தான் ஆன்மீக அரசியலில் ஈடுபடப்போவதாக ரஜினி அறிவித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளில் ரஜினியின் ஆஸ்தான ஆன்மீக குருவான பாபா முத்திரையை ரஜினி காண்பித்தார். அதைத்தொடர்ந்து பாபா முத்திரைதான் ரஜினி கட்சியின் சின்னமாக இருக்கக்கூடும் என பேசப்பட்டது.
ரஜினி ரசிகர்கள் சந்திப்பு நடந்த மேடையில் பாபா முத்திரை வைக்கப்பட்டிருந்தது. வெண்மையான தாமரை முன்பாகவும், அதன் பின்னால் பாபா முத்திரையும் இருந்தது. இந்த முத்திரையை சுற்றி நாகம் இருப்பது போலவும், முத்திரையின் மேலே ஒரு பக்கம் நாகத்தின் தலை படமெடுக்கும் நிலையிலும், இன்னொரு முனை வால் பகுதியாகவும் காணப்பட்டது.
நல்ல வேளை நாகம் எந்த அரசியல...
ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் தவறாகப்போய் முடியும் – டி.டி.வி தினகரன்
ஆன்மீக அரசியல் தவறாகப்போய் முடியும் என்பது எனது கருத்து: டி.டி.வி தினகரன்
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் சென்னை அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது பேசிய அவர்...
விசாரணை ஆணையத்தில் கேட்டுக்கொண்டதின் பேரில் வீடியோ ஆதாரத்தை கொடுத்து உள்ளோம்,ஏற்கனவே வெற்றிவேல் கொடுத்தின் தொடர்ச்சிதான் தற்போது கொடுத்துள்ளோம்.
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகம் என்று சில வார்த்தையை பேசி உள்ளார், ஆன்மிகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்துவது தவறாக தான் முடியும்.
ரஜினி சிஸ்டம் சரியில்லை என்கிறார்,சிஸ்டம் எப்போதும...
அதிமுகவின் 3-ம் அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார் – தினகரன்
அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார்: தினகரன்
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த 29-ந்தேதி சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.
தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மன்னார் குடி அருகே உள்ள தட்டாங்காவில் கிராமத்தில் உள்ள வீரமணவாள சுவாமி குலதெய்வ கோவிலுக்கு மனைவி அனுராதா, மகள் ஜெயஹரிணி ஆகியோருடன் தினகரன் வந்து தரிசனம் செய்தார்.
இதன்பின்னர் மன்னார்குடி சென்று சசிகலாவின் தம்பி திவாகரனை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அதன்பின்னர் இருவரும் தனியாக அமர்ந்து ஆலோசனை நடத்தினார்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்தனர்.
இதன்பின்னர் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
எடப...
அர்த்தமுள்ள படங்களை தருவதுதான் என் வாழ்க்கையை மாற்றிய ரசிகர்களுக்கு நான் செய்யும் கைம்மாறு – நயன்தாரா
அர்த்தமுள்ள படங்களை தருவதுதான் என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய ரசிகர்களுக்கு நான் செய்யும் கைம்மாறு - நயன்தாரா
நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் என 3 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வருடம் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ ஆகிய தமிழ்ப் படங்களும் இரு தெலுங்குப் படங்களும் வெளிவரவுள்ளன.
இந்நிலையில் புத்தாண்டையொட்டி நடிகை நயன்தாரா கைப்பட எழுதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:-
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய ரசிகர்களுக்கு என் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துகளும்.
உங்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். தீவிரமான அன்பு இன்னும் இருப்பதை நீங்கள் உணர்த்தியுள்ளீர்கள். என் மீதான அன்பினால், வாழ்க்கை அழகானது என்பதை உணர்ந்துள்ளேன். அர்ப்பணிப்புடன் கடுமையான உழைப்பைச் செலுத்தி மற்ற விஷயங்களைக் கடவுளிடம் விட்டுவிட வேண்டும் என்பதை...
தமிழ் நாட்டில் நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டு வருவோம் வாருங்கள் அழைக்கிறார் ரஜினி..!
அரசியலில் மும்முரம் காண்பித்து வரும் ரஜினிகாந்த், தனது கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார்.
. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
‘அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். என்னுடைய அரசியல் பிரவேசத்தை வரவேற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. ஒரு முக்கிய அறிவிப்பு. என்னுடைய பதிவு செய்யப்பட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களையும், பதிவு செய்யப்படாத மன்றத்தின் உறுப்பினர்களையும், மற்றும் தமிழ் நாட்டில் நல்ல அரசியல் மாற்றம் கொண்டு வர நினைக்கும் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து குடைக்கீழ் கொண்டு வரவேண்டும். அதற்காக www.rajinimandram.org என்ற பக்கத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் உங்களுடைய பெயர், வாக்காளர் எண், பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம். தமிழ் நாட்டில் நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டு வருவோம்’ என்று பதிவு செய்...
‘பிக் பாஸ்’ ஜூலி முதல் முறையாக கதாநாயகி அவதாரம்..!
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!
ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா.
பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.
இதனையடுத்து ஜூலி பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார்.
இந்நிலையில் தற்போது ஜூலி 'K7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
மேலும் இந்த படத்தில் ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இது குறித்து ஜூலியிடம் கேட்டத...
புத்தாண்டை மணல் சிற்பத்தால் வரவேற்ற சுதர்சன் பட்நாயக்
மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் தனது எழில்மிகும் மணல் ஓவியத்தால் 2018-ம் ஆண்டை வரவேற்றுள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்கள் மனதில் பதியவைத்து வருகிறார்.
தேசிய அளவில் தலைசிறந்த மணல் சிற்ப கலைஞராக திகழும் இவர், சர்வதேச அளவில் பல நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.
2018-புத்தாண்டையொட்டி பூரி கடற்கரையில் தனது எழில்மிகும் மணல் ஓவியத்தால் வரவேற்றுள்ளார். இந்த ஓவியங்களை ஒடிசா மக்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மக்களும் கண்டு களித்து வருகின்றனர்....
அரசியல் அறிவிப்பால் மீண்டும் பிசியான போயஸ்கார்டன்… அன்று ஜெ., இன்று ரஜினி..!
அரசியல் அறிவிப்பால் மீண்டும் பிசியான போயஸ்கார்டன்... அன்று ஜெ., இன்று ரஜினி
சுமார் கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அதிகார மையமாக இருந்து வந்தது போயஸ்கார்டன் பகுதி.
ஜெயலலிதா இருந்த வரையில் பரபரப்பான அரசியல் களமாகவே காணப்பட்டது. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்தே பல சாதனைகளை படைத்தார். கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடங்கி அ.தி.மு.க.வின் கொள்கை முடிவுகள் அனைத்தையுமே அவர் அங்கு வைத்துதான் முடிவு செய்தார்.
இதனால் அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத நேரத்திலும் சரி போயஸ்கார்டன் பகுதி பரபரப்பு களமாகவே காணப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவின் கீழ் இருந்த ஜெயலலிதா வீட்டு முன்பு மட்டுமல்லாமல் அந்த பகுதியே எப்போதுமே பாதுகாப்பு பலமாக இருக்கும்.
எத்தனை பாதுகாப்புகள் இருந்தாலும் காலை முத...
மேற்கு வங்காளத்தில் மீண்டும் போலி 2000 ரூபாய் நோட்டுக்கள்..!
மேற்கு வங்காள மாநிலம் மால்டாவின் குலாப்காஞ்ச் பகுதியில் போலி 2000 ரூபாய் நோட்டுக்களுடன் இருவரை எல்லைப் பாதுகாப்பு படை விசாரணை செய்து வருகிறது. எல்லைப் பாதுகாப்பு படை ரூ. 6,50,000 மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து உள்ளது. கடந்த 26-ம் தேதியும் எல்லைப் பாதுகாப்பு படை மால்டாவில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் கள்ளநோட்டுக்களுடன் ஒருவரை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் எல்லையில் இந்தியாவின் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களின் கள்ள நோட்டுக்கள் சிக்குவது வழக்கமாக உள்ளது.
பாகிஸ்தானில் கள்ளநோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வங்காளதேசம் வழியாக இந்தியா வருகிறது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படும் போது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கரன்சி யாரும் போலியாக கள்ள நோட்டு அச்சடிக்க முடியாது என்ற...

