சனிக்கிழமை, ஜூன் 27
Shadow

Author: Kodanki

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது மாநிலம் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், துறைமுகத் திட்டம் குறித்து முதல்வரிடம் பேசியதாக தெரிவித்தார். மேலும்,  மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு நல்லது கிடைக்கும் என்றும் அவர் கூறினார். தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவருவதாக சமீபத்தில் பேசியது குறித்து கேட்டபோது, தமிழகத்தில் பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவதாகத்தான் கூறினேன் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.  ...
கமல் ஹாசனுடன் சீமான் சந்திப்பு – அரசியல் பயணத்திற்கு வாழ்த்து ..!

கமல் ஹாசனுடன் சீமான் சந்திப்பு – அரசியல் பயணத்திற்கு வாழ்த்து ..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
அப்துல் கலாம் வீட்டில் இருந்து நாளை அரசியல் பயணத்தை தொடங்க உள்ள நடிகர் கமல் ஹாசனை, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று சந்தித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, கமலின் அரசியல் பயணத்திற்கு சீமான் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சீமான் கூறியதாவது:- படிக்கும் காலத்தில் இருந்தே நான் கமலின் ரசிகனாக இருந்தவன். நானும் கமலும் ஒரே பூமி,  ஒரே மண்ணைச் சேர்ந்தவர்கள்.  அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று நாளை பயணத்தை தொங்குகிறார். கமலின் அரசியல் பயணம் புரட்சிகரமாகவும் வெற்றிகரமாக இருக்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன். நானும் கமலும் இணைந்து செயல்படுவோமா, இல்லையா? என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கமல் கூறும்போது, ‘என்னுடைய கொள்கை சீமானுக்கு தெரியாது. எனது சினி...
சிறுமி ஹாசினி கொலைக் குற்றவாளி தஷ்வந்திற்கு மரண தண்டனை

சிறுமி ஹாசினி கொலைக் குற்றவாளி தஷ்வந்திற்கு மரண தண்டனை

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினீயர் தஷ்வந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் தஷ்வந்த் குற்றம் இழைத்ததற்கான ஆதாரம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறிய நீதிபதி வேல்முருகன் தஷ்வந்த் குற்றவாளி என அறிவித்தார். சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டன. சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றம், ஆள்கடத்தல், தடயங்களை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தா...
சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்..!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். சிவாவின் நெருங்கிய நண்பனாகவும், சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலின் மூலம் மிகவும் பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை சிவா தயாரிக்கிறார். கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்த படம் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தியது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, ‘திரைத்துறை தான் எனக்கு பெயரும், புகழும் கொடுத்தது. இந்த துறைக்கு நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். சாதிக்கும் கனவில் நாங்கள் சுற்றிய போது எல்லா நிலைகளிலும் என்னுடன் இருந்த, என் நண்பர்களின் கனவையும் புரிந்து கொள்வது என் கடமையாக உணர்கிறேன். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் அரு...
விஜய்யுடன் நடிக்கும் போது ரசிகையாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

விஜய்யுடன் நடிக்கும் போது ரசிகையாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இப்போது மீண்டும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாகி இருக்கிறார். இதுபற்றி கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி.... “மீண்டும் விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை என்னுடன் நடிக்கும் நடிகராக எப்போதும் பார்க்க முடியாது. அவருடன் நடிக்கும் போது எனக்கு பிடித்த நடிகருடன் இருக்கும் ரசிகையாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன். நான் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘மகாநதி’யில் நடித்திருக்கிறேன். நாக் அஸ்வின் இதை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தொடங்கியபோது மேக்கப்போட மட்டும் மூன்றரை மணி நேரம் ஆனது. பின்னர் அது பழகிப்போனது. சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவ்வளவு பெரிய நடிகை பாத்திரத்தில் நடிக்க பயமாக இருந்தது. இப்போது இந்த படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. சாவித்ரி...
‘கலர்ஸ் தமிழ்’ சேனல் உதவியோடு  ஆர்யாவின் பெண் தேடும் சுயம்வரம்..!

‘கலர்ஸ் தமிழ்’ சேனல் உதவியோடு ஆர்யாவின் பெண் தேடும் சுயம்வரம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?’ என்ற கேள்விக்கு முன்பிருந்தே, தமிழகத்தில் பதில் தேடப்பட்டுக்கொண்டிருப்பது ‘இந்த ஆர்யாவுக்கு எப்ப பாஸ் கல்யாணம்?’ என்ற கேள்விக்குத்தான். சிலர் ஆர்யா செய்யும் சேட்டைகளால், அதனால் ஏற்படும் பொறாமையால் இந்தக் கேள்வியை முன்வைத்தாலும் ஒருகட்டத்தில் அவரது நலனுக்காகச் சொல்வது போன்றே இந்தக் கேள்வி பரிணமித்துவிட்டது. அதனால் இதற்குப் பதில் தேடும் முயற்சியாக ஆர்யாவுடன், தமிழகத்தில் களமிறங்கியிருக்கிறது ‘கலர்ஸ் தமிழ்’(Colors Tamil) சேனல். சில வாரங்களுக்கு முன்பு, நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் ‘என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள்’ என்று வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அந்த எண்ணுக்கு உலகம் முழுவதிலுமிருந்து எழுபதாயிரம் பெண்கள் போன் செய்திருக்கிறார்கள். அப்படிக் கிடைத்த பெண்களின் எண்ணுக்கு, அ...
நயன்தாராவுக்கு ஏற்றது போல் கேரக்டரை மாற்றினேன் – இமைக்கா நொடிகள் இயக்குநர்

நயன்தாராவுக்கு ஏற்றது போல் கேரக்டரை மாற்றினேன் – இமைக்கா நொடிகள் இயக்குநர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘டிமாண்டி காலனி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. இவர் தற்போது நயன்தாராவை வைத்து இமைக்கா நொடிகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அதர்வா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் அஜய் ஞானமுத்து அளித்துள்ள பேட்டியில், “முதலில் இந்தக் கதையை எழுதும்போது இரண்டு ஹீரோக்கள் கதையாகத்தான் எழுதினேன். அதன்பிறகுதான் ஒரு கேரக்டரை மட்டும் நயன்தாராவுக்கு ஏற்றது போல் மாற்றினேன். ஆனால், நயன்தாரா இந்தக் கதையில் நடிப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. காரணம், கதைப்படி துப்பறியும் நிபுணராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. எனவே, துப்பாக்கியைக் கையாள்வதிலும், வில்லன்களைத் துரத்திப் பிடிப்பதிலும் சில சிக்கல்கள் இருந்தன. அந்தக் காட...
அரசியலில் தனக்கு மூத்தவரான விஜயகாந்தை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்..!

அரசியலில் தனக்கு மூத்தவரான விஜயகாந்தை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில், இன்று  அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன். அப்போது, அரசியலில் தனக்கு மூத்தவரான விஜயகாந்தைச் சந்தித்ததாகத் தெரிவித்தார். வரும் பிப்ரவரி 21ஆம் தேதியன்று தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். அதற்கு முன்னதாக, தனக்கு நெருக்கமான பிரபலங்களையும் அரசியல் கட்சித்தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று  கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் நல்லகண்ணுவைச் சந்தித்துப் பேசியிருந்தார். பிப்ரவரி 18 நேற்று   நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன். இந்த நிலையில், இன்று அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன். அப்போது, நீண்டநாள் ...
நடிகை பிரியா வாரியர் மீது போலீசில் அடுத்தடுத்து புகார்..!

நடிகை பிரியா வாரியர் மீது போலீசில் அடுத்தடுத்து புகார்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
‘ஒரு அடார் லவ்' படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் தங்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாகப் படத்தின் இயக்குநர், நடிகை பிரியா வாரியர் மீது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றவர் இளம் நடிகை பிரியா வாரியர். அந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பட ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் நாளுக்கு நாள் பிரியா வாரியரின் புகழ் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதே சமயம் இந்தப் பாடல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ஒரு வரி மத உணர்வைப் புண்படுத்துவதாக உள்ளதாக ஐதராபாத் போலீச...
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா

ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயான பின்பு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் தனது சினிமா பிரவேசத்தை தொடங்கினார். இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் அவர் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தநிலையில் வித்யா பாலன் நடித்துள்ள ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் கதையாகும். வித்தியாபாலன் நடித்துள்ள வேடத்தில் ஜோதிகா நடிப்பார் என்றும் இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த மொழ...