சனிக்கிழமை, ஜூலை 25
Shadow

politics

மோடியின் பகோடா வியாபார பேச்சுக்கு பிச்சைக்கார வருமானம் சொல்லி பா.சிதம்பரம் நக்கல்..!

மோடியின் பகோடா வியாபார பேச்சுக்கு பிச்சைக்கார வருமானம் சொல்லி பா.சிதம்பரம் நக்கல்..!

HOME SLIDER, politics, செய்திகள்
முன்னாள் நிதிமந்திரி ப. சிதம்பரம் தொடர்ச்சியாக டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில் மத்தியில் உள்ள மோடி அரசை கடுமையாக சாடிஉள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் மோடி தனியார் செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டியில், “ பக்கோடா விற்பனை செய்யும் நபர் வீட்டிற்கு ரூ. 200 கொண்டு சென்றால் அதனை வேலைவாய்ப்பாக கருத வேண்டுமா, இல்லையா?,”என பேசியிருந்தார். இதனை தாக்கும் வகையில் ஹர்திக் பட்டேல் பேசுகையில், “டீக்கடைக்காரர் இப்படிதான் பேசுவார், பக்கோடா கடை வைப்பதையும் அவர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கிவிட்டதாக கருதுவார்கள். நிச்சயமாக பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாமலே இருக்கிறார்,”என குறிப்பிட்டு இருந்தார். பிரதமர் மோடி பக்கோடா விற்பனை செய்து ரூ. 200 சம்பாதிக்கலாம் என்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகாவில் பாரதீய ஜனதா அலுவலகத்திற்கு வெளியே போராட்டமும் நடைபெற்றது. இப்போது பக்கோடா விற்பனை ...
பஸ் கட்டண உயர்வை கண்டித்து மறியல்: ஸ்டாலின் – வைகோ -திருமா கைது

பஸ் கட்டண உயர்வை கண்டித்து மறியல்: ஸ்டாலின் – வைகோ -திருமா கைது

HOME SLIDER, politics, செய்திகள்
பஸ் கட்டண உயர்வு 100 சதவீதம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் கிளம்பியது. தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கடந்த வாரம் ஆர்ப்பாட்டம், மறியலில ஈடுபட்டனர். இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. கடந்த சனிக்கிழமை தி.மு.க. தலைமையில் 7 கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. பஸ் கட்டணத்தை அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் எதிர்க்கட்சிகள் அறிவித்தன. இதைத் தொடர்ந்து பஸ் கட்டணத்தை சிறிது குறைப்பதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி மாநகரப் பேருந்துகளில் ஒவ்வொரு ஸ்டேஜ்க்கும் ஒரு ரூபாய் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.4 ஆக மாற்றப்பட்டுள்ளது...
நடிகர்கள் ரஜினி-கமலுக்கு போட்டியாக உதயநிதியை களமிறக்கும் திமுக..!

நடிகர்கள் ரஜினி-கமலுக்கு போட்டியாக உதயநிதியை களமிறக்கும் திமுக..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படவில்லை என்று முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அரசியலுக்கு வர விரும்புகிறேன், கட்சி வேலையில் ஈடுபடுகிறேன் அதை பொறுத்து வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருந்த உதயநிதி ஸ்டாலின்  முதன் முதலாக திமுகவின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுடன் தொண்டர்களாக கட்சிக் கொடியை கையில் ஏந்தியவாறு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு போராட்ட களத்தில் இணைந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட நிலையில் திமுகவும் நடிகராக உள்ள உதய ...
இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு மோடியின் பணமதிப்பிழப்பே காரணம் – எக்ஸ்.ரிசர்வ் வங்கி கவர்னர் குற்றச்சாட்டு

இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு மோடியின் பணமதிப்பிழப்பே காரணம் – எக்ஸ்.ரிசர்வ் வங்கி கவர்னர் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பே காரணம் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பே காரணமாக உள்ளது. அமைப்புசாரா தொழில்கள் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தத் தொழில்களில் பல தற்போது மூடப்பட்டு விட்டன. மேலும், அந்த சமயத்தில் அவற்றை நடத்தியவர்களால் தப்பிப் பிழைத்து மீண்டும் தொழில் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தணை அதிகரித்தாலும், அது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. ஜி.எஸ்.டியில் இருக்கும் குறைகளை, பிரச்சனைகளைச் சரிசெய்தால் அது நீண்ட நாட்களுக்கு பலனளிக்கும்'' என்று தெரிவித்தார்...
இசைஞானியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட ஆங்கில  நாளிதழ்..!

இசைஞானியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட ஆங்கில நாளிதழ்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
இசைஞானி இளையராஜாவிற்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டதை சாதியை சேர்த்து தலைப்பிட்டு செய்தி பிரசுரித்திருந்தது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். இந்த செய்திக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் இன்றைய நாளேட்டில் தங்களின் தவறுக்காக அந்த நாளிதழ் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது. இளையராஜாவிற்கு பத்ம விருது கொடுத்ததன் மூலமாக தலித்துகளை கவர்ந்து விட்டனர் என்று தலைப்பிட்டு செய்தியை பிரசுரித்திருந்தது.இந்த தலைப்பிற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் சாதிப் பெயரை குறிப்பிட்டு இளையராஜாவின் பத்ம விருது செய்தியை பிரசுரித்திருந்ததற்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மன்னிப்பு கேட்டுள்ளது. இளையராஜாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் எந்த நோக்குடனும் இந்த செய்தி வெளியிடப்படவில்லை என்றும் தலைப்பில் தவறான அர்த்தத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டதற்கு பகிரங்கமான மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அந்த நா...
இந்தியப் பெண் புகாரால் பாலியல் வழக்கில் சிக்கிய ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி..!

இந்தியப் பெண் புகாரால் பாலியல் வழக்கில் சிக்கிய ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
பிரபல ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீனின் (வயது 65) திரைமறைவு வாழ்க்கையின் மர்மங்கள் பற்றி ‘நியூயார்க் டைம்ஸ்’ ஏடு தொடர்ந்து செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பல பெண்கள், அவர் மீது பாலியல் புகார்களை அடுக்கினர். இந்த நிலையில் அவரிடம் அந்தரங்க உதவியாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளிப்பெண் சந்தீப் ரேஹலும் அவர் மீது பாலியல் புகார் எழுப்பி உள்ளார். 2013-15ம் ஆண்டுகளில் ஹார்வி வெயின்ஸ்டீனிடம் பணியாற்றிய இவர், நியூயார்க் தென்மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளார். 11 பக்கங்கள் கொண்ட புகார் மனுவில் அவர், வெயின்ஸ்டீனின் நிறுவனத்தில் தான் பணியாற்றியபோது கடுமையான பாலியல் தொல்லை சூழலில் பணிபுரிய வேண்டியது இருந்ததாகவும், முடிவில்லா பாலியல் தாக்குதல்களுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், வீட்டுப்பணியாளர்கள் தங்கள் வேலையை செய்ய வருவதற்கு முன்பாக வெயின...
செக்ஸ் குற்றச்சாட்டில் அமெரிக்கா குடியரசுக்கட்சியின் நிதித்தலைவர் ராஜினாமா

செக்ஸ் குற்றச்சாட்டில் அமெரிக்கா குடியரசுக்கட்சியின் நிதித்தலைவர் ராஜினாமா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அமெரிக்காவில் ஆளும் குடியரசுக்கட்சியின் தேசிய கமிட்டி நிதித்தலைவராக இருப்பவர் ஸ்டீவ் வின். கோடீஸ்வர தொழிலதிபரான வின் மீது சில நாட்களுக்கு முன்னர் செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்தது. தனது அலுவலக பெண் பணியாளரை கட்டாயப்படுத்தி தனது உறவுக்கு பயன்படுத்தினார் மற்றும் மசாஜ் செய்யும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து, ஸ்டீவ் வின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்தது. ஆனால், மேற்கண்ட குற்றச்சாட்டுகளை ஸ்டீவ் வின் மறுத்தார். தனது முன்னாள் மனைவியே இந்த பொய் செய்திகளுக்கு காரணம் என அவர் தெரிவித்தார். எதிர்ப்புகள் வலுத்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஸ்டீவின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக குடியரசு கட்சி தேசிய கமிட்டி தலைவர் மெக் டேனியல் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்...
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மரபல்ல  மட (த்தனமான) விளக்கம்..!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மரபல்ல மட (த்தனமான) விளக்கம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாஜக ராஜாவையும் சர்ர்ச்சைகளையும் பிரிக்கவே முடியாது போல... ஒன்னு அவர் பேசியது சிக்கலை ஏற்படுத்தும் அல்லது சிக்கல் வர்றமாதிரி அவர் பேசுவார்... இந்த முறை அவர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சங்கர மடத்தின் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்து சிக்கலை ஏர்படுத்திக் கொண்டார். ஆண்டாள் குறித்து தினமணி நாளிதழில் வைரமுத்து தவறாக எழுதியதாக சர்ச்சை கிளம்பியதையடுத்து வைரமுத்துவும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதியில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கடந்த சில நாட்கலாக பலத்த சர்ச்சைகளும், விவாதங்களும் நடந்து வந்த நிலையில் ,  வைத்தியநாதன் ஆண்டாள் சன்னதியில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார். அதே சமயம் , இவ்விவகாரத்தில் வைரமுத்து  ‘வருத்தம்’ மட்டும் தெரிவித்த  செயலை மறக்கடிக்கும் விதமாக புது விவகாரம் கிடைத்துள்ளது. சென்னையில் பா...
இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கையில், "இசை உலகின் தலை சிறந்த இசையமைப்பாளரான இளையராஜா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்ற இவருக்கு, இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது கிடைத்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தொல்லியல் துறையில் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமச்சந்திர நாகசாமிக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பத்ம விபூஷன் விருதினை பெற்ற இளையர...
‘தமிழக அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இல்லை’ நடிகை விஜயசாந்தி

‘தமிழக அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இல்லை’ நடிகை விஜயசாந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
 நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான விஜயசாந்தி   கூறியதாவது:– நான் தமிழக அரசியலில் ஈடுபடப்போவதாக வதந்திகள் உலா வருகின்றன. அதில் உண்மையில்லை. தமிழக அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இல்லை. ஆந்திர அரசியலிலேயே தீவிரமாக ஈடுபடுவேன். காங்கிரஸ் கட்சி எந்த பொறுப்பை கொடுத்தாலும் ஏற்றுக்கொண்டு பணியாற்றுவேன். சந்திரசேகரராவ் ஆட்சி மீது தெலுங்கானா மக்கள் அதிருப்தியில் உள்ளனர். 2019–ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆனால் ராகுல்காந்தி போட்டியிட சொன்னால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட தயார். விரைவில் தென் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கொண்டுவர பிரசாரம் செய்வேன்....