புதன்கிழமை, ஜூலை 22
Shadow

நடிகர்கள்

தனிக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி ரஜினிகாந்த் அறிவித்தார்

தனிக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி ரஜினிகாந்த் அறிவித்தார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தனிக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி ரஜினிகாந்த் அறிவித்தார் ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார். சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார். ரஜினி பேசுகையில் கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன். யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய். யுத்தத்தில் தோற்றால் இறப்பாய். யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள். நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று ரஜினி அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது....
ரிலீஸுக்கு முன்னாடியே பட வியாபாரம் முடிந்து விட்டது ‘மன்னர் வகையறா’வுக்கு கிடைத்த முதல் வெற்றி -தயாரிப்பாளர் சிங்காரவேலன்

ரிலீஸுக்கு முன்னாடியே பட வியாபாரம் முடிந்து விட்டது ‘மன்னர் வகையறா’வுக்கு கிடைத்த முதல் வெற்றி -தயாரிப்பாளர் சிங்காரவேலன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏ3வி சினிமாஸ் சார்பில் விமல் தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. கமர்ஷியல் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, சாந்தினி தமிழரசன், ரோபோ சங்கர், இளைய திலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, ஜெய பிரகாஷ், நீலிமா ராணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, தயாரிப்பாளர் சுவாமிநாதன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கல...
ரசிகர்கள் முன்னிலையில் அரசியல் திட்டத்தை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்!

ரசிகர்கள் முன்னிலையில் அரசியல் திட்டத்தை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்!

CINI NEWS, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் உள்ளவர் ரஜினிகாந்த். இவருக்கு வயது வித்தியாசமின்றி பட்டிதொட்டியெங்கும், ரசிகர்கள் உள்ளனர். பெரியவர் முதல் குழந்தைகள் வரை இவரது நடிப்பு மற்றும் ஸ்டைலுக்கு ரசிகர்கள். திரைப்படங்களில் மட்டுமின்றி அவ்வப்போது பொது வெளியிலும் அரசியல் கருத்துக்களை கூறியவர் ரஜினிகாந்த் ரஜினிகாந்த்தின் இந்த நடவடிக்கைகளால் அவர் அரசியலில் ஈடுபட போகிறார் என்ற பேச்சு 1990கள் முதலே இருந்தது. ஆனால் ரஜினிகாந்த் இதுவரையில் அந்த விஷயத்தில் பிடிகொடுக்கவேயில்லை. நடிப்பு மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டையும் மட்டும் இரு கண்களாக பாவித்து வருகிறார் ரஜினிகாந்த் இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிப்பு துறையில் இருந்து ஓரளவுக்கு விலகி, அரசியலில் இறங்க உள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில், கடந்த 5 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த். டிசம்பர் 31ம் த...
ரஜினியை அரசியலுக்கு வரவேற்கும் லாரன்ஸ் உருவாக்கிய பாடல் “போருக்கு வா தலைவா”

ரஜினியை அரசியலுக்கு வரவேற்கும் லாரன்ஸ் உருவாக்கிய பாடல் “போருக்கு வா தலைவா”

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, Trailer, செய்திகள், டிரைலர்கள், நடிகர்கள், வீடியோ
  நடிகா் ரஜினிகாந்த் வெகுகாலமாக அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இருந்தாலும் வெளிப்படையாக அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். சமீபத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, 'போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' எனக் கூறியது அவரது அரசியல் பிரவேசத்துக்கான அறிவிப்பாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. https://www.youtube.com/watch?v=o7A9hryfrJ4 ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் வண்ணம் ராகவா லாரன்ஸ் "போருக்கு வா தலைவா" என்ற பாடலை உருவாக்கி இன்று வெளியிட்டிருக்கிறார்  ...
அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது ரஜினி பேச்சால் ரசிகர்கள் மீண்டும் குழப்பம்..!

அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது ரஜினி பேச்சால் ரசிகர்கள் மீண்டும் குழப்பம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது என்ற ரஜினியின் பேச்சால் அரசியல் அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்கள் மீண்டும் குழப்பம்..! சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்துவரும் ரஜினி அரசியல் அறிவிப்பை எப்போது வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அவரோ, தன் நடிப்பில் உருவாகும் 2.0 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு முன்பாக சிறிது நேரம் ரசிகர்களிடையே உரையாற்றுகிறார். அரசியல், பொதுவாழ்க்கை குறித்தே அவரது பேச்சு அமைந்திருந்த நிலையில் ஐந்தாம் நாளான இன்று அவரது பேச்சு தனது திரையுலக வாழ்க்கையை பற்றியே அமைந்திருந்தது. “என் நடிப்புத் திறமையை முதன் முதலில் கண்டுபிடித்தது என் நண்பன் ராஜ்பகதூர். 1973இல் முதல் முறையாக சென்னை வந்தேன். 1960களில் மதராஸ் குறித்து கர்நாடகாவில் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். சென...
ஆண்டு கடைசி நாளில் வெளியாகும் விக்ரமின் ஸ்கெட்ச் பட டைட்டில் பாடல்..!

ஆண்டு கடைசி நாளில் வெளியாகும் விக்ரமின் ஸ்கெட்ச் பட டைட்டில் பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஸ்கெட்ச் படத்தின் டைட்டில் பாடல் வெளியீடு தொடர்பான அறிவிப்பை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார். விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஸ்ரீமன், ராதாரவி, ரவி கிஷன், பாபுராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசையமைக்க, ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். இந்தப் படத்தை ‘மூவிங் ஃப்ரேம்’ என்ற புதிய நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி.எஸ்.தாணு ‘வி கிரியேஷன்ஸ்’மூலம் தயாரித்து வருகிறார். சமீபத்தில், படக்குழுவால் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் கனவே கனவே, அட்சி புட்சி, சீனி சில்லாளே ஆகிய மூன்று பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. புத்தாண்டு கொண்டாட்டமாக டிசம்பர் 31ஆம் தேதி படத்தின் டைட்டில் பாடல் வ...
திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த ரஜினிகாந்த்

திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினி, தன் ரசிகர்களை 4 வது நாளாகச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவருகிறார். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்தித்து வருகிறார். காலை சுமார் 8.30 மணிக்கு ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினி, ரசிகர்கள் மத்தியில் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:- என் நண்பர்கள் அதிகம் வாழும் நகரம் கோவை என்று பேச்சைத் தொடங்கிய ரஜினி, அங்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். எனது குரு சச்சிதானந்தர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர். எனக்கு மந்திர உபதேசம் செய்தவர் சச்சிதானந்த சுவாமிகள். சுவாமி தயானந்த சரஸ்வதி எனது குரு. சச்சிதானந்த சுவாமிகள் சொல்லியே பாபா படம் எடுத்தேன். அதேபோல் தயானந்த சரஸ்வதி எனக்கு குரு. கோயம்புத்தூர் விமான நிலையம் போகும் போதெல்லாம் எனக்கு ஒரு ஞாபகம் வரும். ஆன்மிகத்திற்கும் ஓரளவுக்கு பப்ளிசிட்டி தேவை. கோவை வ...
மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் தனுஷ்..!

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் தனுஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என நடிகர் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்க இருக்கிறார். மாரி-2 படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி இரண்டாவது பாதியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பிலும் தனுஷ் ஒப்பந்தமாகி இருந்தார். அந்த படத்தை தனுஷே இயக்குவதாக சமீபத்தில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் தனுஷே வெளியிட்டிருக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் அவரது அடுத்த படத்தை இயக்குகிறார். அதில் நாயகனாகவும் நடிக்கிறார். தனுஷின் 37-வது படமாக உருவாகும் இந்த படம் குறித்த மற்ற...
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் “கொரில்லா”

சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் “கொரில்லா”

CINI NEWS, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"   ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் தான் "கொரில்லா".   ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார். இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக பயிற்சிப்படுத்தப்பட்ட சிம்பன்சீயை வைத்து இப்படம் தயாராகவுள்ளது. இந்த படத்தில் நடிக்கவுள்ள சிம்பன்சீ தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற விலங்குகள் பயிற்சி மையமான ‘சாமுட்’ பயிற்சி மையத்தால் பயிற்றப்பட்டது.    இந்த பயிற்சி மையத்தில் இருந்து பயிற்றப்பட்ட சிம்பன்சீகள்தான் ஹேங்ஹோவர்-2, ப்ளேனட்ஸ் ஆஃப் தீ ஏப்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த சிம்பன்சீகளாகும்.   இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. இத்திரைப்படம் குறித்து இய...
அரசியல் காலம்தான் முடிவு செய்யும்… 31ம் தேதிக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது – ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினி

அரசியல் காலம்தான் முடிவு செய்யும்… 31ம் தேதிக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது – ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கடந்த 26ந்தேதியில் இருந்து சந்தித்து வருகிறார்.  அவர்களுடன் புகைப்படமும் எடுத்து வருகிறார்.  இந்த நிலையில், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று 4வது நாளாக ரசிகர்களை சந்திக்கிறார்.  கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்ட ரசிகர்களுடன் இந்த சந்திப்பு நடக்கிறது. அவர் ரசிகர்கள் மத்தியில் பேசும்பொழுது, 31ந்தேதிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்றன என கூறினார்.  இதனை தொடர்ந்து ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து ஆரவாரம் எழுந்தது.  தொடர்ந்து அவர், என் நண்பர்கள் அதிகம் வாழும் ஊர் கோவை.  என் குருநாதர் சச்சிதானந்த் கோவை மேட்டுப்பாளையத்தில் பிறந்தவர். பெயர், புகழால் மரியாதை கிடைக்கும்.  ஆனால் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்தே மக்கள் நம்மை மதித்திடுவார்கள். காலம்தான் மிக முக்கியம்.  காலம் வரும்பொழுது அனைத்தும் தன்னாலே மாறும்.  சினிம...