ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

நடிகைகள்

காதலித்த நடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி

காதலித்த நடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  ப்ளஸ் டூ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய சுஜா வருணி, மிளகா, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான சுஜா வருணியும், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவகுமாரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அவர்களது திருமணம் சென்னையில் இன்று நடந்தது முடிந்தது. திருமணத்தில் நடிகர் சிவக்குமார், அஸ்வின், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் விஷ்ணு வர்தன், சினேகன், ஸ்ரீப்ரியா, வடிவுக்கரசி, லிசா, சுஹாசினி, ராதிகா சரத்குமார், விஜி சந்திரசேகர், கணேஷ் வெங்கட்ராம், சந்தியா உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் துர்கா ஸ்டாலின் பங்கேற்றனர். சிவகுமாரை திருமணம் செய்துகொள்ள தான் அதிர்ஷ்டம் செய்தவள் என்று நடிகை சுஜா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
அமலாபாலின் அதோ அந்த பறவை போல

அமலாபாலின் அதோ அந்த பறவை போல

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அமலா பால் நடிக்கும் அட்வெஞ்சர் த்ரில்லர் படம், அதோ அந்த பறவை போல! செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், அதோ அந்த பறவை போல. அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அமலா பால் கதைநாயகியாக நடித்துள்ளார். கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது, ‘அதோ அந்த பறவை போல’. அமலாபால் கதைநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்...
போலீஸ் அதிகாரியான ஆண்ட்ரியா !

போலீஸ் அதிகாரியான ஆண்ட்ரியா !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
*போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா* பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புரொடக்ஷன் நம்பர் 2. இதில் ஆண்ட்ரியா, ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தில் சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்’ உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். ஆண்ட்ரியா இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்‌ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்...
விக்னேஷ் சிவனுடன் பிறந்த நாள் கொண்டாடிய நயன்தாரா

விக்னேஷ் சிவனுடன் பிறந்த நாள் கொண்டாடிய நயன்தாரா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. இருவரும் லிவிங் டுகெதர் பாணியில் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்தி பரவுகிறது. இருவரும் அதை மறுக்காத நிலையில் ஜோடியாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விக்னேஷ் சிவனுடன் நள்ளிரவு லேடி சூப்பர் ஸ்டார் நயன் என்று எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார். மேலும் அலங்கரிக்கப்பட்ட ‘தங்கமே’ என்ற பெயர் பலகையும் இடம் பெற்றிருந்தது. நயன்தாராவின் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகிறார்கள். ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படக்குழுவினர் நயன்தாராவின் பர்ஸ்லுக் போஸ்டரையும் வெளியிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார்கள்...
படுகவர்ச்சியான படத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே

படுகவர்ச்சியான படத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  ராதிகா ஆப்தே இந்தி சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கபாலியில் நடித்த அவருக்கு மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் ஆசை உள்ளது. இந்நிலையில் மேக்சிம் பத்திரிகைக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேக்சிம் பத்திரிகையின் அட்டைப் படத்தில் ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி புகைப்படம் வெளியாகி உள்ளது. லெதர் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். ராதிகா ஆப்தேவின் புகைப்படங்களை மேக்சிம் இந்தியா டுவிட்டரில் வெளியிட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் இது போன்று கவர்ச்சி போஸ் கொடுப்பது சாதாரணம். மேக்சிம் பத்திரிகை வெளியிட்டுள்ள புகைப்படங்களை ராதிகாவும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேக்சிம் போட்டோஷூட் வீடியோவையும் ராதிகா ஆப்தே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்....
வரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்

வரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
90-களில் முக்கியமான கதாநாயகனாக வலம் வந்தவர் பிரசாந்த். சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். இந்நிலையில் நீண்ட இடை வெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ஜானி. இயக்குனர் ஜீவா சங்கரின் உதவியாளர் வெற்றிச்செல்வன் இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரசாந்துடன் இணைந்து சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் தியாகராஜன் தயாரித்துள்ளார். ஜானி படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை பிரசாந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது வரை படத்தின் டிரைலரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். கள்ள நோட்டை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக ஜானி உருவாகி இருப்பதை டிரெய்லரை பார்க்கும்போது அறிய...
மீடூ புகாரில் பிரபலமான சின்மயிக்கு செக் வைத்த ராதாரவி..!

மீடூ புகாரில் பிரபலமான சின்மயிக்கு செக் வைத்த ராதாரவி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருபவர் பாடகி சின்மயி. இவர் பல படங்களுக்கு பின்னணி வசனங்களையும் பேசியுள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடிகை திரிஷாவுக்கு பின்னணி வசனம் பேசினார். இவர் மீடூ விவகாரத்தில் கடந்த அக்டோபரில், கவிஞர் வைரமுத்து தனக்கும், சில பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த நிலையில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் ராதாரவிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த 2 பெண்களுக்கு பாடகி சின்மயி ஆதரவாக பேசினார். இதனால் தனது டப்பிங் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என தெரிவித்து உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக...
திமிரு புடிச்சவன் விமர்சனம்

திமிரு புடிச்சவன் விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம், வீடியோ
திமிரு புடிச்சவன் விமர்சனம் சிறார் குற்றவாளிகள் செய்கிற கொடூரங்களை செய்திகளில் பார்க்கும்போது நம்மையறியாமல் ஒரு பதட்டம் ஏற்படும்... அந்த குழந்தைகள் தப்பித்தவறியும் நமக்கு வேண்டியவர்களாக இருக்கக்கூடாது என்று மனசு வேண்டிக்கொள்ளும்... ஆனால் அம்மா அப்பா இல்லாத சூழலில் தம்பியை நல்லபடியாக வளர்க்கப்போராடும் அண்ணன்... அண்ணனின் கெடுபிடி பாசத்தை உணராத தறுதலை தம்பி இந்த காம்பினேஷனில் உருவான கதைதான் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன். போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனி காக்கி யூனிபார்முக்கு கொஞ்சமும் கவுரவம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெடும் சூழலில் தவிர்க்க முடியாத கட்டாயம் ஏற்படும்போது உயிராய் நேசித்த சொந்த தம்பியையே சுட்டுக் கொல்கிறார். அந்த கொலைக்கு பிராயச்சித்தம் தேட புறப்படும்போது சிறார் குற்றவாளிகள் என்ற மிகப்பெரிய நெட்வொர்க் தெரிகிறது... அதன் தலைவனை தன் பாணியில் எப்படி...
கமல் மகளின் அந்தரங்க படங்களை வெளியிட்டது யார் என தேடுகிறது மும்பை போலீஸ்!

கமல் மகளின் அந்தரங்க படங்களை வெளியிட்டது யார் என தேடுகிறது மும்பை போலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌‌ஷரா ஹாசன். இந்தியில் அமிதாப் பச்சனும், தனுஷும் இணைந்து நடித்த ‌ஷமிதாப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் அஜித் குமார் நடித்த விவேகம் படத்திலும் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது விக்ரமுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் அக்‌‌ஷராவின் அந்தரங்க படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுபற்றி அக்‌‌ஷரா வெளியிட்ட அறிக்கையில் ’இந்தப் படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் ஷூட்டின்போது எடுக்கப்பட்டவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை இணையத்தில் கசிந்துள்ளன. இவ்விவகாரத்தில் புகார் அளிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்’ என்று கூறியிருந்தார். இதனையடுத்து இது தொடர்பாக மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர...