வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சினி நிகழ்வுகள்

போலி பில் போட்டு கோடிகள்  சுருட்டல் ஆட்டம் ஆடிய அலமேலு அதிர்ச்சியில் திரையுலகம்

போலி பில் போட்டு கோடிகள் சுருட்டல் ஆட்டம் ஆடிய அலமேலு அதிர்ச்சியில் திரையுலகம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
போலி பில் போட்டு கோடிகள் சுருட்டல் ஆட்டம் ஆடிய அலமேலு அதிர்ச்சியில் திரையுலகம் திரையுலகில் சினிமா எடுத்து ரிலீஸ் செய்வதற்குள் தயாரிப்பாளருக்கு விழிபிதுங்கி ரத்தம் சுண்டி நாக்கு தள்ளி என சொல்லிக் கொண்டே போகலாம் அந்தளவுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கலை சந்தித்துதான் ஒவ்வொரு படங்களும் ரிலீஸ் ஆகிறது. இதற்கு காரணம், பல காரணங்களை சொல்லலாம். முக்கியமான காரணம், சரியான திட்டமிடுதல் இல்லாததுதான். விளம்பர மோகம் இருக்கிற சினிமாகாரர்களை நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் யாரும் ஈசியாக ஏமாற்றி விடலாம் என்பதற்கு இப்போது சொல்லப்போகும் செய்தி பெரிய உதாரணம். ‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டாண்டா’ என்று ஒரு படத்தில் வசனம் வரும் அதைப்போலவே நுனி நாக்கு ஆங்கிலமும், பெண் என்ற தகுதியும் இருந்தால் போதும் யாரையும் ஏமாற்றி விடலாம் அவர்கள் சொல்வதை அப்படியே நம்பும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. சென்னை தி.நகரில் ச...
ரஜினிகாந்தின் 2.0 படத்தை ரிலீஸ் செய்வதில் நீடிக்கும் குழப்பம்

ரஜினிகாந்தின் 2.0 படத்தை ரிலீஸ் செய்வதில் நீடிக்கும் குழப்பம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்தின் 2.0 படம் எப்போது வெளியாகும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் உள்பட படத்தில் நடித்துள்ள நடிகர்-நடிகைகள் அனைவரும் ‘டப்பிங்’ பேசியும் முடித்து விட்டனர். கடந்த வருடம் தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். தொழில் நுட்ப பணிகள் தாமதமானதால் ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர். பின்னர் ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் அன்று படம் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2.0 படத்துக்கு பதில் ரஜினிகாந்தின் காலா படம் அதே நாளில் வெளியாகிறது. 2.0 படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. தற்போது இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதிக்கு வெளியாக இருக...
கடனை திருப்பி செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கடனை திருப்பி செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
கோச்சடையான் படம் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வெளியானது. ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் எடுப்பதற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார். ஆனால் இந்த கடனில் ரூ. 1½ கோடி மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆட்பீரோ நிறுவனத்திடம் வாங்கிய ரூ.10 கோடியில் ரூ.8½ கோடியை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்த வேண்டும். கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லதா ரஜினி காந்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது செலுத்துவீர்கள் என்று கேள்வி கேட்டது. அதோடு எதற்காக கடனை செலுத்தவில்லை என்று கூறுங்கள். இதற்கான பதிலை மதியம் 12.30 மணிக்குள் தெரிவிக்குமாறும் லதா ரஜினிகாந்திற்கு சுப்ரீம் கோர்ட்ட...
சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்..!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். சிவாவின் நெருங்கிய நண்பனாகவும், சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலின் மூலம் மிகவும் பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை சிவா தயாரிக்கிறார். கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்த படம் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தியது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, ‘திரைத்துறை தான் எனக்கு பெயரும், புகழும் கொடுத்தது. இந்த துறைக்கு நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். சாதிக்கும் கனவில் நாங்கள் சுற்றிய போது எல்லா நிலைகளிலும் என்னுடன் இருந்த, என் நண்பர்களின் கனவையும் புரிந்து கொள்வது என் கடமையாக உணர்கிறேன். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் அரு...
விஜய்யுடன் நடிக்கும் போது ரசிகையாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

விஜய்யுடன் நடிக்கும் போது ரசிகையாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இப்போது மீண்டும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாகி இருக்கிறார். இதுபற்றி கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி.... “மீண்டும் விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை என்னுடன் நடிக்கும் நடிகராக எப்போதும் பார்க்க முடியாது. அவருடன் நடிக்கும் போது எனக்கு பிடித்த நடிகருடன் இருக்கும் ரசிகையாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன். நான் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘மகாநதி’யில் நடித்திருக்கிறேன். நாக் அஸ்வின் இதை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தொடங்கியபோது மேக்கப்போட மட்டும் மூன்றரை மணி நேரம் ஆனது. பின்னர் அது பழகிப்போனது. சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவ்வளவு பெரிய நடிகை பாத்திரத்தில் நடிக்க பயமாக இருந்தது. இப்போது இந்த படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. சாவித்ரி...
‘கலர்ஸ் தமிழ்’ சேனல் உதவியோடு  ஆர்யாவின் பெண் தேடும் சுயம்வரம்..!

‘கலர்ஸ் தமிழ்’ சேனல் உதவியோடு ஆர்யாவின் பெண் தேடும் சுயம்வரம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?’ என்ற கேள்விக்கு முன்பிருந்தே, தமிழகத்தில் பதில் தேடப்பட்டுக்கொண்டிருப்பது ‘இந்த ஆர்யாவுக்கு எப்ப பாஸ் கல்யாணம்?’ என்ற கேள்விக்குத்தான். சிலர் ஆர்யா செய்யும் சேட்டைகளால், அதனால் ஏற்படும் பொறாமையால் இந்தக் கேள்வியை முன்வைத்தாலும் ஒருகட்டத்தில் அவரது நலனுக்காகச் சொல்வது போன்றே இந்தக் கேள்வி பரிணமித்துவிட்டது. அதனால் இதற்குப் பதில் தேடும் முயற்சியாக ஆர்யாவுடன், தமிழகத்தில் களமிறங்கியிருக்கிறது ‘கலர்ஸ் தமிழ்’(Colors Tamil) சேனல். சில வாரங்களுக்கு முன்பு, நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் ‘என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள்’ என்று வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அந்த எண்ணுக்கு உலகம் முழுவதிலுமிருந்து எழுபதாயிரம் பெண்கள் போன் செய்திருக்கிறார்கள். அப்படிக் கிடைத்த பெண்களின் எண்ணுக்கு, அ...
நயன்தாராவுக்கு ஏற்றது போல் கேரக்டரை மாற்றினேன் – இமைக்கா நொடிகள் இயக்குநர்

நயன்தாராவுக்கு ஏற்றது போல் கேரக்டரை மாற்றினேன் – இமைக்கா நொடிகள் இயக்குநர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘டிமாண்டி காலனி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. இவர் தற்போது நயன்தாராவை வைத்து இமைக்கா நொடிகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அதர்வா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் அஜய் ஞானமுத்து அளித்துள்ள பேட்டியில், “முதலில் இந்தக் கதையை எழுதும்போது இரண்டு ஹீரோக்கள் கதையாகத்தான் எழுதினேன். அதன்பிறகுதான் ஒரு கேரக்டரை மட்டும் நயன்தாராவுக்கு ஏற்றது போல் மாற்றினேன். ஆனால், நயன்தாரா இந்தக் கதையில் நடிப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. காரணம், கதைப்படி துப்பறியும் நிபுணராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. எனவே, துப்பாக்கியைக் கையாள்வதிலும், வில்லன்களைத் துரத்திப் பிடிப்பதிலும் சில சிக்கல்கள் இருந்தன. அந்தக் காட...
அரசியலில் தனக்கு மூத்தவரான விஜயகாந்தை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்..!

அரசியலில் தனக்கு மூத்தவரான விஜயகாந்தை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில், இன்று  அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன். அப்போது, அரசியலில் தனக்கு மூத்தவரான விஜயகாந்தைச் சந்தித்ததாகத் தெரிவித்தார். வரும் பிப்ரவரி 21ஆம் தேதியன்று தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். அதற்கு முன்னதாக, தனக்கு நெருக்கமான பிரபலங்களையும் அரசியல் கட்சித்தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று  கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் நல்லகண்ணுவைச் சந்தித்துப் பேசியிருந்தார். பிப்ரவரி 18 நேற்று   நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன். இந்த நிலையில், இன்று அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன். அப்போது, நீண்டநாள் ...
நடிகை பிரியா வாரியர் மீது போலீசில் அடுத்தடுத்து புகார்..!

நடிகை பிரியா வாரியர் மீது போலீசில் அடுத்தடுத்து புகார்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
‘ஒரு அடார் லவ்' படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் தங்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாகப் படத்தின் இயக்குநர், நடிகை பிரியா வாரியர் மீது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றவர் இளம் நடிகை பிரியா வாரியர். அந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பட ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் நாளுக்கு நாள் பிரியா வாரியரின் புகழ் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதே சமயம் இந்தப் பாடல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ஒரு வரி மத உணர்வைப் புண்படுத்துவதாக உள்ளதாக ஐதராபாத் போலீச...
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா

ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயான பின்பு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் தனது சினிமா பிரவேசத்தை தொடங்கினார். இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் அவர் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தநிலையில் வித்யா பாலன் நடித்துள்ள ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் கதையாகும். வித்தியாபாலன் நடித்துள்ள வேடத்தில் ஜோதிகா நடிப்பார் என்றும் இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த மொழ...