திங்கட்கிழமை, மே 25
Shadow

HOME SLIDER

ஆஜராக வேண்டும்… நடிகை அமலா பாலுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு

ஆஜராக வேண்டும்… நடிகை அமலா பாலுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஆஜராக வேண்டும்... நடிகை அமலா பாலுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு நடிகை அமலா பால் இந்த வரியை தவிர்ப்பதற்காக, புதுச்சேரியில் வசிப்பதுபோல் போலி ஆவணங்களை கொடுத்து, புதுச்சேரியில் தனது சொகுசு காரை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, வரி ஏய்ப்பு செய்ததாக அமலா பால் மீது கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக, முன்ஜாமீன் கோரி, கேரள ஐகோர்ட்டில் அமலா பால் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதி ராஜா விஜயராகவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தை விசாரிக்கும் மாநில குற்றப்பிரிவு போலீஸ் முன்பு, வருகிற 15–ந் தேதி அமலா பால் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்....
படைப்பாளி வைரமுத்துவை  தட்டி கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை – H.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை

படைப்பாளி வைரமுத்துவை தட்டி கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை – H.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழகத்தில் தனிமனித உரிமை பறிக்கப்பட்டு எவ்வளவோ நாட்களாகிவிட்டது. எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லமல் போய்விட்டது. மணிமேகலையும், சிலப்பதிகாரமும் இரட்டை காப்பியங்கள் என்றால், கவிப்பேரரசு எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசங்கள், கருவாச்சிக்காவியமும் எளிய மனிதர்களின் காப்பியமில்லையா. அந்த அளவில் தமிழை எளிமை படுத்திய கவிஞனை இழி சொற்களால் எப்படி பேசலாம். வைரமுத்து தனி மனிதனல்ல. தமிழினத்தின் பெரு அடையாளம். ஒரு படைப்பாளன் தன் கருத்துக்களை சொல்லலாம். அல்லது மேற்கோள் காட்டலாம் அதை அட்சர சுத்தமாக தவறென தட்டி கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை என இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் ‘எவனுக்கும்’ அதிகாரமில்லை என பாஜகவைச் சேர்ந்த தேசிய செயலாளர்  H.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சமீபத்தில் ஆண்டாள் குறித்து வைரமுத்து ஒரு புத...
தலை நகரின் தலைகுனிவு… அரசின் அலட்சியம்… அவலத்தின் உச்சம்… நாய் வண்டியில் பயணப்பட்ட சென்னைவாசிகள்..!

தலை நகரின் தலைகுனிவு… அரசின் அலட்சியம்… அவலத்தின் உச்சம்… நாய் வண்டியில் பயணப்பட்ட சென்னைவாசிகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தலை நகரின் தலைகுனிவு... அரசின் அலட்சியம்... அவலத்தின் உச்சம்... நாய் வண்டியில் பயணப்பட்ட சென்னைவாசிகள்..! போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களை நாய் வண்டியில் ஏற்றிச் செல்கின்றனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கத்தில் இருந்து பயணிகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நாய் வண்டியில் அழைத்து செல்லப்படுகின்றனர். பொதுமக்கள் நாய் வண்டி என்றும் பாராமல், அதில் கட்டணம் கொடுத்து பயணம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் நாய் வண்டியில் அவசர அவசரமாக ஏறிச் செல்லும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் வெளியானதும் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. தமிழகத்தின் தலை நகரில்... அதுவும் சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நிலையில் 8 நாட்களை தாண்டியும் வேலை நிறுத்தம் செய்யும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக...
‘ இந்துத்துவா பயங்கரவாதிகள் பா.ஜனதாவினர் தான்’ சித்தராமையா காட்டம்

‘ இந்துத்துவா பயங்கரவாதிகள் பா.ஜனதாவினர் தான்’ சித்தராமையா காட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கர்நாடக அரசு இந்துக்களுக்கு எதிரானது என பா.ஜனதா தலைவர் அமித் ஷா பேசியதற்கு நேற்று பதிலடி கொடுத்த முதல் மந்திரி சித்தராமையா, பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள் ஆகியவை தீவிரவாத இயக்கங்களையே வளர்க்கிறது என்றார். “யாரும் அமைதியை சீர்குலைப்பதை காங்கிரஸ் அரசு பொறுத்துக் கொள்ளாது. அது எஸ்டிபிஐ ஆக இருக்கட்டும், பஜ்ரங்தள் அமைப்பாக இருக்கட்டும், வேறு எந்தஒரு அமைப்பாகவும் இருக்கட்டும் ஒருபோதும் அரசு சகித்துக் கொள்ளாது என்றார் சித்தராமையா. சித்தராமையாவின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இந்துக்களை பயங்கரவாதி என்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்டது, இதற்கிடையே பயங்கரவாதிகள் என கூறிய சித்தராமையாவை கண்டித்து கர்நாடகத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என பா.ஜனதா கூறிஉள்ளது. இவ்விவகாரம் சர்ச்சையாகிய நிலையில் சித்தராமையா இன்று செய்தியாளர்...
குடியரசு தினத்தை குறிவைக்கும் சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு-2’

குடியரசு தினத்தை குறிவைக்கும் சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு-2’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
குடியரசு தினத்தை குறிவைக்கும் சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு-2’ சுந்தர்.சி-யின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கலகலப்பு-2’. சுந்தர். சி இயக்கத்தில் ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நந்திதா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சதீஷ், ரோபோ ஷங்கர், மனோ பாலா, விடிவி கணேஷ், வையாபுரி, சந்தான பாரதி, விச்சு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஏற்கனவே ஒரு சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகியிருக்கும் நிலையில், பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான இந்த படத்தின் கலர்புல்லான டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்...
காதலர் தினத்தை குறிவைத்து பிப்ரவரி 9-ம் தேதி பாலாவின்  ‘நாச்சியார்’ ரிலீஸ்..!?

காதலர் தினத்தை குறிவைத்து பிப்ரவரி 9-ம் தேதி பாலாவின் ‘நாச்சியார்’ ரிலீஸ்..!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 9-ஆம் தேதி பாலாவின் 'நாச்சியார்’ ரிலீஸ்..! பி ஸ்டூடியோஸ் மூலம் பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’. ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜோதிகா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார். நாச்சியார் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ஏகோபத்திய வரவேற்பை பெற்ற நிலையில், டீசரின் முடிவில் ஜோதிகா பேசம் கெட்ட வார்த்தையால் படம் சர்ச்சையிலும் சிக்கியது. இதையடுத்து படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி படம் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வ...
ரசிகர்களோடு ‘சொடக்கு’ பாடலுக்கு சூர்யா குத்தாட்டம்..!

ரசிகர்களோடு ‘சொடக்கு’ பாடலுக்கு சூர்யா குத்தாட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரசிகர்களோடு 'சொடக்கு' பாடலுக்கு சூர்யா குத்தாட்டம்..! சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவாகி இருக்கும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டகியுள்ளது. குறிப்பாக ‘சொடக்கு மேல...’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் படத்தின் புரொமோஷனுக்காக சென்ற சூர்யா அங்கு ரசிகர்களுடன் 'சொடக்கு' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறார் கேரளாவில் சூர்யாவுக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. அதனால், அவரது படங்கள் வெளியாகும்போது கேரளாவிலும் புரொமோஷன் பணிகளைச் செய்வது வழக்கம். அதன்படியே, இந்த முறையும் கொச்சினில் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட...
எட்டாவது நாள்… தீர்வை எட்டாமல் நீளும் போக்குவரத்து போராட்டம்… அரசின் அலட்சியமா…!

எட்டாவது நாள்… தீர்வை எட்டாமல் நீளும் போக்குவரத்து போராட்டம்… அரசின் அலட்சியமா…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
எட்டாவது நாள்... தீர்வை எட்டாமல் நீளும் போக்குவரத்து போராட்டம்... அரசின் அலட்சியமா...! போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் இன்று நல்ல முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒருசில தினங்களே உள்ள நிலையில் தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த தமிழகமும் இன்று வழங்கப்படும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியூ உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களும் கடந்த ஜனவரி 4ஆம் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றன. இன்றுடன் போராட்டம் எட்டாவது நாளை எட்டியுள்ளது. இதுதொடர்பாக நேற்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது மனசாட்சியோடு முடிவு செய்து போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்...
ஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் – அரசுக்கு மிருகநல வாரியம் கடிதம்

ஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் – அரசுக்கு மிருகநல வாரியம் கடிதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - தமிழக அரசுக்கு மிருகநல வாரியம் கடிதம் ஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தேசிய மிருகநல வாரியம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக தேசிய மிருகநல வாரியத்தின் செயலாளர் எம்.ரவிக்குமார், தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஐ.ஜி.க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- * அரசு அறிவித்துள்ள இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். * ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பான நிகழ்ச்சிகள் மிருகவதை தடை சட்டத்தின் கீழ் வரையறுத்துள்ளபடி பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை கலெக்டர்கள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும். * ஜல்லிக்கட்டு பற்றிய தகவல் மற்றும் பதிவு செய்யப்பட்ட காளைகள் குறித்த தகவல்களை ஒரு மாதத்துக்கு முன்பே மாநில மிருகநல வாரியத்துக்கு கலெக்டர்கள் தெரிவிக்க...