Tag: Nayanthara
நயன்தாரா மேற்பார்வையில் கிரிக்கெட் விளையாடும் ரஜினி – தர்பார் ஸ்பெஷல்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தில் தினம் ஒரு அப்டேட் வந்து ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் ‘தர்பார்’. ‘சர்கார்’ படத்துக்கு பிறகு முருகதாஸ் இந்த படத்தை இயக்குவதால், ரஜினியின் பொலிட்டிக்கல் என்ட்ரிக்கு இந்த படம் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதேபோல் தினமும் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியாகி ரஜினி ரசிகர்களின் பல்ஸ் ரேட்டை எகிறச் செய்திருக்கிறது. ரஜினி படத்தில் எதாவது ஒரு விளையாட்டை சேர்த்து காமெடியோ, சண்டைக் காட்சிகளோ வைப்பது தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு பழக்கமான விஷயம்.
தர்மதுரை’ படத்தில் வரும் கபடி காட்சி, ‘பாபா’ படத்தில் வாலிபால் சண்டைக் காட்சி, ‘...
`தர்பார்’ ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகிபாபு
ரஜினியின் 167-வது படமான ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் `தர்பார்’ படத்தின் தகவல்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது
இதில் படப்பிடிப்பு நடைபெறும் இடம் மருத்துவமனை போல உள்ளது. அங்கிருந்து நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு இருவருடன் ரஜினி நடந்து வருகிறார். யோகிபாபுவின் காஸ்டியூம் பார்க்கும்போது, அவர் ரஜினியின் அசிஸ்டன்டாக நடிக்கலாம் என தோன்றுகிறது.
இதற்கிடையே ரஜினிகாந், நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்களும் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது....
A.R.முருகதாஸ் -ரஜினிகாந்த் கூட்டணியின் “தர்பார்” பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மிக பிரபல நிறுவனமான லைகா தயாரிக்கும் பிரமாண்டமான படம் இது. ரஜினிகாந்த் மீண்டும் ஒரு ஜாலியான கமர்சியல் படத்தில் நடிக்கப் போகிறார் என்றார்கள்.
அதே நேரம் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைத்ததாக செய்திகள் வெளியானது.
ஆனால் அதை மறுத்த இயக்குனர் முருகதாஸ் விரைவில் டைட்டில் அறிவிக்கப்படும் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன் போட்டோ ஷூட் நடைபெற்றது.
இந்த நிலையில் நாளை 11ம் தேதி முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
முருகதாஸ், ரஜினிகாந்த் உட்பட படக்குழு இன்று புறப்பட்டு மும்பை செல்கிறார்கள்.
இந்த படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அவரும் மும்பை செல்கிறார்.
இந்த சூழலில் படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தர்பார் என பேருடன் வெளியா...
ஐரா – கோடங்கி விமர்சனம்
நயன்தாரா முதல் முதலாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம்தான் ‘ஐரா’. மா, லட்சுமி என்ற இரு குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
யமுனா என்ற கதாபாத்திரத்தில் வரும் நயன்தாரா, மீடியாவில் பணிபுரிகிறார். வீட்டில் திருமண பேச்சு எடுப்பதால், கோபித்துக் கொண்டு பொள்ளாச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்து விடுகிறார் யமுனா.
அங்கு ஒரு வண்ணத்துப்பூச்சி அமானுஷ்யமாக யமுனாவை வட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் கலையரசன் சந்திக்கும் சிலர் மர்மமான முறையில் இறந்து கொண்டிருக்கின்றனர்.
மர்மமான முறையில் இறப்பவர்களை கொல்வது இறந்து போன பவானி(மற்றொரு நயன்தாரா)தான் என்று கண்டுகொள்கிறார் கலையரசன்.
யமுனாவையும் பவானி கொல்ல நினைக்கிறார்.
எதற்காக யமுனாவை பவானி கொல்ல நினைக்கிறார்..?? மற்ற நபர்களை பவானி ஏன் கொன்றார்..?? கலையரசனுக்கு பவானிக்கும் என்ன தொ...
ராதாரவிக்கு மூளையில்லை கடுப்பான நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன்..!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் எனறு அழைக்கப்படுபவர் நயன்தாரா. வருடத்திற்கு பல படங்களில் நடித்து தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவைத்துள்ளார். இவர் தற்போது சக்ரி டோலட்டி இயக்கிவரும் கொலையுதிர் காலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. அப்போது அந்நிகழ்வில் பேசிய நடிகர் ராதா ரவி, நயன்தாரவை பற்றி வராதே செய்தியே இல்லை,அவரை நடிகையர் திலகம், புரட்சி தலைவி என்று அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார்.அதே சமயம் சீதையாகவும் நடிக்கிறார். பார்த்தவுடனே கும்பிடறவங்களும் நடிக்கிறார்கள், பார்த்த உடனே கூப்பிடுறவங்களும் நடிக்கிறார்கள்' என்று ஆபாசமாகப் பேசினார்.
இந்நிலையில் இதை பார்த்து கடுப்பான நயன்தாராவின் காதலரும்,இயக்குநருமான விக்னேஷ் சிவன், ராதாரவியை கடுமையாக விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டுள்ளார்,அதில் ...
ஹாரர் தாண்டி எமோஷனல் கதையுடன் ஐரா புதுசாக இருக்குமாம்!
கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் 'ஐரா'. கலையரசன், யோகிபாபு ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, சர்ஜூன் கே.எம் இயக்கியிருக்கிறார். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கும் இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடுகிறார். மார்ச் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இது என் கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும். சமீப காலங்களில் நான் கடந்து வரும் மிக முக்கியமான கேள்வி மெட்ராஸ் மாதிரி ஏன் படங்கள் பண்றதில்லை என்பது தான். நானும் நிறைய கதைகள் கேட்கிறேன். இந்த படம் பெயர் சொல்லும் ஒரு படமாக இருக்கும். இயக்குனர் சர்ஜூன் உடன் எச்சரிக்கை படத்தில் நடிக்க வேண்டியது, ஆனால் அது...
சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு பரிசு கொடுத்த நயன்தாரா..!
வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த புதன்கிழமையுடன் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்தது. கடைசி நாளில் படக்குழுவினர் அனைவருக்கும் வாட்ச் பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா. அவரது நடிப்பில் ‘ஐரா’, ‘கொலையுதிர் காலம்’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன. தற்போது விஜய் ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார்....
“ஐரா” கேரக்டராக மாறிய நயன்தாரா..!
ஒவ்வொரு படத்திலும், நயன்தாராவின் நடிப்பிற்கு கிரேஸ் மற்றும் வரவேற்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவர் நடிப்பில் அடுத்து வரும் படமான 'ஐரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் மூலம் எதிர்பாராத எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது. குறிப்பாக அவரது முதல் இரட்டை வேட படம் என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம். இயற்கையாகவே, நேற்று மாலை வெளியான 'மேகதூதம்' சிங்கிள் பாடல் அதன் இசை மற்றும் உணர்ச்சி கூறுகளுக்காக அனைவருக்கும் பிடித்துப் போயிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த ஐரா குழுவும் அதீத உற்சாகத்தில் இருக்கிறார்கள்.இந்த பாடல் ஏன் 'பவானியின் கீதம்' என்று கூறப்படுகிறது என்பதை இயக்குனர் கே எம் சர்ஜூன் விளக்கும்போது, "இந்த பாடலை ஏற்கனவே கேட்டவர்கள் எளிதாக இதை கண்டுபிடித்திருப்பார்கள் என நம்புகிறேன். 'பவானி' என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் பாடல். அவளுடைய கனவுகள், அபிலாஷைகள், தனக்கு பிட...
பூஜையுடன் துவங்கிய விஜய் 63 படப்பிடிப்பு
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. படத்தின் பூஜையில் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி படம் உருவாகிறது. கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்துஜாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது ரோபோ ஷங்கரின் மகள் இந்த படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆகிறார். இந்த தகவலை சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழாவில் இயக்குனர் அட்லி முன்னிலையில் ரோபோ ஷங்கரே மகிழ்ச்சியாக அறிவித்தார்.
...

