வியாழக்கிழமை, ஜூலை 2
Shadow

Author: Kodanki

நீச்சல் உடையில்  எமி ஜாக்சன்

நீச்சல் உடையில் எமி ஜாக்சன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை எமி ஜாக்சன் தமிழில் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கி அதிக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இங்கிலாந்து மாடலான இவர் கவர்ச்சியாக நடிக்க தயங்குவதில்லை. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். பாலிவுட் டிவி சீரியலிலும் நடித்து வருகிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கவர்ச்சி சமூக வலைத்தள நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். கவர்ச்சி படங்களை வெளியிட கொஞ்சம் கூட தயக்கம் காட்டுவதில்லை. இவர் டாப்லெஸ் புகைப்படங்களை அதிக அளவில் வெளியிட்டுள்ளார். தற்போது புதிதாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது...
குடும்பத்தோடு பார்க்கும் தரமான படமாக  “அண்டாவ காணோம்” படம் இருக்கும் – தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார்

குடும்பத்தோடு பார்க்கும் தரமான படமாக “அண்டாவ காணோம்” படம் இருக்கும் – தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
  தரமான குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் இனி வருமா என்ற சந்தேகம் சமீபமாக  திரை அரங்குக்கு செல்லும் ரசிகர்களுக்கு மேலோங்கி வருகிறது. அந்த அச்சத்தை ஜூன் 29 ஆம் தேதி வெளி வரும், ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பில் வெளி வரும்  "அண்டாவ காணோம்" திரைப்படம் நீக்கும் என தெரிவித்தார் தயாரிப்பாளர் ஜே சதீஷ் குமார். ஜே எஸ் பிலிம் கார்பொரேஷன் நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்க பெறும் படங்களை தயாரிக்கும் அவர் மேலும் கூறியதாவது "  "அண்டாவ காணோம் , நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு , குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய நேர்மையான நகைச்சுவை படம். குழந்தைகள்  விடுமுறை காலத்தில் பார்க்க விரும்பும் படங்களை தயாரிப்பது என்பது ஒரு சமூக அக்கறை.சமீபமாக வெகு குறைந்த அளவில் உள்ள ஒரு சாராரை கவரும் படங்கள் வருவது வருத்ததுக்கு உரியது. இந்த சமூகத்துக்க...
சீனாவில் பாகுபலி 2ஆம் பாகம் வசூல் சாதனை – 2 நாளில் ரூ.36 கோடி வசூல்

சீனாவில் பாகுபலி 2ஆம் பாகம் வசூல் சாதனை – 2 நாளில் ரூ.36 கோடி வசூல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சீனாவில் பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகி இரண்டு நாளில் 36 கோடி ரூபாயை வசூலை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய திரையரங்குகள் முழுவதையும் ஆக்கிரமித்தது பாகுபலி 2 திரைப்படம். பன்மொழிகளில் வெளியான இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரபாஸ் மற்றும் கதாநாயகியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் பல முக்கிய கதாப்பாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணா, நாசர், சத்யராஜ், தமன்னா, ரானா டக்குபதி எனப் பலர் நடித்தனர். 2015ம் ஆண்டில் முதல் பாகம் வெளியான நிலையில், கடந்த ஆண்டு இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்தச் சாதனைகளை முறியடிக்க பாகுபலி 2 சீனாவில்  வெளியானது. சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீசாகும் முதல் நாளிலேயே, 18 கோடியே 66 லட்சம் ரூபாய் அளவிற்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வசூலில் வரலாற்று...
கர்நாடகாவில் தேர்தலில் கைப்பற்றிய பணம், நகை ரூ.200 கோடியாக உயர்வு

கர்நாடகாவில் தேர்தலில் கைப்பற்றிய பணம், நகை ரூ.200 கோடியாக உயர்வு

HOME SLIDER, NEWS, செய்திகள்
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் - வாக்குகளுக்கு மழையாய் கொட்டும் கருப்பு பணம் கர்நாடகாவில் வருகிற 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க அதிகாரிகளை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இவ்வாறு பறிமுதலான பணம் மற்றும் நகையின் மதிப்பு ரூ.120 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.200 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கூறுகையில், ‘பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ.75.94 கோடி பணம், ரூ.23.98 கோடி மதிப்புள்ள மது, ரூ.62.46 கோடி மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருட்கள், ரூ.43.25 கோடி மதிப்புள்ள தங்க, வெள்ளிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார். இதற்கிடையே பெலகாவி அருகே வாக்காளர்களுக்கு கொடுப்...
ரயில்வே ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் போராட்டம்

ரயில்வே ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் போராட்டம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
ரயில்வே ஊழியர்கள் இன்று முதல் 72 மணி நேரம் வேலை நிறுத்தம் போராட்டத்தை துவங்க உள்ளனர் 7-வது சம்பள கமிஷனை அமல்படுத்த வேண்டும், ரயில்வே துறையை ஹனியார் மையமாக்க கூடாது, தேசிய பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வ்வலியுறுத்தி அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பினர் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இது குறித்து அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் மத்திய நிதி அமைச்சகம், மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் மத்திய ரயில்வே இணை அமைச்சகங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து இன்று முதல் ரயில்வே ஊழியர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் 72 மணி நேர போராட்டத்தை துங்க உள்ளனர். ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிடப்படி நடைபெற்றால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாவர்கள். எனவே, பயணிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுத...
சி.பி.எஸ்.இ., தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சி.பி.எஸ்.இ., தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஏற்பட்ட பெரும் இன்னல்கள் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று தமிழக அரசுக்கும், சி.பி.எஸ்.இ. நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியது. அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் இருந்து 3,685 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக வெளிமாநிலங்களுக்கு செல்லவேண்டி இருந்தது என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளதாக ஒரு பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்வு மையங்களை தமிழ்நாட்டுக்கு உள்ளேயே ஏன் அமைக்க முடியவில்லை என்ற காரணத்தை சி.பி.எஸ்.இ. மற்றும் நீட் தேர்வு நடத்தும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர் ஒவ்வொருவருக்கும் ரெயில் கட்டணம் மற்றும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மாண...
சென்னை தலைமைச்செயலகத்தில் போலீசார் குவிப்பு

சென்னை தலைமைச்செயலகத்தில் போலீசார் குவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை தலைமைச்செயலகம்  கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது..   போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வண்ணம் தமிழக போலீசார் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை நேற்று முன்தினம் முதலே கைது செய்த வண்ணம் உள்ளனர்.இருந்தபோதிலும், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பின் செய்தி தொடர்பாளரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவருமான கு.தியாகராஜன் தெரிவித்தார். சென்னை கோயம்பேடு அருகே போராட்டத்தில் பங்கேற்க வந்த ஜாக்டோ ஜியோ அம...
டெல்லி உள்பட பல நகரங்களை தாக்கியது புழுதி புயல்: 20 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை

டெல்லி உள்பட பல நகரங்களை தாக்கியது புழுதி புயல்: 20 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, செய்திகள்
வட இந்தியா முழுவதும் கடுமையான கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த 2 தினங்களுக்கு முன் இரவு திடீரென புழுதி புயல் வீசியது. இதைத்தொடர்ந்து இடியுடன் பலத்த மழையும் பெய்தது. மணிக்கு பல கி.மீ. வேகத்தில் வீசிய இந்த பயங்கர புயலால் இரு மாநிலங்களுக்கு உட்பட்ட பல மாவட்டங்கள் பேரழிவை சந்தித்தன. பல இடங்களில் வீடுகளின் கூரைகள் பறந்தன. குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் பெயர்ந்து விழுந்தன. திடீரென வீசிய இந்த புழுதி புயல் மற்றும் அதைத்தொடர்ந்து பெய்த இடி-மழையால், வீடுகளில் இருந்த மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். 129 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் டெல்லி, சண்டிகர், அரியானா,  மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த புயல் தாக்கியது...
கர்நாடக சட்டசபை தேர்தல்: ஒரே நாளில் மோடி- சோனியா காந்தி போட்டி பிரசாரம்

கர்நாடக சட்டசபை தேர்தல்: ஒரே நாளில் மோடி- சோனியா காந்தி போட்டி பிரசாரம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று(செவ்வாய்க்கிழமை) பெல்காம் நகருக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் விஜயபுரா செல்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு விஜயபுராவில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். 2 ஆண்டுகளுக்கு பிறகு சோனியா காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பிரசாரத்தை தொடங்கியபோது உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் பிரசாரத்தை பாதியில் முடித்துக் கொண்டதும், அதன்பிறகு வேறு எந்த தேர்தல் பிரசாரத்திலும் அவர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே விஜயபுரா நகரில் இன்று காலை பிரதமர் மோடி கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான தனது கடைசி கட...
நாடு முழுவதும் 2.62 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு: மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான்

நாடு முழுவதும் 2.62 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு: மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான்

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்திய உணவு கழகம் சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் எவ்வாறு அமல்படுத்தப்பட்டுள்ளது? என்பது தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கலந்துகொண்டு ஆய்வு நடத்தினார். பின்னர் அவர், இந்திய உணவு கழக செயல் இயக்குனர் (தெற்கு) ஆர்.டி.நஜீம், தமிழக பொதுமேலாளர்கள் எச்.எஸ்.தலில்வால், ஷைனி வில்சன், மாநில உணவுத்துறை ஆணையர் மதுமதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் சுதாதேவி, மத்திய கிடங்கு துறையின் மண்டல மேலாளர் ஏ.டி.சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 886 மையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்கிறது. வரும் ஜூன் மாதம் வரை இந்த மையங்கள் செயல்படும். நடப்பாண்டு கரீப...