பி.எஸ்.பி. கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக வழக்கறிஞரான டாக்டர். பி. ஆனந்தன் தேர்வு! யார் இந்த ஆனந்தன்?
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் வழக்கறிஞரான டாக்டர். பி. ஆனந்தன்
யார் இந்த ஆனந்தன்?
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் வழக்கறிஞரான டாக்டர். பி. ஆனந்தன். இவரது தந்தை பெயர் பஞ்சாட்சரம், தாயார் பெயர் சரஸ்வதி. 1974 ஆம் ஆண்டு பட்டாபிராமில் பிறந்தவர் ஆனந்தன். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 1992 முதல் 1997 வரை சட்டம் படித்தவர்.
அப்போது, கல்லூரியின் நூற்றாண்டு விழா சேர்மனாக இருந்து அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் விழாவினை சிறப்பாக நடத்தினார். அதன் பின்னர் மூத்த வழக்கறிஞர் ராஜா இளங்கோ அவர்களிடம் ஜூனியர் வழக்கறிஞராக ஆறு மாதம் காலம் பணியாற்றி பின்னர், தனி வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கி தற்போது 100க்கும் மேற்பட்ட ஜூனியர் வழக்கறிஞர்கள் கொண்டு வழக்கறிஞர் தொழில் புரிந்து வருகிறார்...









