வியாழக்கிழமை, ஜூலை 16
Shadow

Author: Kodanki

ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டில் மது விற்க அனுமதி வேண்டும்.. ஹைகோர்ட்டில் ஐடி ஊழியர் மனு!

ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டில் மது விற்க அனுமதி வேண்டும்.. ஹைகோர்ட்டில் ஐடி ஊழியர் மனு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டில் மது விற்க அனுமதிக்க வேண்டும்.. ஹைகோர்ட்டில் மனு   சூப்பர் மார்க்கெட்டுகள், ரேஷன் கடைகளில் மது விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐடி ஊழியர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. ஐடி ஊழியர் முரளிதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் மது விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்தோர் டாஸ்மாக்கிற்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்துகின்றனர். டாஸ்மாக் நிர்வாகம் சில குறிப்பிட்ட...
நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா : நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு!

நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா : நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  44 நடிகர்களை வைத்து 41 நாட்களில் எடுக்கப்பட்டுள்ள படம் வாஸ்கோடகாமா : இயக்குநர் ஆர்ஜிகே பேச்சு! 5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த ' வாஸ்கோடகாமா ' திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள். விழாவில் நடிகை தேவயானி பேசும் போது, "முதலில் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் எல்லா பாடல்களையும் பார்த்தேன். சுறுசுறுப்பாக, அழகாக, நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் அமைந்திருக்கின்றன. என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து...
ஏவி மீடியா வாங்கிய ‘விடுதலை பார்ட் 2′ படத்தின் கர்நாடக திரையரங்க உரிமை!

ஏவி மீடியா வாங்கிய ‘விடுதலை பார்ட் 2′ படத்தின் கர்நாடக திரையரங்க உரிமை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய்சேதுபதி-சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை பார்ட் 2' படத்தின் கர்நாடக திரையரங்க உரிமையை ஏவி மீடியா வாங்கியுள்ளது! தமிழ்த் திரைப்படங்கள் எப்போதுமே மொழி போன்ற தடைகளைக் கடந்து கன்னட பார்வையாளர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வரும் உணர்வுப்பூர்வமான கதைக்களங்கள் பிறமொழி பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியான ஒரு படமாக வெற்றிமாறன் இயக்கத்தில், ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமாரின் தயாரிப்பில் வெளியான ‘விடுதலை 1’ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஏவி மீடியா, விஜய்சேதுபதி மற்றும் சூரி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் கர்நாடக திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏவி மீடியாவின் வெங்கடேசன் இதுபற்றி பேசும்போது, ...
கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’!

கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’. விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகை தீபா பேசியதாவது, இந்தப் படத்தில் நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னை தீபா என்று பார்க்காமல் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாக இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். இந்தப் படம் ஒரு மன நிறைவான படமாக எனக்கு அமைந்தது, ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உருவாக்கியுள்ளார்கள். கிராமத்தில் பேசும் வசனங்களை தத்ரூபமாக அப்படியே எழுதி எடுத்துள்ளார் இயக்...
நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக, அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ!

நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக, அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக, அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது !! நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம், “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோ வெளியாகியுள்ளது !! நேச்சுரல் ஸ்டார் நானி, “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தின் புரமோசன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போஸ்டர்கள் முதல் வீடியோ, பாடல்கள் வரை, திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இன்று, எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளினை கொண்டாடும் விதமாக, ஒரு அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வாய்ஸ் ஓவரில் தீமையின் சக்தி வலுவடையும்போதெல்லாம், அதைத் தடுக்க அதற்குச் சமமான அ...
‘ரகு தாத்தா’ இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை – நடிகை கீர்த்தி சுரேஷ்

‘ரகு தாத்தா’ இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை – நடிகை கீர்த்தி சுரேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இந்திய திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது.‌ :தி ஃபேமிலி மேன்', ' ஃபார்ஸி' ஆகிய வெற்றி பெற்ற இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காமெடி டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரக...
காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  🚨9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்: அதன்படி, தாம்பரம், தாம்பரம், நாகை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பத்தூர், மாவட்ட டிஎஸ்பிக்களை மாற்றி, சட்ட ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், திருப்பத்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கும் போலீஸ் அகாடெமிக்கு மாற்றம். மதுர - மேலூர், திருச்சி-முசிறி காவல் கண்காணிப்பாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியிட மாற்ற விவரங்கள்: 🚨தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்து மாணிக்கம் பணியிடமாற்றம் 🚨ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக பிரீத்தி நியமனம் 🚨மேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் இடமாற்றம் 🚨தமிழ்நாடு காவல் அகாடமி துணை காவல் கண்காணிப்பாளராக யாஸ்மின் நியமனம் 🚨ஊமச்சிக்குளம் துணை காவல் கண்காணிப்பாளராக பாலசுந்தரம் நியமனம் 🚨கள்ளக்குறிச்சி கூடுத...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
      பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹரிதரன் என்பவர் உட்பட மேலும் 5 பேரைப் பிடித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பேரூராட்சியின் அதிமுக கவுன்சிலராக உள்ளார் ஹரிதரன். இவரிடமிருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் மற்றும் ஹரிஹரனின் நெருங்கிய நண்பர் ஹரிதரன் என போலீஸ் தகவல் வெளியிட்டு உள்ளனர். இன்னொரு பக்கம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. தற்போது விசாரணை முடிந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆம்ஸ்ட்ராங்கை கொல்வது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை 4 இடங்களில் சதி ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதாக தகவல் வெளியாகி உ...
ஒரே மேடையில் பா.இரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் ‘வாழை’ விழாவின் ஹைலைட்!

ஒரே மேடையில் பா.இரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் ‘வாழை’ விழாவின் ஹைலைட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  பா.இரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் இருவரும் 'வாழை' விழாவில் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டது இந்த விழாவின் ஹைலைட்டாக அமைஞ்சுடுச்சு . அப்போது இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்துப் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், "தயாரிப்பாளர் கிடைக்காமல் என்கிட்ட வந்த மாரி செல்வராஜ், இப்போது 'வாழை' படத்தில் தயாரிப்பாளராகவே மாறியிருப்பது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். 'வாழை' படத்தின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கியிருக்கும் 'Disney + Hotstar'க்கு நன்றி. இந்தக் காலகட்டத்தில் சின்னப் படங்களை டிஜிட்டலில் விற்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. நிறையத் தயாரிப்பாளர்கள் நல்ல படங்களை எடுத்துவிட்டு அதை டிஜிட்டலில் விற்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழல் மாற வேண்டும். நல்ல திரைப்படங்கள் திரையரங்குகளிலும், ஓடிடி தளத்திலும் நல்லபடியாக விற்பனையாகி, நல்ல வரவேற்பைப் பெற வேண்டும். 'வாழை' திரைப்...
“தெருக்கூத்து கலைஞர்களுக்கு எந்த பிரஷரும் கொடுக்க கூடாது” – கட்டளை போட்ட இளையராஜா!

“தெருக்கூத்து கலைஞர்களுக்கு எந்த பிரஷரும் கொடுக்க கூடாது” – கட்டளை போட்ட இளையராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  “தெருக்கூத்து கலைஞர்களுக்கு எந்த பிரஷரும் கொடுக்க கூடாது” – உத்தரவிட்ட இளையராஜா!   இளையராஜா இசையில், பாரி இளவழகன் இயக்கத்தில் தெருத்கூத்து கலை, அந்த  கலைஞர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ஜமா. இதென்ன தலைப்பு. தெருக்கூத்து பின்னணியில் எந்த விஷயத்தை சொல்ல வருகிறீர்கள் என்று இயக்குனரிடம் கேட்டால், ‘‘ ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. தெருக்கூத்து பின்னணியில் தமிழில் சில படங்கள் வந்திருந்தாலும் இது புதுவகை கரு. குறிப்பாக, பெண் வேடமிட்டு தெருக்கூத்து ஆடுபவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களின் உளவியல், ஆதங்கம், கோபத்தை இந்த  கதை சொல்கிறது. நானே பெண் வேடமிட்டு தெருக்கூத்து ஆடும் கல்யாணம் என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். பொதுவாக வட மாவட்டங்களில்  தெருக்கூத்து நடத்தும் குழுக்களை ஜமா என்று அ...