இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன் - ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் அந்தோணி தாசன் பேச்சு
சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் இன்று பலரிடம் இருக்கும் திறமைகள் உலக அளவில் பிரபலமடைந்தாலும் அவர்களுக்கான சரியான வாய்ப்பு மட்டுமே எளிதாக கிடைப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் குளோப் நெக்சஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்நிருவனம் திறமைசாலிகளை தேடிக் கண்டுபிடிக்கும் விதமாக (Talent Hunt Show Launch) ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ என்ற நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் திறமைசாலிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ள குளோப் நெக்சஸ் நிறுவனம், அவர்களுக்கு பரிசு வழங்கி கெளரவிப்பதோடு, திரைப்பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து அங்கீகரிக்க உள்ளது.
நடிப்பு, இசை, நடனம் ஆகிய துறைகளில் ஆர்வமுள்...
நடி ராத்திரியில் திரிஷா கைய புடிச்சிகிட்டு ரோட்டில் நடந்து போனா அது விஜய்சேதுபதிக்கு கிடைக்காத காதல் 96 படம்… அதுவே குழந்தைய தூக்கிக்கிட்டு நடு ராத்திரியில் கத்ரீனா கைஃப் கூட நடந்து போனா அது விஜய்சேதுபதியோட கொலையான காதல் மெரி கிறிஸ்துமஸ்..
அப்பாவியா தெரியும் விஜய்சேதுபதியின் முகபாவங்களும் உடல்மொழியும் கத்ரினா கைஃப்பை மட்டும் ஈர்க்கவில்லை, படம் பாக்குற எல்லாறையும் இழுக்குது. அவருடைய காதல்கதையைச் சொல்வதும் அதில் இருக்கும் படிப்படியான முன்னேற்றம் சுவாரசியம்.
கிளைமாக்ஸ் காட்சியில் விஜய்சேதுபதி எடுக்கும் முடிவு ஷாக் ரகம்தான் ஆனா அப்ளாஸ் என்னமோ விஜய்சேதுபதிக்குத்தான்.
ஒரு குழந்தைக்கு அம்மாவா வந்தாலும் கத்ரினா கைஃப் நடிப்பில் அசத்துகிறார். சோகம்… ஆட்டம்… அழகு என எதிலும் குறைவில்லை. படம் தொடங்கிய சில நொடிகளில் விஜய்சேதுபதியிடம் தன் கணவர் குறித்து கத்ரீனா கைஃப் பேசும் அந்த ...
ரகசியமா செய்யறது பளீச்சுன்னு தெரிஞ்சாலும் மிஷன் சாப்டர் 1 ரசிக்கலாம்- கோடங்கி விமர்சனம் 3/5
பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்கிற கதைன்னு சொன்னா முன்னாடி ஆக்ஷன் கிங் அர்ஜுன், கேப்டன் விஜயகாந்த் தான் ஞாபகத்துக்கு வருவாங்க… இனிமே அந்த லிஸ்ட்ல அருண்விஜய் சேர்ந்துடுவாரு… மிஷன் சேப்டர் 1 அப்படித்தான் இருக்கு!
கதை என்ன சொல்லுதுன்னா…
உயிருக்கு ஆபதான நிலையில் தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்லும் அருண் விஜய், அங்கே எதிர்பாரத பிரச்சனையில் சிக்கி லண்டன் சிறையில் அடைக்கப்படுகிறார்.
அந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் மூன்று கைதிகளை தப்பிக்க வைப்பதற்காக பயங்கரவாத குழு மிகப்பெரிய சதிதிட்டம் தீட்டி அதை செயல்படுத்துகிறது. இதனால், சிறைச்சாலையில் இருக்கும் அனைத்து கைதிகளும் அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட, அனைவரையும் தடுத்து நிறுத்தும் அர...
"என்னிடம் அடி வாங்கிய தனுஷ்" தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பொங்கல் விழாவில் ஐசரி கணேஷ் பேச்சு!
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பதவியேற்பு விழா மற்றும் பொங்கல் விழா இன்று வெகு விமர்சையாக நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் திரு. ஐசரி கணேசன், இயக்குனர் திரு. கஸ்தூரிராஜா மற்றும் தயாரிப்பாளர் திருமதி விமலா பிரிட்டோ, நடிகர் திரு .ஆரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து திரு. ஐசரி கணேசன் அவர்கள் பேசுகையில்..
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். ஆரோக்கியமானதொரு தேர்தலை நடத்தி முடித்து இருக்கிறீர்கள். அதற்கும் எனது வாழ்த்துக்கள். திரு. கஸ்தூரிராஜா அவர்களை இதற்கு முன்பு ' துள்ளுவதோ இளமை' படத்தின் படப்பிடிப்பு வேளையில் சந்தித்து இருக்கிறேன். அந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் அந்த படத்தில் நானும் ஒரு சின்ன கதாபாத்தி...
*நடிகர் கருணாகரன்: சிவகார்த்திகேயன், ரவிகுமார் 'அயலான்' மீது வைத்துள்ள நம்பிக்கையே எங்கள் பலம்!*
நகைச்சுவை, குணச்சித்திரம், கதாநாயகன் என தனக்குக் கொடுக்கப்பட்ட எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக் கூடியவர் நடிகர் கருணாகரன். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளிவரக் காத்திருக்கும் 'அயலான்' படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்காகவும் தொழில்நுட்பக்குழு தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளது என்பவர் இந்தப் படத்தில் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் என்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயனுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, "சிவகார்த்திகேயனுடன் நான் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. ஒவ்வொரு காட்சியிலும் தான் மட்டுமே சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் தனது சக நடிகர்கள...
இந்தியின் பிரபல இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்மஸ்’. இதில் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார்.
தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்தத்திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தத்திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது.
இதை முன்னிட்டு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில், விஜய்சேதுபதி, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், பட தொக...
நடிகர் அருண்விஜய் - இயக்குனர் விஜய் கூட்டணியில் பொங்கல் ரேசில் ஸ்பெஷல் ஆட்டம் ஆடப்போகும் "மிஷன் சாப்டர் 1"
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சாஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர்1’ ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் உள்ள ஒரு ஒரு பெரிய வணிக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்டில் படத்தின் நாயகன் அருண் விஜய், நடிகர்கள் ருத்ரன், பரத் கோபண்ணா, விராஜ், அபிஹாசன், குழந்தை நட்சத்திரம் இயல், படத்தின் படத்தொகுப்பாளர் ஆன்டனி மற்றும் படத்தின் இயக்குநர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் நாசர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் கலந்துகொண்டவர்கள் பேசியதாவது கீழே வருமாறு:
எடிட்டர் ஆண்டனி பேசியதாவது, “படம் சூப்பராக வந்திருக்கி...
பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது செல்லாது. இரு வாரங்களில் 11 பேரும் சிறையில் சரண் அடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2002 பிப்.27-ம் தேதி குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். 48 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. கோத்ராவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் தாகோத் நகர் அருகில் உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் முஸ்லிம்கள் வசித்த பகுதியில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அப்போது பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 6 பேரை காணவில்ல...