டிஜிட்டல் காலத்தின் கட்டாயம்… திரைத்துறைக்கு புது யோசனை சொல்லும் தயாரிப்பாளர்!
டிஜிட்டல் காலத்தின் கட்டாயம்... திரைத்துறைக்கு புது யோசனை சொல்லும் தயாரிப்பாளர்!
தேனாண்டாள் பட நிறுவன உரிமையாளர் முரளி ராமசாமி வெளியிட்ட அறிக்கை:
கொரானாவின் கோரத் தாண்டவத்தில் உலகமே சிக்கித் தவிக்கையில்.. திரையரங்குகள் மூடிக் கிடக்கும் இந்தச் சூழ்நிலையில், தயாரிப்பாளர்கள் தங்களது பணத்தை முதலீடு செய்து படத்தைத் தயாரித்து அதை வியாபாரம் செய்ய முடியாமல் தவிக்கும்போது OTT Platform என்பது காலத்தின் கட்டாயமாகிறது.
பெரிய படங்களுக்கு திரையரங்குகள் எப்படி அதிகமாக கிடைக்கிறதோ, அதே போல டிஜிட்டலில் பெரிய படங்களை மட்டும்தான் அவுட்ரேட் முறையில் விற்க முடிகிறது. ஆனால், சிறுபடங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை, டிஜிட்டல் மார்க்கெட்டிலும் அவுட்ரேட் முறையில் விற்க முடிவதில்லை.
இந்த நிலை மாற வேண்டும்.
நம் சங்க உறுப்பினர்களாக பேச வேண்டியவர்கள் தங்கள் பதவியை வைத்து தான் மற்றும் தன்...








