வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

நடிகைகள்

வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஜெ.வீட்டுக்கு இழப்பீடாக 68 கோடியை கோர்ட்டில் கட்டிய அரசு!

வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஜெ.வீட்டுக்கு இழப்பீடாக 68 கோடியை கோர்ட்டில் கட்டிய அரசு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்க அரசு விதிகளின்படி வீட்டின் மதிப்புக்கு இழப்பீடாக 68 கோடியை கோர்ட்டில் செலுத்தியது தமிழக அரசு. ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அரசு நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது அவசர அவசரமாக நிலத்தை கையகப்படுத்தும் நடவ...
வைரஸ் தீவிரத்தால் ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் ஆஸ்பத்திரியில் மகளுடன் அனுமதி!

வைரஸ் தீவிரத்தால் ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் ஆஸ்பத்திரியில் மகளுடன் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  வைரஸ் தீவிரத்தால் ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் ஆஸ்பத்திரியில் மகளுடன் அனுமதி! பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்தியாவுக்கும் கொரானா இருப்பது கடந்த 13 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. லேசான வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்தியா இருவரும் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்ந...
ஆஸ்பத்திரியில் அமிதாப்-அபிஷேக் தனிமைபடுத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் – ஆராத்தியா இந்தி பட உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்… கலக்கத்தில் பிரபலங்கள்!

ஆஸ்பத்திரியில் அமிதாப்-அபிஷேக் தனிமைபடுத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் – ஆராத்தியா இந்தி பட உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்… கலக்கத்தில் பிரபலங்கள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    ஆஸ்பத்திரியில் அமிதாப்-அபிஷேக் தனிமைபடுத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் - ஆராத்தியா இந்தி பட உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்... கலக்கத்தில் பிரபலங்கள்! இந்தியாவில் கொரானா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் 77 வயதான நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று கொரானா தொற்று ஏற்பட்டது. இதை நேற்று முன்தினம் இரவு அவரே தனது வலைத்தள பக்கத்தில் பகிரங்கப்படுத்தினார். அதில், “எனக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். எனது குடும்பத்தினருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். என்னுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்” என்று உருக்கமாக கூறி...
விதிகளை காற்றில் பறக்கவிட்டு பப்ளிசிட்டிக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகை ரோஜா…!

விதிகளை காற்றில் பறக்கவிட்டு பப்ளிசிட்டிக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகை ரோஜா…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பப்ளிசிட்டிக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகை ரோஜா...! தமிழ் திரையுலகில் இருந்து ஆந்திர அரசியலுக்கு சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். நடிகை என்பதால் அடிக்கடி ஏதாவது பப்ளிசிட்டி செய்து தன் இருப்பை காட்டிக் கொள்வது வழக்கம். கொரானா பரவல் ஆரம்பத்தில் கிராமத்தில் கிருமி நாசினி அடிக்கிறேன் பேர்வழின்னு ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஊழியர்கள் பயன்படுத்தும் கவச உடை அணிந்து நகரி கிராமத்தில் காமெடி செய்து பப்ளிசிட்டி தேடிக் கொண்டவர் ரோஜா. இப்போது அப்படி ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் விஷயம்தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் தொடங்கி உள்ளார். நகரி தொகுதி...
நவம்பரில் ஜெ.நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறக்க திட்டம்!

நவம்பரில் ஜெ.நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறக்க திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
    நவம்பரில் ஜெ.நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறக்க திட்டம்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்களுக்கு பின் மரணம் அடைந்தார். இவரது உடல் கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தின் பின்புறம் புதைக்கப்பட்டது. அங்கு சுமார் 50 கோடி செலவில் பிரமாண்டமான நினைவு மண்டபம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஜெயலலிதா நினைவு மண்டபம் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் அமைக்கப்படுகிறது. பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் அனைத்தும் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு வைரஸ் பாதிப்பு நேரத்திலும் பணிகள் நடந்து வருகிறது. நினைவு மண்டபம் வரும் நவம்பரில் கட்டி முடிக்கப்படும் என்றும், இதை பிரதமர் மோடி திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்...
OTT டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ஷகிலாவின் வாழ்க்கை!

OTT டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ஷகிலாவின் வாழ்க்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  OTT டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ஷகிலாவின் வாழ்க்கை! கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்ளிட்ட படங்கள் OTT தளத்தில் வெளியிடப்பட்டன. அடுத்ததாக நடிகை வரலட்சுமியின் டேனி, யோகி பாபு நடித்த காக்டெய்ல் உள்ளிட்ட படங்களும் விரைவில் OTT டிஜிட்டல் தளத்தில் வெளியாக இருக்கின்றன. கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் OTT தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் ‘ஷகீலா நாட் பார்ன் ஸ்டார்’ என்ற டைட்டில் உடன் உருவாகும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சதா நடித்துள்ளார். அவருடன் தேசியவிருது பெற்...
பாஜக செயற்குழு உறுப்பினர் ஆன நமீதா!

பாஜக செயற்குழு உறுப்பினர் ஆன நமீதா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் நிர்வாகிகளை மாற்றி உத்தரவிட்டுள்ளார். திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத்தலைவராக நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத்தலைவராகவும் நியமித்துள்ளார். பாரதிய ஜனதாவில் சேர்ந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்துள்ளார்.   அதே போல காயத்ரி ரகுராம், தினமலர் பாலாஜி உட்பட பலருக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது....
சபாஷ்! சீன தயாரிப்பான டிக்டாக்கை தூக்கி எறிந்த சாக்‌ஷி அகர்வால்!!

சபாஷ்! சீன தயாரிப்பான டிக்டாக்கை தூக்கி எறிந்த சாக்‌ஷி அகர்வால்!!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  இனி நான் சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை - நடிகை சாக்‌ஷி அகர்வால் நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர். “பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன். இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன். என்னைப் பொறுத்தவரை எனது நாடு தான் எனக்கு எதிலும் முதன்மையாக தோன்றும், என் நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன். ”என்று கூறினார். நடிகை சாக்‌ஷ...
உலக யோகா தினத்தால் ஷில்பா ஷெட்டியின் யோகா பயிற்சி நாளை நேரலையில்…

உலக யோகா தினத்தால் ஷில்பா ஷெட்டியின் யோகா பயிற்சி நாளை நேரலையில்…

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  உலக யோகா தினத்தை முன்னிட்டு ஷில்பா ஷெட்டியின் யோகா பயிற்சி நேரலையில் நாளை ஒளிபரப்பாகிறது.   ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சிபிஎஸ்இ தனது மாணவர்களுக்கு யோகா பயிற்சியை வழங்க முடிவெடுத்துள்ளது. ’ஆரோக்கிய இந்தியா’ திட்டத்தின் கீழ் நடிகையும் புகழ்பெற்ற யோகா பயிற்சியாளருமான ஷில்பா ஷெட்டி, யோகா பயிற்சியை நேரலையாகச் செய்துகாட்ட உள்ளார். இந்தச் சிறப்பு நிகழ்வு ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இது ஆரோக்கிய இந்தியா யூடியூப் பக்கத்திலும் சிபிஎஸ்இ வாரியத்தின் சமூக வலைதளப் பக்கங்களிலும் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். யோகா குறித்த கேளிக்கை மற்றும் அறிவுபூர்வம...
“ராஜ மாதா” புகழ் ரம்யா கிருஷ்ணன் சொகுசுகாரில் பெட்டி பெட்டியாக மதுபுட்டிகள் கடத்தல்!

“ராஜ மாதா” புகழ் ரம்யா கிருஷ்ணன் சொகுசுகாரில் பெட்டி பெட்டியாக மதுபுட்டிகள் கடத்தல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    "ராஜ மாதா" புகழ் ரம்யா கிருஷ்ணன் சொகுசுகாரில் பெட்டி பெட்டியாக மதுபுட்டிகள் கடத்தல்! சிக்கிய டிரைவரை சொந்த ஜாமீனில் மீட்ட நடிகை. கொரானா ஊரடங்கால் பொது மக்கள் வீடுகளில் முடங்கி பல மாதங்களுக்கு பின் இப்போது தான் சில தளர்வுகள் அளிக்கப்படுகிறது. இருந்த போதும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரானா தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இந்த சூழலில் இந்த 4 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகளை அரசு திறந்துள்ளது. பக்கத்து மாநிலமான பாண்டியிலும் மதுக்கடைகளை திறந்து இருக்கிறார்கள். நேற்று முந்தினம் கானத்தூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசுகாரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது போலீசாருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரில் பெட்டியாக...