புதன்கிழமை, ஜூன் 10
Shadow

நடிகைகள்

எட்ஜ்’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் ஸ்ருதிஹாசன் குஷி!

எட்ஜ்’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் ஸ்ருதிஹாசன் குஷி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  'எட்ஜ்' பாடலுக்கு பெரும் வரவேற்பு - ஸ்ருதிஹாசன் உற்சாகம் கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவருடைய முதல் ஒரிஜினல் பாடலான 'எட்ஜ்' நேற்று (ஆகஸ்ட் 8) வெளியானது. இந்தப் பாடல் 2021-ல் ஸ்ருதிஹாசன் வெளியிடவுள்ள ஆல்பத்தின் அங்கமாக உள்ள பாடலாகும். 'எட்ஜ்' பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் கொள்ள பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். இது ஸ்ருதிஹாசனின் மற்றொரு பரிமாணம். இதற்கு எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதெல்லாம் எண்ணாமல் வெளியிட்டார் ஸ்ருதிஹாசன். ஆனால் இதற்கு கிடைத்த வரவேற்பு அவரை திக்குமுக்காடச் செய்திருக்கிறது என்று சொல்லலாம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாலிவுட் நடிகர...
நடிகை ஜோதிகாவை பாராட்டிய தமிழக அரசு!

நடிகை ஜோதிகாவை பாராட்டிய தமிழக அரசு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  *தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!* *அமைச்சர், ஆட்சியர் பாராட்டு!* நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்  மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது.   சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் ...
டேனி சினிமா எப்படியிருக்கு – கோடங்கி விமர்சனம்

டேனி சினிமா எப்படியிருக்கு – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில், வரலட்சுமி, கவின், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், டேனி என்ற நாய் இன்னும் சிலர் நடித்திருக்கும் படம் ‘டேனி’. ஒடிடி தளமான ZEE5-ல் ரிலீஸ் ஆகியுள்ளது. போலீஸ் கிரைம் படங்கள் பெரும்பாலும் நகரங்களில் மட்டுமே படம் பிடிக்கப்படும் . ஆனால் டேனி அதில் வித்தியாசம் காட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடக்கும் சம்பவமாக வைக்கிறார்கள். ஒருகிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியாக வரும் வரலட்சுமியின் தங்கையும் எரித்துக் கொல்லப்பட இந்த கொலைகளின் பின்னணி மற்றும் கொலையாளி யார்? என்பதை வரலட்சுமி எப்படி கண்டுபிடிக்கிறார், அவருக்கு ‘டேனி’ என்ற போலீஸ் நாய் எப்படி உதவி செய்கிறது, என்பது தான் படத்தின் கதை. போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வ...
பீனிக்ஸ் பறவைபோல ரெடியாகும் ஜெ., நினைவிடம் டிசம்பருக்கு முன் திறக்கப்படலாம்!

பீனிக்ஸ் பறவைபோல ரெடியாகும் ஜெ., நினைவிடம் டிசம்பருக்கு முன் திறக்கப்படலாம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  பீனிக்ஸ் பறவை போல தயாராகும் ஜெ., நினைவிடப் பணிகள் ஆகஸ்ட்டில் முடிந்து டிசம்பருக்குள் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறதாம்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் ரூ.51 கோடியில் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அழகிய வடிவமைப்புடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் போன்றவற்றுக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து உள்ளன. சமாதி அருகில் தரைதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளால் தோட்டம் அமைக்கப்படுகிறது. 95 சதவீத பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. துபாயில் இருந்து வரவழைக்கப்பட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் ஐ.ஐ....
வைரஸ் பாதிப்பில் மீண்ட ஐஸ்வர்யாராய் மகளுடன் வீடு திரும்பினார்!

வைரஸ் பாதிப்பில் மீண்ட ஐஸ்வர்யாராய் மகளுடன் வீடு திரும்பினார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    வைரஸ் பாதிப்பில் மீண்ட ஐஸ்வர்யாராய் மகளுடன் வீடு திரும்பினார்! பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 11 ஆம் தேதி கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் மும்பையில் உள்ள நனாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவுகள் கடந்த 12 ஆம் தேதி வெளியானது. அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரானா இல்லை என்பது தெரியவந்தது ஆனால் அபிஷேக் பச்சனின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான  ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது ஆரத்யாவுக்கும் கொரானா இருப்பது உறுதியானது. இதையடுத்து இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால் கடந்த 18 ஆம் தேதி அதிகாலை ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கு திடீரென மூ...
ஜெ.,வீட்டில் தங்கம்,வெள்ளி உட்பட உள்ள பொருட்களின் பட்டியல் வெளியீடு!

ஜெ.,வீட்டில் தங்கம்,வெள்ளி உட்பட உள்ள பொருட்களின் பட்டியல் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, politics, செய்திகள், நடிகைகள்
    ஜெ.,வீட்டில் தங்கம்,வெள்ளி உட்பட உள்ள பொருட்களின் பட்டியல் வெளியீடு! அரசுடமையாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் 4.37 கிலோ தங்க ஆபரணங்கள், 601.4 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது என பட்டியிடப்பட்டுள்ளது. 8,376 புத்தகம், 11 டிவி, 38 ஏசி சாதனங்கள், 394 நினைவு பரிசுகள் இருப்பதும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 6,514 சமையல் பாத்திரங்கள், 556 மரச்சாமன்கள், 108 அழகு பொருட்களும் இடம் பெற்றுள்ளன.29 டெலிபோன், செல்போன், 15 பூஜைப் பொருட்கள், 10 ஃபிரிட்ஜ், 6 கடிகாரங்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது. ஜெ. பயன்படுத்திய 10,438 ஆடைகள் உள்ளிட்ட 32,700 அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்....
நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன்!

நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தொடர்பாக பிரபல நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது தற்கொலைக்கான காரணத்தை கண்டறிவதற்காக போலீசார் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் நடிகர்கள் உள்பட 38 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்து உள்ளனர். இதில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்தி, சினிமா இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, பட தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா உள்ளிட்டோரும் அடங்குவர். சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து...
வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஜெ.வீட்டுக்கு இழப்பீடாக 68 கோடியை கோர்ட்டில் கட்டிய அரசு!

வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஜெ.வீட்டுக்கு இழப்பீடாக 68 கோடியை கோர்ட்டில் கட்டிய அரசு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்க அரசு விதிகளின்படி வீட்டின் மதிப்புக்கு இழப்பீடாக 68 கோடியை கோர்ட்டில் செலுத்தியது தமிழக அரசு. ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அரசு நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது அவசர அவசரமாக நிலத்தை கையகப்படுத்தும் நடவ...
வைரஸ் தீவிரத்தால் ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் ஆஸ்பத்திரியில் மகளுடன் அனுமதி!

வைரஸ் தீவிரத்தால் ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் ஆஸ்பத்திரியில் மகளுடன் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  வைரஸ் தீவிரத்தால் ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் ஆஸ்பத்திரியில் மகளுடன் அனுமதி! பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்தியாவுக்கும் கொரானா இருப்பது கடந்த 13 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. லேசான வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்தியா இருவரும் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்ந...
ஆஸ்பத்திரியில் அமிதாப்-அபிஷேக் தனிமைபடுத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் – ஆராத்தியா இந்தி பட உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்… கலக்கத்தில் பிரபலங்கள்!

ஆஸ்பத்திரியில் அமிதாப்-அபிஷேக் தனிமைபடுத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் – ஆராத்தியா இந்தி பட உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்… கலக்கத்தில் பிரபலங்கள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    ஆஸ்பத்திரியில் அமிதாப்-அபிஷேக் தனிமைபடுத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் - ஆராத்தியா இந்தி பட உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்... கலக்கத்தில் பிரபலங்கள்! இந்தியாவில் கொரானா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் 77 வயதான நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று கொரானா தொற்று ஏற்பட்டது. இதை நேற்று முன்தினம் இரவு அவரே தனது வலைத்தள பக்கத்தில் பகிரங்கப்படுத்தினார். அதில், “எனக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். எனது குடும்பத்தினருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். என்னுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்” என்று உருக்கமாக கூறி...