புதன்கிழமை, ஜூலை 8
Shadow

தமிழக அரசியல்

பட்ஜெட்டில் தமிழர்களுக்கு “அல்வா” கொடுத்த நிதி அமைச்சர்!

பட்ஜெட்டில் தமிழர்களுக்கு “அல்வா” கொடுத்த நிதி அமைச்சர்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை. தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கு இறக்குமதி வரி குறைப்பு, வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, 80 கோடி மக்கள் பயன் பெறும் கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பீகார், ஆந்திராவை ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் தங்கள் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தன. அந்த கோரிக்கைக்கு ஏற்ப ஆந்திரா, பீகாருக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு அ...
“கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்”.. வணிகர் நல வாரிய கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

“கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்”.. வணிகர் நல வாரிய கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  “தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்”.. வணிகர் நல வாரிய கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்! தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 40,944 புதிய உறுப்பினர்கள் வணிகர் நல வாரியத்தில் இணைந்துள்ளதாக தமிழ்நாடு வணிகர் நல வாரிய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "கலைஞர் கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு வணிகர் நல வாரியம் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வணிகர்களை ஊக்குவிக்கவும், அவர்களது இன்னல்களை குறைக்கவும் 1989ல் நல வாரியம் உருவானது. கருணாநிதி இந்த வாரியத்தை தொடங்கிய போது முதலில் அலுவலர் உறுப்பினர்களாக 20 பேர் இருந்தார்கள். ...
ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெறும் திட்டம்  – அமைச்சர் முத்துசாமி விளக்கம்

ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெறும் திட்டம் – அமைச்சர் முத்துசாமி விளக்கம்

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் முதன்முறையாக ஆன்லைனில் கட்டட அனுமதி பெறும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். www.onlineppa.tn.gov.in அனுமதியை பெறலாம். 2,500 சதுர அடி வரை உள்ள மனையில் 3,500 சதுர அடியில் கட்டப்பட உள்ள வீடுகளுக்கு திட்டம் பொருந்தும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.541.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.382.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். "வீடு கட்ட வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும் இத்திட்டம் பயன்படும்" -ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெ...
பி.எஸ்.பி. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமனம்!

பி.எஸ்.பி. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமனம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மறைவால், அடுத்த தலைவராக அவரது மனைவியை நியமிக்கலாம் என அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பதவியை ஏற்க ஆம்ஸ்ட்ராங் மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் புதிய தலைவரை நியமிக்க தேசிய தலைமை மும்முரமாக ஆலோசித்தது. அதன்படி, உச்சநீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் பி.ஆனந்தன் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்....
காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  🚨9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்: அதன்படி, தாம்பரம், தாம்பரம், நாகை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பத்தூர், மாவட்ட டிஎஸ்பிக்களை மாற்றி, சட்ட ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், திருப்பத்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கும் போலீஸ் அகாடெமிக்கு மாற்றம். மதுர - மேலூர், திருச்சி-முசிறி காவல் கண்காணிப்பாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியிட மாற்ற விவரங்கள்: 🚨தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்து மாணிக்கம் பணியிடமாற்றம் 🚨ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக பிரீத்தி நியமனம் 🚨மேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் இடமாற்றம் 🚨தமிழ்நாடு காவல் அகாடமி துணை காவல் கண்காணிப்பாளராக யாஸ்மின் நியமனம் 🚨ஊமச்சிக்குளம் துணை காவல் கண்காணிப்பாளராக பாலசுந்தரம் நியமனம் 🚨கள்ளக்குறிச்சி கூடுத...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
      பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹரிதரன் என்பவர் உட்பட மேலும் 5 பேரைப் பிடித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பேரூராட்சியின் அதிமுக கவுன்சிலராக உள்ளார் ஹரிதரன். இவரிடமிருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் மற்றும் ஹரிஹரனின் நெருங்கிய நண்பர் ஹரிதரன் என போலீஸ் தகவல் வெளியிட்டு உள்ளனர். இன்னொரு பக்கம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. தற்போது விசாரணை முடிந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆம்ஸ்ட்ராங்கை கொல்வது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை 4 இடங்களில் சதி ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதாக தகவல் வெளியாகி உ...
திமுக அரசு மீது ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை சொல்லும் இயக்குனர் பா.ரஞ்சித் ஏன் ஆருத்ரா மோசடி, பாஜக அண்ணாமலை குறித்து வாய் திறக்கவில்லை – திமுக ஐடி விங் கேள்வி?

திமுக அரசு மீது ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை சொல்லும் இயக்குனர் பா.ரஞ்சித் ஏன் ஆருத்ரா மோசடி, பாஜக அண்ணாமலை குறித்து வாய் திறக்கவில்லை – திமுக ஐடி விங் கேள்வி?

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைசெய்யப்பட்டது குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் ஒரு பதிவை தனது x பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இது ஆம்ஸ்ராங் மீதான அவரது அன்போ, அல்லது அவரது கொலைக்கு காரணங்களை அறியவேண்டும் என்கிற நோக்கமோ இல்லை. மாறாக ஆளும் திமுக அரசை பழிசொல்ல வேண்டும் என்கிற ஒற்றை நோக்கம் மட்டுமே உள்ளது. தனது பதிவில் ஆதாரமில்லாத பல குற்றச்சாட்டுகளை அடுக்கும் ரஞ்சித்திற்கு சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம் என திமுக ஐடி விங் கேள்வி? *ஆம்ஸ்ராங் கொலையில் குற்றவாளிகள் சண்டைந்ததும், அவர்கள் சொல்லும் காரணங்கள் சரியாக பொருந்திவருவதும் உங்களுக்குப் புலப்படவில்லையா..? அதை மறுத்து வேறு குற்றவாளிகளை ஏன் தேடுகிறீர்கள்…? *அப்படி உங்களுக்கு உண்மையான குற்றவாளிகள் என்று யாரையாவது தெரியும் எனில் அவர்களை, போலீசிடமோ, அல்லுத பொதுவெளியிலோ சொல்லாமல். பொத்தாம் பொது...
கடலூர் மாவட்டத்துல பிறந்தது அவமானமா இருக்கு… உங்களுக்கெல்லாம் எதுக்கு ஓட்டு? – தோல்வி விரக்தியில் வாக்காளர்களை திட்டிய தங்கர்பச்சான்!?

கடலூர் மாவட்டத்துல பிறந்தது அவமானமா இருக்கு… உங்களுக்கெல்லாம் எதுக்கு ஓட்டு? – தோல்வி விரக்தியில் வாக்காளர்களை திட்டிய தங்கர்பச்சான்!?

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் கடலூர் தொகுதி பாமக.,வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் பாமக சார்பில் நிஜ திரைப்பட டைரக்டர் தங்கர் பச்சான் போட்டியிட்டார். ஜூன் 4ல் வெளியான தேர்தல் முடிவுகளில் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1.85 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். தேமுதிக.,வின் சிவகொழுந்து 2வது இடத்தையும், பாமக.,வின் தங்கர்பச்சான் 3வது இடத்தையும் பிடித்தனர். தங்கர்பச்சான் வாங்கிய ஓட்டுகள் 2,05,244 (19.9 சதவீதம்). தேர்தலில் தோல்வியடைந்தாலும், தனக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்கு தங்கர் பச்சான் சென்றுள்ளார். அப்போது திறந்தவேனில் நின்று அவர் பேசியதாவது: என்னை பார்ப்பவர்கள் நீங்கள் எப்படிப்பட்ட படங்களை எடுப்பவர், தயவு செய்து உங்களுக்கு அரசியல் வேண்டாம் என்ற...
வீடுகளில் கிளி, மயில் வளர்த்தால் 7 ஆண்டு சிறை: பறவைகள் வளர்ப்போர் பதிவு செய்வது அவசியம்!

வீடுகளில் கிளி, மயில் வளர்த்தால் 7 ஆண்டு சிறை: பறவைகள் வளர்ப்போர் பதிவு செய்வது அவசியம்!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  வீடுகளில் கிளி, மயில் வளர்த்தால் 7 ஆண்டு சிறை: பறவைகள் வளர்ப்போர் பதிவு செய்வது அவசியம். வீடுகளில் செல்லப் பிராணிகளாகவும், வணிக நோக்கிலும் பறவைகள் வளர்ப்பதில் விதிகளை மீறினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், வரைவு விதிகளில் வனத்துறை மாற்றம் செய்துள்ளது. நாடு முழுதும், 1,364 வகையான பறவை இனங்கள் காணப்படுகின்றன. இதில், 194 வகை பறவை இனங்கள், உலக அளவில் அழியும் நிலையில் இருப்பதாக, பட்டியலிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளை பாதுகாப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து பறவைகளை கொண்டு வந்து வளர்ப்பவர்களும் பதிவு செய்வது கட்டாயமாகி உள்ளது. இதற்கான வசதி, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அழிவின் விளிம்பில் உள்ள ...
ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர் – சொல்வது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி!

ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர் – சொல்வது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  திருச்சி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது, அதிமுக, திமுக, பாஜக தலைமையில் மூன்று பிரதான கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. ஆனால் தேர்தலில் போட்டி என்று வருகின்ற போது அதிமுகவுக்கும், திமுகவுக்கும்தான் என்பதை இந்த நாடு அறியும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பிரதமரை விமர்சிப்பார், அதை பற்றி கவலை இல்லை; இன்னொன்று என்னை பற்றி விமர்சிப்பார். சரக்கு இருந்தால்தானே பேச முடியும், அவர் பொம்மை முதலமைச்சர். எம்ஜிஆர், அம்மா வழியில் 4 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை நாம் கொடுத்தோம். ஆனால் மூன்றாண்டு திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக்கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளை கொண்டு வந்தது அதிமுக அரசாங்கம். மூன்றாண்டு காலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியை கொண்டு வர முடியவில்லை. உதயநிதி ஸ்டாலின் மூன்று வருஷமாக ஒரே செங்கலை காட்டிக் கொண்...