ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 23
Shadow

தமிழக அரசியல்

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் கண்டறியப்படும்: பூச்சி முருகன் உறுதி!

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் கண்டறியப்படும்: பூச்சி முருகன் உறுதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
    வீட்டு வசதி வாரியத் தலைவராக பூச்சி.எஸ்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன் பொறுப் பேற்றுக் கொண்டார். திமுக தலைமை நிலையச் செயலராக பதவி வகித்து வரும் பூச்சி. எஸ். முருகனை வீட்டு வசதி வாரிய தலைவராக நியமித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் நேற்று கோயம்பேடு சிஎம்டிஏ அலுவலகத்தில் பூச்சி எஸ் . முருகன் வீட்டு வசதி வாரிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பூச்சி எஸ் முருகன், “வீட்டு வசதி வாரிய தலைவராக நியமித்ததற்கு முதல்வ...
பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!?

பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!?

HOME SLIDER, NEWS, politics, கட்டுரை, செய்திகள், தமிழக அரசியல்
    ராமதாஸ் வசம் உள்ள பலகோடி வன்னியர் சொத்தை மீட்க அரசு முயற்சி! பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!? வன்னிய முன்னோர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்கள் ஈட்டிய பெரும் சொத்துக்களை இன மக்களின் நலனுக்காக அர்ப்பணித்து தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி விட்டு சென்றார்கள். இந்த வன்னிய பெரியோர்கள் அமைத்து இருக்கும் அறக்கட்டளைகள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. சுமார் பத்து லட்சம் கோடி ருபாய் பெறுமான சொத்துக்கள் இந்த அறக்கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ளது. இந்த அறக்கட்டளைகள் எந்த நோக்கத்திற்காக அமைக்க பெற்றதோ அந்த நோக்கம் நிறைவேறாமல், காலபோக்கில் கேட்பாரின்றி இந்த அறக்கட்டளைகளின் சொத்துக்கள் சுயநல எண்ணம் கொண்டோர்  கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது. அந்த அறக்கட்டளைகளின் மூலமாக வரும் பல கோடி பெறுமான வருமானங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு கிட...
‘விடுதலை போரில் தமிழகம்” என்ற தலைப்பில் குடியரசு தினவிழா அலங்கார ஊர்திகள்!

‘விடுதலை போரில் தமிழகம்” என்ற தலைப்பில் குடியரசு தினவிழா அலங்கார ஊர்திகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் 75வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவையொட்டி புது டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், மத்திய அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் இடம்பெறும் எனவும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் இந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலமாக தெரிவித்திருந்தார...
”அய்யாதுரை”யாக அழைக்கப்பட வேண்டிய நான் ஸ்டாலின் ஆனது எப்படி? முதல்வர் சொன்ன ருசிகர தகவல்!

”அய்யாதுரை”யாக அழைக்கப்பட வேண்டிய நான் ஸ்டாலின் ஆனது எப்படி? முதல்வர் சொன்ன ருசிகர தகவல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  தமிழ் திரைப்பட நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரும், திமுக தலைமை நிலைய செயலாளரும், தமிழ் நாடு வீட்டுவசதி துறை வாரியத்தலைவருமான பூச்சி முருகன் இல்ல திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் அது ஒரு காரணப்பெயர். கம்யூனிச கொள்கை மீது கலைஞர் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதனால் தான் அவர் இறந்த நேரத்தில், நான் பிறந்த காரணத்தால் அவருடைய நினைவாக அந்த பெயரை எனக்கு சூட்டினார்கள். அந்த பெயரை சூட்டுவதற்கு முன்பு கலைஞர் அவர்கள் எனக்கு என்ன பெயர் வைக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் என்று சொன்னால், எனக்கு 'அய்யாதுரை' என பெயர் வைப்பதாக இருந்த‌து.  அய்யா என்றால் தந்தை பெரியார். துரை என்றால் அண்ணாவின் பெயருக்கு பின்னால் வரக்கூடிய துரை என்று வைக்க வேண்டும் என்று கருதி இருந்தா...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கட்சி, வேட்பாளர் பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கட்சி, வேட்பாளர் பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிய கையேட்டை வெளியிட்டுள்ளது.  அதில், வேட்பாளர் மற்றும் கட்சி பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தேதி ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனுவை பெற்று வேட்பாளர் தேர்வில் மும்முரமாக உள்ளன. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 18 பக்க அறிக்கையில், இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய காப்புத் தொகை (டெபாசிட்) இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்...
பெற்றோர்கள் காது கொடுத்து கேட்டால் குழந்தைகள் தற்கொலை எண்ணம் தவிர்க்கப்படும் என்கிறார் கிருத்திகா உதயநிதி

பெற்றோர்கள் காது கொடுத்து கேட்டால் குழந்தைகள் தற்கொலை எண்ணம் தவிர்க்கப்படும் என்கிறார் கிருத்திகா உதயநிதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    பள்ளிகளில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் பெண் குழந்தைகளின் பிரச்சனைகளை பெற்றோர்கள் காது கொடுத்து கேட்டாலே தற்கொலை போன்ற முடிவுகளை தவிர்க்கலாம் என்று கிருத்திகா உதயநிதி தெரிவித்தார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில், சைல்டு அடோலெசென்ட் பவுண்டேஷன் இந்தியா என்கிற தன்னார்வ அமைப்பு சார்பில், நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிருத்திகா உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய கிருத்திகா உதயநிதி, ’பிள்ளைகளுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, நம்முடைய விருப்பங்களை அவர்கள் மீது திணிக்க கூடாது என்றார். பிள்ளைகளின் விருப்பத்தை தெரிந்து அவர்களை வளர்க்க வேண்டும் என்றும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கு...
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவரானார் பூச்சி முருகன் –  முதல்வர் ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவரானார் பூச்சி முருகன் – முதல்வர் ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  தமிழக வீட்டுவசதி வாரிய தலைவராக பூச்சி முருகன், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழக தலைவராக துறைமுகம் காஜா ஆகியோரை நியமித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடிகரும் திமுக கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான அண்ணன் பூச்சி முருகன் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடை பெற்றது. https://twitter.com/onlykodanki/status/1484956533318623232?s=20     மண மக்களுடன் பூச்சி முருகன் அவர்கள் வரவேற்பு விழா மேடையில் இருக்கும் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பூச்சி முருகன் அவர்களை தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக நியமித்து அரசாணை வெளியானது.   மணமக்களை வாழ்த்த வந்தவர்கள் முதல்வர் கொடுத்த பரிசாக மகிழ்ச்சியடைந்து  வாரியத்தலைவர் பூச்சி முருகனுக்கும் வாழ்த்து தெரிவித்...
கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கி, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார்.   அதன்மூலம், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது இந்நிலையில், 2010 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான 10 அறிஞர்கள் விருது தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் விருதாளர்களுக்கு விருது வழங...
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் திருத்த வழக்கு தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் திருத்த வழக்கு தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
      தமிழ்த்தாயை கவுரவிக்கும் விதமாக முழு பாடலையும் பாட வேண்டும் என்றும், இதற்காக அரசு இணையதளம் உள்ளிட்ட ஆவணங்களில் முழு பாடலையும் வெளியிட தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில்,ஜெ.மோகன்ராஜ் என்பவர் கடந்த 2007-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய நீராருங் கடலுடுத்த' என தொடங்கும் பாடல், தமிழ்நாட்டில் அரசு, தனியார் நிகழ்ச்சி, பள்ளி, கல்லூரிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக பாடப்படுகிறது. ஆனால் இதில் பல வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது சுந்தரனார் எழுதிய முழு பாடலில், பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பது போல, கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும், ஆரியம்போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம்...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றசாட்டுகள் கூறியதாக ஸ்டாலின் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனிடையே கடந்த ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெற அரசாணையை தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணைகளை ஏற்று முதல்வர் ஸ்டாலின், முரசொலி செல்வம், கலைஞர் டிவி ஆசிரியர் திருமாவேலன் ஆகியோருக்கு எதிரான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன...