வியாழக்கிழமை, மே 28
Shadow

HOME SLIDER

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படக்குழு ரிலீசுக்கு குறித்த நல்ல நாள் பிப்ரவரி 2

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படக்குழு ரிலீசுக்கு குறித்த நல்ல நாள் பிப்ரவரி 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படக்குழு ரிலீசுக்கு குறித்த நல்ல நாள் பிப்ரவரி 2..! விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர். https://youtu.be/GRadOjRR4qk இதனை முன்னிட்டு இந்த படத்தின் சென்சார் காட்சியும் நடைபெற்று, படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ளது. முதலில் இந்த படத்தை ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழுவினர் இப்போது ஃபிப்ரவரி- 2, ரிலீசுக்கு நல்ல நாள் குறித்துள்ளார்கள். https://youtu.be/um0ndnAyc8c இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக்குடன் காயத்ரி, நிகாரிகா கதாநாயகிகளாக நடிக்க, இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இச...
சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதுப்படம்..!

சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதுப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதுப்படம்..! ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆர்.ரவிக்குமார், தன்னுடைய முதல் படத்திலேயே ‘டைம் மிஷின் கான்செப்ட்’டை மையமாக வைத்துப் படமாக்கி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார். அந்தப் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்ட நிலையில், தற்போது ரவிகுமாரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான். பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படம் முடிவடைந்ததும் ரவிகுமார் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 5வது படைப்பாக உருவாகும் இப்படம் அறிவியல் சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்படவிருக்கிறதாம். பிரம்மாண்டமான முறையில் உருவாகவிருக்கும் இப்படம் 2019ஆம் ஆ...
ஆண்டாள் ஒரு காமவேட்கை மிகுந்த கற்பனை கதாபாத்திரம்… கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை – ஞாநி கடைசி வீடியோ

ஆண்டாள் ஒரு காமவேட்கை மிகுந்த கற்பனை கதாபாத்திரம்… கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை – ஞாநி கடைசி வீடியோ

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், வீடியோ
ஆண்டாள் ஒரு காமவேட்கை மிகுந்த கற்பனை கதாபாத்திரம் . கவிஞர் வைரமுத்து ஆண்டாள் சர்ச்சையில் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை என மரணத்திற்கு முன்பு எழுத்தாளர் ஞானி தனது ஓ பக்கங்கள் வலைதளத்தில் கடைசி வீடியோ பதிவிட்டுள்ளார். அவரது கடைசி வீடியோ பதிவு...     https://youtu.be/pz7iCqop5Cs
‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்தும் விஜய்சேதுபதி..!

‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்தும் விஜய்சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்தும் விஜய்சேதுபதி..! தமிழ் நடிகர்களில் கேரக்டருக்காக அதிகம் மெனக்கெடும் நடிகர்கள் ஒரு சிலர்தான். மேக்கப் போடுவதற்கே பல மணி நேரம் செலவழித்து அந்த கேரக்டராகவே மாறும் நடிகர்கள் வரிசையில் விஜய்சேதுபதியும் இணைந்து கொண்டார். கதைக்கு கதை வித்தியாச கேரக்டர்கள் தேர்வு செய்யும் விஜய் சேதுபதியின் இப்போதைய தேர்வு பாலாஜி தரணிதரணின் புதிய படமான சீதக்காதி. மிக வித்தியாசமான கதைக்களமாக உருவாக உள்ள சீதக்காதியில் விஜய்சேதுபதி இளவயது 30, நடுத்தர வயது 50, முதிர்ந்த வயது 75 என 3 கேரக்டரில் நடிக்க இருக்கிறார். விஜய்சேதுபதிக்கு மேக்கப் போட ஹாலிவுட் பிரபல மேக்கப் கலைஞர் க்ரெக் கெனான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மேக்கப் போட்டதற்கு 3 முறை ஆஸ்கார் விருது வென்றவர். இந்த படத்தில் நாடக நடிகர் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர...
மாமல்லபுரம் கடற்கரையில் 133 அடி திருவள்ளுவர் முழு உருவ மணல் சிற்பம்

மாமல்லபுரம் கடற்கரையில் 133 அடி திருவள்ளுவர் முழு உருவ மணல் சிற்பம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்தியாவில் முதல் முறையாக மாமல்லபுரம் கடற்கரையில் 133 அடி திருவள்ளுவர் முழு உருவ மணல் சிற்பம் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளின் மறுநாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது முழு உருவ மணல் சிற்பத்தை உருவாக்க அரசு சிற்பக் கல்லூரி மாணவர்கள் முடிவு செய்தனர். இதையொட்டி 25-க்கும் மேற்பட்ட சிற்பக் கல்லூரி மாணவர்கள் கடந்த 4 நாட்களாக இந்த பிரமாண்ட சிற்பத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் தமிழ் சங்கத்தினர் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர். ஒரிசா கடற்கரை தான் மணல் சிற்பத்துக்கு புகழ் பெற்றது. அங்கு அப்துல் கலாம், திருவள்ளுவர் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் மார்பளவில் உருவாக்கப்பட்டது. ஆனால் மாமல்லபுரத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களையும் நினைவுப்படுத்தும் வகையிலும் கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயரத்தில் நிறுவப்ப...
சொகுசு கார் வரி ஏய்ப்பு விசாரணை அதிகாரிகள் முன் அமலா பால் ஆஜராகி விளக்கம்..!

சொகுசு கார் வரி ஏய்ப்பு விசாரணை அதிகாரிகள் முன் அமலா பால் ஆஜராகி விளக்கம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சொகுசு கார் வரி ஏய்ப்பு - நடிகை அமலா பால் ஆஜராகி விளக்கம். சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் நடிகை அமலா பால், விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். நடிகர் சுரேஷ் கோபி எம்.பி.யும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கேரளாவில் ஆடம்பர கார்களுக்கு 20 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் சுமார் 13 சதவீதமே வரி வசூலிக்கப்படுவதால், கேரளாவை சேர்ந்த பல பிரபலங்கள் தங்கள் சொகுசு காரை போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரியில் பதிவு செய்து வருகின்றனர். இதனால் கேரள அரசுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த வரி ஏய்ப்பு நடவடிக்கையில் பிரபல நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சுரேஷ் கோபி, நடிகர் பகத் பாசில் மற்றும் நடிகை அமலா பால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் இந்த விவகாரம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது...
முதல்வர், துணை முதல்வர் இணைந்து  அலங்காநல்லூர் வாடிவாசலில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க காளைகள் சீறிப்பாய்ந்தன..!

முதல்வர், துணை முதல்வர் இணைந்து அலங்காநல்லூர் வாடிவாசலில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க காளைகள் சீறிப்பாய்ந்தன..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது: முதலமைச்சர்-துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தனர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து வருகிறது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடைபெற்றது.இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. முன்னதாக வாடிவாசலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்தார். “ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணி காப்போம் என்றும், விளையாட்டில் சீறி வரும் காளைகளுக்கும் எவ்வித ஊறும் செய்ய மாட்டோம் என்றும் இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் சிறிதும் தீங்கு நேராமல் அரசு விதிமுறையை பின்பற்றி விளையாடுவோம் என்றும் உறுதி மொழிகிறோம்” என முதல்வர்...
“ டீக்கடை பெஞ்ச் “ செண்டிமென்ட் கலந்த ஒரு நகைச்சுவைப்படம்..!

“ டீக்கடை பெஞ்ச் “ செண்டிமென்ட் கலந்த ஒரு நகைச்சுவைப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
“ டீக்கடை பெஞ்ச் “ செண்டிமென்ட் கலந்த ஒரு நகைச்சுவைப்படம்..! அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ டீக்கடை பெஞ்ச் “இந்த படத்தில் ராம கிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். மற்றும் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ராலட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பருத்திவீரன் செவ்வாழை, மனிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – ராம்ஷேவா. இந்த இயக்குனர் ராம் ஷேவாவிடம் படத்தைப் பற்றி கேட்டோம்.. “இது செண்டிமென்ட் கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படம். நாயகன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை நாயகி தருஷி நாயகன் வீட்டிலிருந்த அவருக்கு தெரியாமல் எடுத்து செல்கிறாள். இதை அறிந்த நாயகன் அவளிடம் கேட்க இருவருக்க...
சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டும்  ‘மதுரவீரன்’ பட பாடல்..!

சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டும் ‘மதுரவீரன்’ பட பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், முன்னோட்டம், வீடியோ
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘மதுரவீரன்’. பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்து இயக்கி வரும் இந்த படத்தில் ‘என்ன நடக்குது நாட்டுல’ என்று துவங்கும் ஒரு பாடல் இடம்பெறுகிறது. https://youtu.be/6yzZPzwLZwc சமீபத்தில் வெளியான இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டும் விதமாக அமைந்துள்ள இப்பாடல் குறித்து இயக்குனர் பி.ஜி.முத்தையா கூறும்போது, ‘‘எனக்கு படத்தில் பட்டுக்கோட்டையார் பாடலை போல ஒரு பொதுவுடமை பாடல் தேவைப்பட்டது. இதை நான் கவிஞர் யுகபாரதியிடம் கூறியதும் அவர், ‘‘என்ன நடக்குது நாட்டுல’ என்று தொடங்கும் பாடல் வரிகளை எழுதி கொடுத்தார். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இப்போது அந்த பாடல் மக்களிடம் சென்றடைந்துள்ளது. அரசியல் கட்சி பொதுகூட்டங்களிலும் இப்பாடல் தற்போது முக்கிய பங்கு...