முதல்வர் பதவிக்கு ஆசையில்லை என்ற ரஜினி ஒரு அற்புதமான மனிதராம் – சொல்கிறார் பாரதிராஜா
பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை:
எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் 'ரஜினி' என்ற மந்திரத்தை விட,
'ரஜினி' என்ற மனிதம்
எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன்.
இன்று அந்த மனிதம் வெளிப்படையாக, மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது.
தமிழன் தான் ஆட்சிக்கு தலைசிறந்தவன்
என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு,
ஆகியவற்றின் மூலம்
பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும்.
ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாக கூட இருக்கலாம்.
ஆருயிர் நண்ப...