கொரானா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியுமாம் சொல்கிறார் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி!
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கொரானா சிகிச்சைக்கான மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரானாவை தடுக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாலேயே தமிழகத்தில் கொரானா பரவியது. மருத்துவர்கள், செவிலியர்களின் சிறப்பான பணியினால் குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளது.
தினமும் கொரானா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் இதுவரை 8 லட்சத்து 27 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. வசதி இருப்பவர்கள் தான் தனியார் மருத்துவமனையை...
உலக யோகா தினத்தை முன்னிட்டு ஷில்பா ஷெட்டியின் யோகா பயிற்சி நேரலையில் நாளை ஒளிபரப்பாகிறது.
ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சிபிஎஸ்இ தனது மாணவர்களுக்கு யோகா பயிற்சியை வழங்க முடிவெடுத்துள்ளது.
’ஆரோக்கிய இந்தியா’ திட்டத்தின் கீழ் நடிகையும் புகழ்பெற்ற யோகா பயிற்சியாளருமான ஷில்பா ஷெட்டி, யோகா பயிற்சியை நேரலையாகச் செய்துகாட்ட உள்ளார்.
இந்தச் சிறப்பு நிகழ்வு ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இது ஆரோக்கிய இந்தியா யூடியூப் பக்கத்திலும் சிபிஎஸ்இ வாரியத்தின் சமூக வலைதளப் பக்கங்களிலும் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
யோகா குறித்த கேளிக்கை மற்றும் அறிவுபூர்வம...
திருப்பதியில் மேலும் 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு நாளை முதல் அனுமதி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் மேலும் கூடுதலாக மூவாயிரம் உள்பட நாளொன்றுக்கு ஒன்பதாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.
கொரானா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் உள்ளூர் மக்கள் மற்றும் ஊழியர்கள் தரிசனம் செய்ய அனுமதித்தது.
இதையடுத்து, ஜூன் 11 முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கியது.
நாளொன்றுக்கு 6,750 பேர் என்ற நிலையில், 3 ஆயிரம் பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்திலும், 3 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனமும் செய்து வந்தனர்.
மேலும், விஐபி தரிசனத்தில் 750 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், எழுமலையான் தரிசனத்தை அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடு...
கொரானா சிகிச்சைக்கு அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை ஒப்படைக்க மாநகராட்சி உத்தரவு - அதிர்ச்சியில் மாணவர்கள்
கொரானா சிகிச்சை அளிப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக விடுதியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்படைக்குமாறு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் பல்கலைக் கழக விடுதியில் மாணவர்களின் உடைமைகள் இருப்பதால் இப்போதைக்கு ஒப்படைக்க முடியாது என்று துணைவேந்தர் கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:
தேசிய பேரிடர் காலத்தில், அரசு கட்டடங்கள் மருத்துவ முகாமிற்காக பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக கட்டிடங்களை குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி மூலம் கடிதம் எழுதி உள்ளோம். ஆகவே அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி கட்டிடத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
மாநகராட்சி கமிஷ்னரின் இந்த அறிவிப...
அரசு வெளிப்படையாக இல்லாத்தால் தான் கொரானா இப்படி பரவி உள்ளது என கமல்ஹாசன் குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனை திறனை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எவ்வளவு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன எந்த தகவல் குறித்து கேள்வி எழுந்துள்ளன.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன்‘‘வெளிப்படையின்றி செயல்பட்டதால்தான் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரி...
உலகம் முழுதும் பரவி பல லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கி இன்னும் அச்சத்தை ஏற்படுத்தி கோர தாண்டவம் ஆடி வரும் கொரானாவை ஒழிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் மிக தீவிரமான ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் உலகின் முதல் நாடாக ரஷியாவில் கொரானா தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாம். அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் 18 தன்னார்வலர்களுக்கு கொரானா தடுப்பூசி முதல் முறையாக போடப்பட்டது. இந்த ஊசி போடப்பட்டதில், அவர்களுக்கு எந்தவொரு பக்க விளைவு ஏற்பட்டதாகவோ, அவர்களது உடல்நிலை குறித்து புகார் எதுவும் எழுந்ததாகவோ தகவல் இல்லை என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர்கள் அனைவரும் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் தீவிர மேற்பார்வையில் வைக்கப்பட்டிருப்பார்கள் என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் கூறி உள்ளது.
ரஷியாவில்...
உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், அன்பின் பொதுமக்களுக்கும் உங்கள் சிலம்பரசன் TR -இன் வணக்கங்கள்.
மிகுந்த துயரமான நாட்களாக இந்த சில நாட்கள் கடந்து போகின்றன... டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய நண்பர்கள். இவர்களது இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது.
சினிமாவிற்கான இழப்பாகப் பார்க்கிறேன். எனது நண்பர்களை இழந்துவிட்ட பேரிழப்பாகப் பார்க்கிறேன். இவர்களின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்.
இழப்பால் துயருறும் மூவரின் குடும்பத்திற்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஆறுதலும் அவர்களைத் தேற்றிவிடாது என்பதறிவேன். எனது கண்ணீரும் இதயமும் உங்களின் இந்த நிலையை மீட்டெடுக்க வேண்டிக் கொண்டே இருக்கும்.
இதேபோல் கொரானா காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம். இறப்பின் கதறல்.
கொரானாவின் பாதிப்பில...
சும்மா சுத்தும் வாகனஙகள் பறிமுதல் செய்யப்படும் போலீஸ் எச்சரிக்கை
முழு ஊரடங்கையொட்டி சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை பெருநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 19-ந்தேதி அதிகாலை முதல் 30-ந்தேதி இரவு 12 மணி வரையில் 12 நாட்களுக்கு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்சு மற்றும் அமரர் ஊர்தி சேவைகளின் போக்குவரத்துக்கு அனுமதி உண்டு.
மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனம், ஆட்டோ, டாக்சி உபயோகம் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் வாகனங்களை பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே அதாவது 2 கி.மீ. தொலைவுக்குள் மட்டும் நடந்து சென்று பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் பிற இடங்களுக்கு வாகனங்களில் செல...
கொரானா தடுப்பு உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி நிதி வேண்டும் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
கொரானா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி 15 மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.
இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த ஆலோசனையின் போது முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது;-
“தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி வழங்க வேண்டும்,
2020-21-ம் நிதியாண்டுக்கான உள்ளாட்சி அமைப்பு நிதியில் 50 சதவீதத்தை வழங்க வேண்டும்,
சிறுகுறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.1000 கோடியை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு மறு நிதியுதவி திட்டத்தின் ...