புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

நான் தான் ஜெயலலிதாவின் மகள்: உரிமை கோரி பெங்களூர் பெண் அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

நான் தான் ஜெயலலிதாவின் மகள்: உரிமை கோரி பெங்களூர் பெண் அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது எப்படி பரபரப்புடன் அவரது செய்கைகள் இருந்ததோ அதே போல அவர் மரணத்திற்கு பிறகும் அவர் குறித்த செய்திகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை என்கிற அளவுக்கு பரபரப்புகள் வந்து கொண்டேதான் இருக்கிறது. மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் ஜெ தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோரி உரிமை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதாவும் (வயது 38) ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரியுள்ளார். ஜெயலலிதா தன் சொந்த தாய் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய அம்ருதா, இதுகுறித்து  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், ஜெயலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜெய...
பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை

பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இயக்குனர் சசிக்குமாரின் மைத்துனர் அசோக்குமார், பைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் நெருக்கடி அதிகரித்த நிலையில், அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டி கொடுமை காரணமாக அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அசோக்குமாரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது போலீசார் தேடுவதை அறிந்த அன்புச்செழியன் குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அன்புச்செழியனுக்கு எதிராக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்  அனுப்பி உள்ளது. வெளிநாடுகளுக்கு அவர் தப்பிச் செல்வவதை  தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  ...
ஜீவாவின் கீ பட சிங்கிள் டிராக்கை  இயக்குனர் கவுதம் மேனன் 28ம் தேதி மாலை வெளியிடுகிறார்…!

ஜீவாவின் கீ பட சிங்கிள் டிராக்கை இயக்குனர் கவுதம் மேனன் 28ம் தேதி மாலை வெளியிடுகிறார்…!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், திரைப்படங்கள்
  ஜீவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கீ’. புதுமுக இயக்குநர் காலீஸ் இயக்கியுள்ள இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஜீவாவுடன் நிக்கி கல்ரானி, அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு வெளியிட்டார். தற்போது இப்படத்தில் இடம் பெறும் சிங்கிள் பாடல் ஒன்றை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட இருக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் ‘ராஜா பாட்டு...’ என்ற பாடலை இயக்குனர் கவுதம் மேனன் வரும் நவம்பர் 28ம் தேதி இரவு 7.45 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். விரைவில் இப்படம் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது....
இந்திரஜித் விமர்சனம்

இந்திரஜித் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  1400 வருடம் முன் சூரியனில் இருந்து விழுந்த மருத்துவ குணம் வாய்ந்த ஒரு அபூர்வ பொருளைத் தேடும் இந்திய தொல்லியல் துறையின் வீர தீரம் தான் கரு! பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து தெறித்துவரும் ஒரு சிறியதுகள் பூமியில் வந்து விழுகிறது.மனிதனுக்கு ஏற்படும், எப்பேர்பட்ட காயங்களையும், தீராத நோய்களையும் குணப்படுத்தும் சக்தி அந்த துகளுக்கு இருப்பதால் சித்தர்கள்அதை ஒரு ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். அவர்கள்காலத்திற்குப் பிறகு அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.இதை தொல்பொருள்ஆராய்ச்சியின்பேராசிரியராக இருக்கும் சச்சின்கேதகர் தேட ஆரம்பிக்கிறார். இவரிடம் உதவியாளராக வந்துசேருகிறார் இந்திரஜித். -கௌதம் கார்த்திக், அதேநேரத்தில் ,இந்திய தொல்லியல்துறையைச் சேர்ந்த அதிகாரிஒருவரும் அந்தப்பொருளைத்தேடுகிறார். இறுதியில் அந்த சக்தி வாய்ந்தசிறு துகள் யாரிடம் கிடைத்தது...
தெலுங்கு பொட்டு 1 கோடிக்கு விற்பனை..!

தெலுங்கு பொட்டு 1 கோடிக்கு விற்பனை..!

CINI NEWS, HOME SLIDER, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், வீடியோ
  ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம்,ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனையாவது என்பது வரம் மாதிரி. எல்லா படங்களும் விற்பனையாகி விடுவதில்லை. ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிப்பில் வடிவுடையான் இயக்கத்தில் அம்ரீஷ் இசையில் பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கும் பொட்டு படம் பரபரப்பாக விற்பனையாகி விட்டது. இந்த படத்தின் ஆடியோவை மலேசியாவில் வெளியிட்டார்கள். மனிதர்கள் செய்யும் சாகசங்களை விட பேய்கள் செய்யும் சாகசங...
RK நகர் இடைத்தேர்தல் விவரங்கள்

RK நகர் இடைத்தேர்தல் விவரங்கள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி சென்னை மாவட்டத்தற்குட்பட்ட ஆர்.கே.நகர் சட்ட மன்ற தொகுதிக்கு வருகின்ற டிசம்பர்-21 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான சட்டம் ஒழுங்கு பார்வையாளரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளின் அட்டவணை பின்வருமாறு வேட்பு மனுதாக்கல் துவக்க நாள்- 27.11.2017 (திங்கட்கிழமை) மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாள்- 04.12.2017 (திங்கட்கிழமை) வேட்பு மனு பரிசீலனை- 05.12.2017 (செவ்வாய்கிழமை) வேட்புமனுவினை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள்- 07.12.2017 (வியாழக்கிழமை) தேர்தல் நாள்- 21.12.2017 (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நாள்- 24.12.2017(ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடவடிக்கைகள் இந்த நாளுக்கு முன்பாக முடிவுறும் நாள் 26.12.2017(செவ்வாய்கிழமை) இந்த தேர்தலை முன்னிட்டு காவல்துறை சட்ட ஒழுங்கு பார்வையாளராக இம்மானுவேல்...
விஷ்னு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை..!

விஷ்னு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
பரபரப்பை ஏற்படுத்திய விஷ்னு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை .  விஷ்னு மஞ்சு நடிக்கும் குறள் 388படத்தின் கிளர்ச்சியூட்டும் முதல் பார்வை .    விஷ்னு மஞ்சு நடிக்கும் குறள் 388-ன் முதல் பார்வை நவம்பர் 23,புதன்கிழமை அன்று வெளியானது. படத்தின் கதாநாயகன் விஷ்ணு மஞ்சுவின் பிறந்த நாளை முன்னிட்டு,இப்படத்தின் முதல் பார்வை வெளியானது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படித்தின் முதல் பார்வையை விஷ்ணு மஞ்சு  ட்விட்டரில் வெளியிட்டார். பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், முதல் பார்வையில் பல தலைவர்களின்  படங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.  எம்.ஜி.ஆர், கருணாநிதி,ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்பட பல தேசிய கட்சிகளின் தலைவர்கள் படம் இடம் பெற...