அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்ட திரைப்படமாக வெளியாகியிருக்கும் ‘ஜவான்’ பதுங்குகிறதா? பாய்கிறதா? 3.5/5
கதைப்படி ராணுவ வீரரான ஷாருக்கான், ராணுவத்துறையில் நடந்த ஒரு மோசடி குறித்து வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். அதனால், பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஷாருக்கானை தேசதுரோகியாக முத்திரை குத்தி கொலை செய்துவிடுகிறார். ஷாருக்கானின் மனைவி தீபிகா படுகோனே கொலை குற்றத்திற்காக சிறைக்கு செல்ல, அங்கே அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனவுடன், தனது அப்பாவின் மீது விழுந்த களங்கத்தை துடைப்பதோடு, அரசியல்வாதிகளால் பாதிப்புக்குள்ளான அப்பாவி மக்களுக்காக புதிய வழியில் போராட்டம் ஒன்றை அறங்கேற்றுகிறார். அது என்ன? அதை எப்படி செய்கிறார்? என்பதை அதிரடியாகவும், அரசியல்வாதிகளுக்கு சாட்டையடியாகவும் சொல்லியிருக்கிறார்.
அப்பா விக்ரம் ரத்தோர், மகன் ஆசாத் ரத்தோர் ...
”பரம்பொருள்” சரத்துக்கு கை கொடுக்குமா? கோடங்கி பார்வை 2.5/5
கவி கிரியேஷன்ஸ் சார்பில் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இன்று வெளியாகி இருக்கும் படம் தான் பரம்பொருள். இதில் சரத்குமார், அமிதாஷ் மற்றும் காஷ்மிரா பர்தேஷி ஆகியோர் நடிப்பில் இந்த படம் உருவாகி இருந்தது.
சிலை கடத்தலை மையமாக வைத்து சமீபகாலமாக நிறைய படங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர் படமும் சிலை கடத்தலை வைத்து தான் எடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் பரம்பொருள் படமும் சிலை கடத்தலை வைத்து தான் எடுக்கப்பட்டதாக இருந்தாலும் இயக்குனர் இதில் வித்தியாசம் காட்டி இருக்கிறார்
சகோதரியின் மருத்துவ சிகிச்சைக்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் அமிதாஷ் ஆதி என்ற கதாபாத்திரத்தில் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து வருகிறார். அப்படிதான் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சரத...
லக்கிமேன் ரசிக்க வைக்கிறதா? கோடங்கி பார்வை 3.5/5
தமிழ் சினிமாவில் இப்போதைக்கு ரொம்ப லக்கிமேன் என்றால் அது யோகிபாபுதான்… லக்கிமேன் என்ற பெயரிலேயே யோகிபாபு, வீரா, ரேச்சல் ரபேகா, அப்தூல், ஆர் எஸ் சிவாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் இந்த படம் உருவாகியிருக்கிறது..
நினைவு தெரிந்த நாளில் இருந்தே தான் ஒரு அன் – லக்கி ஆசாமி என கருதிக் கொண்டிருக்கிறார் யோகிபாபு. தான் தொட்ட காரியம் எதுவும் சரிவராது என நினைத்தபடி மனைவி மகனுடன் வாழ்கிறார்.
இப்படியிருந்த யோகிபாபு வாழ்க்கையில் ஒருநாள், சிட்பண்ட் நிறுவனத்தில் கார் பரிசாக கிடைக்கிறது., இந்த கார் தான் தன் வாழ்வில் கிடைத்த முதல் அதிர்ஷ்டமாக நினைக்கிறார்.
மனைவியோ அந்த காரை விற்று, தொழில் தொடங்க சொல்கிறார். ஆனால், யோகிபாபுவிற்கோ அப்படி செய்ய விரும்பாமல்,தனது அதிர்ஷ்டம் இந்த கார் என்று ...
ரஜினி - நெல்சன் கூட்டணியை ஜெயிக்க வைத்ததா ஜெயிலர் - கோடங்கி விமர்சனம் 3.5/5
ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெயிலர்.
மிக நேர்மையான துணிச்சலான ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்று
தன் மனைவி ரம்யா கிருஷ்ணன் மகன் வசந்த் ரவி மருமகள் மிர்னா மற்றும் பேரன் ரித்திக் உடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார ரஜினிகாந்த். வசந்த் ரவி காவல்துறையில் உதவி கமிஷனராக பணிபுரிகிறார். சிலை கடத்தல் கும்பலை பிடிக்க செல்லும்போது ரவியை அந்த கும்பல் கொலை செய்து விட்டதாக சொல்கிறார்கள். நேர்மையாக வளர்த்ததால்தான் தன் மகன் இறந்து விட்டதாக எண்ணி கலங்கும் ரஜினி அந்த ரவுடி கும்பலை வெறித்தனமாக தேடித் தேடி பழி தீர்ப்பது தான் படத்தின் கதை.
கதை என்னமோ பழைய உருட்டாக இருந்தாலும் மேக்கிங்கில் வித்தியாசம் காட்ட முயற்சித்து அதில் ஓரளவு வெற்ற...
எம்.எஸ்.தோனியின் “எல்ஜிஎம்” சினிமா ஆட்டம் ஜெயிக்குமா?
கோடங்கி விமர்சனம் 2.5/5
கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, வெற்றிகரமான கேப்டனாக வலம் வருகிறவர் எம்.எஸ்.தோனி. இவர் தற்போது சினிமாவில் அதுவும் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்துள்ளார்.
அவர் முதன்முதலில் தயாரித்துள்ள திரைப்படம் லெட்ஸ் கெட் மேரீடு (எல்ஜிஎம்). இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருக்கிறார்
யோகிபாபு, நதியா, ஆர்.ஜே.விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தோனியின் முதல் தயாரிப்பு என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் படம் இன்று முதல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.
கதை ரொம்ப சின்னது…
”ஹரிஷ் கல்யாணும் இவ...
"அநீதி" அசத்துகிறதா? அசதியை ஏற்படுத்துதா? கோடங்கி விமர்சனம் 2.5/5
வெயில்,அங்காடி தெரு என யதார்த்தங்களை பதிவு செய்த வசந்த பாலனின் அடுத்த படைப்புதான் "அநீதி"
பணக்கார வீட்டில் வேலைக்காரர்கள் மீது அன்றாடம் நடக்கும் "அநீதி" அவலத்தை ஆவேசமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.
அர்ஜுன் தாசின் ஆக்ரோஷமான சைக்கோத்தனம் சில இடங்களில் அட டாவும்... பல இடங்களில் அய்யோவும் போட வைக்கிறது. நல்ல மேனரிசம்... அந்த குரலும் கைகொடுக்கிறது... ஆனால் அத்தனை ஆக்ரோஷம் அதிகம்!
படத்துக்கு படம் துஷாரா விஜயனின் உழைப்புக்கு கண்டிப்பாக பலன் உண்டு... பணக்கார வீட்டு வேலைக்காரியாக வாழ்ந்திருக்கிறார்...
பணக்கார பெண்ணாக வரும் சாந்தா தனஜெயன் பணக்கார திமிரிலும், பாசத்துக்கு ஏங்கும் தாயாகவும் அசத்துகிறார்... வெளி நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இந்த கதாபாத்திரம் நெத்தி...
நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள "சக்ரவியூகம்" திரைப்படம் சேத்குரி மதுசூதன் இயக்கிய இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள்.
துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் துப்பறியும் கதைக்களத்தில் வெற்றிபெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் படம் "சக்ரவியூகம்".
கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்கும் படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
சஞ்சய் ராவின் (விவேக் திரிவேதி) மனைவி ஸ்ரீ(ஊர்வசி ) தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார் விசாரணை அதிகாரி எஸ்ஐ சத்யா. (அஜய்)...
தண்டட்டி ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5
தென் மாவட்ட மக்கள் குறிப்பாக பெருசுகள் காதுகளில் சுமந்து திரிகிற தண்டட்டி’ எனப்படும் கனமான ஆபரணத்தை மையப்படுத்திய மண்மணம் மாறாத கதையில் காமெடியும் கலந்த படைப்பு தான் தண்டட்டி!
கிராமத்தில் வயதான பெண்மணி இறந்துபோகிறார். அவரது காதுகளில் தொங்கும் சில லட்ச ரூபாய் மதிப்புமிக்க ‘தண்டட்டி’யை அவருடைய மகனும் மகள்களும் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்; திட்டமிடுகிறார்கள். உறவினர்கள், ஊர்க்காரர்கள், அக்கம் பக்கத்தினர் என ஏராளமானோர் கூடியிருக்கும் சுழலில் திடீரென அந்த தண்டட்டி காணாது போகிறது.
வேறு ஒரு காரணத்துக்காக அந்த இடத்திற்கு வந்திருக்கும் காவல்துறை அதிகாரிக்கு, தண்டட்டியை திருடியது யார் என கண்டுபிடிக்கும் பொறுப்பு தொற்றிக் கொள்கிறது. விசாரணையை தொடங்குகிறார். கதைக்களம் சூடுபிடிக்கிறது…
தண்டட்டி யாரால...
இருட்டும் அதில் ஒளிந்திருக்கும் குற்றங்களும், விசாரணைகளும் தான் "மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்" கதையாக மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு ஏரியாவில் இரவில் துவங்குகிறது கதை. வரலெட்சுமியின் காதலரான மகத் ஒரு க்ரைம் நடப்பதை பார்க்கிறார். பார்த்ததை போலீஸிடம் போய் சொல்கிறார். அதனால் மகத்திற்கு ஒரு ஆபத்து நிகழ்கிறது. அது என்ன ஆபத்து? அவர் பார்த்த க்ரைம் என்ன? அதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? மகத் தப்பித்தாரா? வரலெட்சுமி என்ன ரியாக்ட் செய்தார்? சந்தோஷ் பிரதாப், ஆரவ் ஆகியோரின் பங்கு என்ன? என பல கேள்விகளுக்கு நல்ல திருப்பங்களோடு மினிமம் கியாரண்டி தரும் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன்.
போலீஸ் கேரக்டருக்கு பக்கா பொருத்தம் வரலெட்சுமி சரத்குமார்.
அவர் வசனம் பேசும் காட்சிகளை விட வசனம் இல்லாத காட்சிகளில் மிரட்டுகிறார். பல இடங்களில் கண்கள் பேசுகிறது. கலகத்தலைவ...