வியாழக்கிழமை, ஜூலை 9
Shadow

தமிழக அரசியல்

”எங்கள் ஆதரவு உண்டு” அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் திடீரென முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

”எங்கள் ஆதரவு உண்டு” அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் திடீரென முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தங்களின் 3-2-2022 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதில், மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முன்வடிவினை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, கவர்னர் தமிழ்நாடு அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்ட அரங்கில் நடைபெற இருக்கும் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்க, அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினரை அனுப்பி வைக்குமாறு தாங்கள் கோரி உள்ளீர்கள். ‘நீட் தேர்வு ரத்து’ குறித்த அனைத்திந்திய அ.தி.மு.க. கருத்துகள் ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும், 8-1-2022 அன்று நடைபெற்ற ...
நீட் விலக்கு மசோதா… வருகிற 8-ந்தேி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்!

நீட் விலக்கு மசோதா… வருகிற 8-ந்தேி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பிய நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி மசோதாவை அப்படியே நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாகவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு கூட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் வருகிற 8-ந்தேி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்....
பெண்கள் வார்டு என தெரியாமலேயே பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல்!

பெண்கள் வார்டு என தெரியாமலேயே பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    பெண்கள் வார்டில் பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல். தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லமல் இல்லை. அதே நேரம் சுவாரஸ்யங்களுக்கும் குறைவில்லை. ஜெயலலிதா போல வேடம் அணிந்த குழந்தயை அழைத்து வந்து மனுத்தாகல் செய்த அமமுக வேட்பாளர். வெட்பு கட்டனத்தை சில்லறைகளாக கொண்டு வந்த வேட்பாளர். இப்போது அந்த வரிசையில் பழனி,ஆயக்குடி 6வது வார்டு பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பாமக சார்பாக ஆறுமுகம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு. கடைசியில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தனிக்கதை.  பெண்கள் வார்டு என்று தெரியாமலேயே  வேட்புமனு செய்யும் பாமகவின் அவல நிலை.  ...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
      நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ள நிலையில் இது தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இந்த மசோதாவை ஆளுநர் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, அந்தச் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் 1-2-2022 அன்று சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.   மேலும், நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவானது, கி...
உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர் மன்றம் திமுகவுக்கு ஆதரவு

உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர் மன்றம் திமுகவுக்கு ஆதரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் ரசிகர் மன்றம் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும். தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவுப்பெற்ற நிலையில், வரும்7ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் சுயேச்சையாக போட்டியிட்டனர்.   மொத்தம் 169 பேர் போட்டியிட்ட நிலையில், இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துகொண்டார். இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்...
இன்றைய முக்கியச் செய்திகள் Today Head Lines 4.2.22

இன்றைய முக்கியச் செய்திகள் Today Head Lines 4.2.22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி ஊர்வலம், பேரணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 11-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, சென்னை மாநகராட்சி மன்றக் கூடம் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் அமலான பின்பு கடந்த 7 நாட்களில் சென்னையில் மட்டும் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் 699 மூத்த அதிகாரிகள் வட்டார பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 27,365 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.   நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை ...
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? நினைவு கூர்ந்த மு.க.ஸ்டாலின்

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? நினைவு கூர்ந்த மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் ஆளுநர் குறித்த அண்ணாவின் கேள்வியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் விலக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையை அடுத்து நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக...
அரசியலில் களமிறங்கும் திவ்யா சத்யராஜ்!

அரசியலில் களமிறங்கும் திவ்யா சத்யராஜ்!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவருடைய மகள் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து நிபுணரான இவர், கொரோனா தொற்று நோய் பரவும் நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தினார். மேலும் கொரோனா நேரத்தில் பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். அதுபோல் சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு திவ்யா சத்யராஜ் கடிதம் எழுதினார். இந்நிலையில், திவ்யா சத்யராஜ் அரசியலில் களமிறங்க இருக்கிறார். இவருக்கு ஆதரவாக இ...
குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொண்டவர்கள் முதல்வரிடம் வாழ்த்து!

குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொண்டவர்கள் முதல்வரிடம் வாழ்த்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட (National Service Scheme) மாணவ, மாணவியர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.   https://twitter.com/CMOTamilnadu/status/1489173122935058432?s=20&t=WfBBch_nL1hwEO_17u6ihA
பெரிய சாம்ராஜ்ஜியத்தையும் வீழ்த்தி, சாமானியர்களும் சரித்திரம் படைக்க முடியும் என நிரூபித்த தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர் அண்ணா – டிடிவி தினகரன்

பெரிய சாம்ராஜ்ஜியத்தையும் வீழ்த்தி, சாமானியர்களும் சரித்திரம் படைக்க முடியும் என நிரூபித்த தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர் அண்ணா – டிடிவி தினகரன்

HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நம் கொள்கைத் தலைமகன், ஜனநாயகம் எனும் சக்தியைக் கொண்டு எவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தையும் வீழ்த்தி, சாமானியர்களும் சரித்திரம் படைக்க முடியும் என நிரூபித்த தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று. அறிஞர் அண்ணா அவர்களின் வழியில் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைத்திடவும் எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்திடவும் பாடுபட இந்நாளில் உறுதியேற்றோம். டிடிவி தினகரன்   https://twitter.com/onlykodanki/status/1489169200107388928?s=20&t=WfBBch_nL1hwEO_17u6ihA...