புதன்கிழமை, ஜூலை 8
Shadow

தமிழக அரசியல்

ராமாபுர மெட்ரோ பால விபத்து CMRL, L&T நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்!

ராமாபுர மெட்ரோ பால விபத்து CMRL, L&T நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி  இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் உள்ள L&T தலைமை அலுவலகம் அருகே,  75 டன் எடை கொண்டஇரண்டு I-கிர்டர்கள் திடீரென இடிந்து விழுந்தன. இந்த விபத்தில், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சி. ரமேஷ் (43), பில்லிங் மெஷின் நிறுவனத்தில் சர்வீஸ் இன்ஜினியராக பணிபுரிந்தவர், தனது இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, கான்கிரீட் கிர்டர்களுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார். மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, விபத்து குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், கட்டுமானத்தில் ஏற்பட்ட பிழைகளால் கிர்டர்கள் இடிந்ததாகவும், ஒப்பந்ததாரரான L&T நிறுவனத்தின் கவனக்குறைவு மற்றும் தற்காலிக A-பிரேம் ஆதரவு அமைப்பில் ஏற்பட்ட தோல்வியே விபத்துக்கு முக்கிய கா...
டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி.!

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி.!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல்
  தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆவணங்கள் போதுமான ஆதாரங்களாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக்கில் மதுபான கொள்முதல், பார் உரிமங்கள் வழங்குதல், மதுபான போக்குவரத்து டெண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ரூ.1000 கோடி மதிப்பிலான முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த முறைகேடுகளில் சில முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை சந்தேகித்தது. அதன்படி, ஆகாஷ் பாஸ்கரன், தமிழ் திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராகவும், “Dawn Pictures” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ளவர். அவர் தயாரித்து வரும் படங்களில் தனுஷின் “இட்லி...
ஆள் கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

ஆள் கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜி.பி. ஜெயராமனைக் கைது செய்யுங்கள் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனை காவல்துறையின் பாதுகாப்பில் வையுங்கள் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ஆள் கடத்தலுக்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்திய வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனைக் காவல் சீருடையிலேயே போலீசார் கைது செய்தனர். தற்போது போலீசார் விசாரணையில் ஜெயராமன் உள்ளார். குற்ற வழக்கில் கைது செய்யப்படும் அரசு ஊழியர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பட்சத்தில் ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தன்னை கைது செய்ய பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜெயராமன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண...
சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை சஸ்பென்ட் செய்ய பரிந்துரை!

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை சஸ்பென்ட் செய்ய பரிந்துரை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  புரட்சிப் பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. தொடர்புடைய சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராமிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை உடனே கைது செய்யவும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். இதனடிப்படையில் ஏடிஜிபி ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் ஜெயராமிடம் நேற்று இரவு முதல் விடிய விடிய திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே ஏடிஜிபி ஜெயராமை சஸ்பென்ட் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சஸ்பென்ட் நடவடிக்கைக்குப் பின்னர் ஜெயராமை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.  ...
200 – 300  பேருடன் கோர்ட்டுக்கு வந்தால் பயந்து விடுவோமா என MLA ஜெகன் மூர்த்தியை  காட்டமாக கேள்வி கேட்ட நீதிபதி!

200 – 300 பேருடன் கோர்ட்டுக்கு வந்தால் பயந்து விடுவோமா என MLA ஜெகன் மூர்த்தியை காட்டமாக கேள்வி கேட்ட நீதிபதி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  கட்டப் பஞ்சாயத்து செய்யவா மக்கள் உங்களை தேர்ந்தெடுத்து சட்டப் பேரவைக்கு அனுப்பி வைத்தார்கள். 200 - 300  பேருடன் கோர்ட்டுக்கு  வந்தால் பயந்து விடுவோமா என mla ஜெகன் மூர்த்தியிடம்   காட்டமாக கேள்வி கேட்ட நீதிபதி. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன...
மூத்த மொழி தமிழ்… கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் முழு ஆதரவு

மூத்த மொழி தமிழ்… கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் முழு ஆதரவு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      உலக நாயகன் .கமல்ஹாசன் அவர்கள் தமிழ்த் திரைப்படங்களை கடந்து இந்திய அளவிலும், அகில உலக அளவிலும் தனது படைப்புகளின் வாயிலாக தனி முத்திரை பதித்த ஒரு மூத்த கலைஞர். திரைப்படங்களையே தனது சுவாசமாகவும், உணர்வாகவும், உயிராகவும் சுமந்து வாழும் மகத்தான ஒரு படைப்பாளர். வெகுஜன மக்களை மட்டுமின்றி, அந்த மக்களின் பேராதரவையும், அபிமானத்தையும் ஈட்டிய பல திரை நட்சத்திரங்களின் மனதிலும், மதம், இனம், மொழி பேதமின்றி தனது பேரன்பாலும், கலைத்திறனாலும் நிரந்தர இடம் பிடித்தவர் பத்மஸ்ரீ டாக்டர்.கமல்ஹாசன் அவர்கள். அந்த வகையில், அவருக்கும் கிரிஷ் கர்னாட்டுக்கும் உள்ள நட்பும் அவர் எழுத்தின் மேல் இருக்கும் பெரும் ஈடுபாடும் அனைவரும் அறிந்ததே. அவரது 'ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'ராஜ பார்வை' திரைப்படத்தை ஆழ்ந்த சகோதர பாசத்துடன் முன் நின்று 'கிளாப்' அடித்து துவக்கி வைத்...
4 ஆண்டு முயற்சியில் ஹிப் ஆப் ஆதி உருவாக்கிய ‘ *பொருநை* ’ ஆவணப் படம் !”

4 ஆண்டு முயற்சியில் ஹிப் ஆப் ஆதி உருவாக்கிய ‘ *பொருநை* ’ ஆவணப் படம் !”

CINI NEWS, HOME SLIDER, NEWS, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின்
  “இந்தியளவில் இதுவே முதல் முறை...” - தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப் படத்தை வெளியிடும் ஹிப் ஆப் ஆதி பெருமிதம் “4 ஆண்டு முயற்சியில் ‘ *பொருநை* ’ ஆவணப் படம் உருவாக்கம்!” இசையமைப்பாளர், நடிகர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி 2019-ம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து ‘தமிழி’ என்ற ஆவணப்பட தொடரை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். 'மூக்குத்தி அம்மன்' இரண்டாம் பாகம் மற்றும் இன்னும் ஒரு படத்திற்கு இசை அமைக்கிறேன்" என்றும் "'ஜோ' படத்தை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். அதற்கான படப்பிடிப்பு, என்னுடைய இசை உலக சுற்றுப்பயணம் முடியும் தருவாயில் இந்த படத்தை நடித்து முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறேன். இது தவிர இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள...
ரூ.1,488.50 கோடி கடனில் சென்னை மாநகராட்சி!

ரூ.1,488.50 கோடி கடனில் சென்னை மாநகராட்சி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  ரூ.1,488.50 கோடி கடனில் சென்னை மாநகராட்சி சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,488.50 கோடி கடன் நிலுவையில் இருப்பதாக மேயர் பிரியா தகவல் "ரூ.3,065.65 கோடி கடன் இருந்த நிலையில் அதில் ரூ.1,577.10 கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது; ரூ.1,488,50 கோடி கடனுக்கு வட்டி மட்டும் ரூ.8.5 கோடி செலுத்தப்பட்டு வருகிறது.
நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார் சீமான்!

நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார் சீமான்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், நடிகைகள்
  விசாரணைக்கு ஆஜரானார் சீமான்! நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆஜரானார். வழக்கு தொடர்பாக காவல் துறை 2 முறை சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது சீமான் ஆஜராகி உள்ளார். காவல் நிலையம் வரை சீமானின் காரை அனுமதிக்க வேண்டும் என காவல் துறையுடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமானின் காரை மட்டும் அனுமதித்த காவல்துறை, மற்ற கார்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே கூடியுள்ள நாதகவினர் தடுப்புகளை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் நாதகவினர்-காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விசாரணைக்கு ஆஜராகியுள்ள சீமானிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் பெற காவல் துறை திட்டமிட்டுள்ளது. சீமான் ஆஜராவதைய...
சீமானின் “பிசுறு” பேச்சால் ஒதுங்கியிருந்த காளியம்மாள் “நாம் தமிழர்” கட்சியிலிருந்து விலகல்!

சீமானின் “பிசுறு” பேச்சால் ஒதுங்கியிருந்த காளியம்மாள் “நாம் தமிழர்” கட்சியிலிருந்து விலகல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  சீமானின் “பிசுறு” பேச்சால் ஒதுங்கியிருந்த காளியம்மாள் “நாம் தமிழர்” கட்சியிலிருந்து விலகல்! நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான காளியம்மாள் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் நிலவும் கருத்து முரண்பாடு காரணமாக விலகியே இருந்தார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகி கொள்ளட்டும் என பேசினார். இந்நிலையில் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்த...