விளையாட்டை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் படங்கள் தொடர்ந்து வந்தாலும் அதில் புதுசாக கதைக்களம் பார்க்கும் படங்கள் ரொம்ப குறைவு.
சுசீந்திரன் இயக்கத்தில் உருவான சாம்பியன் படம் விளையாட்டை தொட்டிருந்தாலும் முடிவை அழகாக சொல்லியிருக்கிறது.
வடசென்னையில் வசிக்கும் மனோஜ் எப்படியாவது கால்பந்தாட்டத்தில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்கிறார். ஒரு சூழலில் வடசென்னை தாதாவின் பழக்கத்தால் பாதை மாறி போக... திடீரென விளையாடும் போதே இறந்து போகிறார்.
அப்பாவை போல மகனும் கால்பந்தாட்டத்தில் சிறந்த வீரராக வரும் நேரம் ஒரு சூழலில்அப்பாவின் மரணம் இயற்கையானது இல்லை. அவரை கொலை செய்தார்கள் என தெரிய வருகிறது. அப்பாவை கொலை செய்தவர்களை ஹீரோ விஷ்வா தேடி கண்டு பிடித்து பழி வாங்கினாரா? இல்லை வன்முறை பாதை வேண்டாம் விளையாட்டில் அப்பாவின் கனவை நனவாக்கும் வேலையை செய்தாரா? என்...
சமீபத்திய ரிலீஸ் படங்களில் "அப்பாடா" ரொம்ப நாளைக்கு அப்புறமா திக் திக்குன்னு பகீர் ரக சினிமாவா வந்திருக்கு காளிதாஸ்.
த்ரில்லர் படத்துல இப்படியும் கிளைமாக்ஸ் வைக்க முடியும்னு "அடடே" போட வைச்சிருக்கார் இயக்குனர் ஸ்ரீ செந்தில்.
பரத் ஏற்கனவே பல படங்கள் மூலம் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் காளிதாஸ் புது அனுபவத்தை கொடுத்திருக்கும். திருமணம் ஆன இளம் போலீஸ் அதிகாரியின் உணர்வுகளை முடிந்த மட்டும் வெளிப்படுத்துகிறார்.
மலையாள படங்களில் பிசியாக நடித்து வந்த ஹீரோயின் அன்ஷீட்டல் ரொம்பவே கவர்கிறார். அழகும் நடிப்பும் சரியாக இருப்பதால் தமிழில் ஒரு ரவுண்டு வரலாம்.
சீனியர் போலிஸ் அதிகாரியாக வரும் சுரேஷ் மேனன். நல்ல சாய்ஸ். நடந்த தற்கொலை சம்பவங்களை கையில் எடுத்து அசால்ட்டாக விசாரிக்கும் பாணி ரசிக்கும் ரகம்.
இது போன்ற த்ரில்லர் படத்தில் வழக்கமான காட்டப்படும...
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - விமர்சனம்
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தாமல் இருந்த குண்டுகளை அழிக்க பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது அதை சுருட்டிக் கொண்டு குண்டுகளை கடலில் வீசிவிட அதில் ஒரு குண்டு கரை ஒதுங்குகிறது.
அதை சாதாரண இரும்பு என்று காயலான் கடையில் போடுகிறார்கள். அங்கிருந்த குண்டு என்ன ஆகிறது கடைசியில் குண்டு வெடித்ததா இல்லையா இதுதான் கதை.
காயலான் கடையில் மர்ம பொருள் வெடித்து பலர் பலி என செய்திகள் வருவதற்கு பின் இப்படியும் ஒரு உண்மை இருக்கலாம் என சொல்கிறது இந்த குண்டு.
அறிமுக இயக்குனர் அதியன் நல்ல லைன் பிடித்திருக்கிறார். அதை மட்டுமே சரியாக கொண்டு போயிருந்தால் மிகப்பெரிய விஷயத்தை பகிரங்கப்படுத்திய பேர் கிடைத்திருக்கும். அதில் தேவை இல்லாமல் கயல் ஆனந்தியின் காதல் அதை வழக்கம் போல எதிர்க்கும் சாதிய கூட்டம் என அந்த காதல் காட்சிகள் எல்லாம் பரியேரும் பெருமாள் பா...
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி பட்ட படங்கள் வரும்.
ஒரு சாதாரண அதே நேரம் அவசியமான ஒரு விஷயத்தை மைய கருவாக வைத்து ஒரு மேம்பாலத்தின் மீது மொத்த படத்தையும் வைத்து படமெடுத்து அதை சாதனை ஆக்கிய துணிச்சல் இயக்குனர் சுரேஷ் காமாட்சிக்குத்தான் உண்டு.
உடம்பை காட்டி ரசிகனை ஏமாற்றாத அழகான கதை நாயகி... ஒரு மேம்பாலம்... நேர்மையான ஒரு காவல் உயர் அதிகாரி.... காவல் துறையை களங்கப்படுத்தும் ஒரு இன்ஸ்பெக்டர்... மனைவியின் தங்கையை களங்கப்படுத்தாத மாமா... மனிதாபிமானம் உள்ள ஒரு போலீஸ்காரர், நியாயமான போலீஸ் டிரைவர் என இவர்களை சுற்றி நடக்கின்ற கதைதான் மிக மிக அவசரம்.
அதிரடி தயாரிப்பாளராக சினிமா வட்டாரத்தில் அறியப்பட்ட சுரேஷ் காமாட்சியை அழகான திரைக்கதையை மிக எளிமையாக அதே நேரம் நேர்த்தியாக காட்சிப் படுத்தி இயக்குனர் ஆக தனி முத்திரை பதித்திருக்கிறார் சுரேஷ் காமாட்சி.
கடந்த சில வருடங்களில...
பப்பி ஷேம்... ஷேம் - கோடங்கி விமர்சனம்
வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்த படம் பப்பி.
வருண், யோகிபாபு, சம்யுக்தா நடித்த படத்தை நட்டுதேவ் இயக்கி இருந்தார்.
கல்லூரி மாணவனின் வயசு கோளாறு என்னவெல்லாம் செய்கிறது என்பதுதான் படத்தின் ஒருவரி கதையே.
கல்லூரி வகுப்பறையில் பலான படம் பார்த்து சஸ்பெண்ட் ஆகும் கதாநாயகன் வருணுக்கு நண்பன் யோகிபாபு. வருண் வீட்டில் வாடகைக்கு குடி வரும் சம்யுக்தாவை காதலிக்கிறார். கல்யாணத்திற்கு முன்பே இருவரும் எல்லை மீறுகிறார்கள். அதன் பின் என்ன ஆகிறது என்பதை சொல்கிறது பப்பி.
வருண் ரொம்ப ஆர்வ கோளாறான பையன் போல துறு துறுவென ஓடுகிறார். பல இடங்களில் அவர் நடிப்பது ரொம்பவே தெரிகிறது.
தான் வளர்க்கிற நாய் மீது காட்டும் பாசத்தை கூட காதலி சம்யுக்தா மீது காட்டத்தெரியாத கதா நாயகன்.
சம்யுக்தா அசப்பில் கஸ்தூரி போல தெரிகிறார். மற்றபடி அவரது கத...
தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து பிரதமரை காப்பாற்ற போராடும் உண்மையான ஒரு பாதுகாப்பு மெய்க்காப்பாளனின் கதைதான் காப்பான்.
சூர்யா தான் அந்த மெய்காப்பாளன். மோகன்லால் பிரதமர் வேஷத்தில் நடித்திருக்கிறார். தீவிரவாதிகளின் தாக்குதலில் மோகன்லால் கொல்லப்பட அந்த பதவிக்கு அவருடைய மகன் ஆர்யா வருகிறார். அவரையும் கொல்ல தீவிரவாதிகள் முயற்சிக்க அந்த முயற்சியை எப்படி மெய்க்காப்பாளன் சூர்யா காப்பாற்றுகிறார் என்பதே காப்பான்.
கதையில் சீரியசான மிடுக்கான பிரதமராக மோகன்லால் மிக பொருத்தமாக இருக்கிறார்.
அதே நேரம் திடீர் பிரதமரான ஆர்யா வழக்கம் போல விளையாட்டு பிள்ளை போல தான் இருக்கிறார்.
கார்ப்ரேட் முதலாளி கதாபாத்திரம் யாரையோ நினைவு படுத்துகிறது.
கதாநாயகி சாயிஷா அழகு பொம்மை. மற்றபடி அவருக்கு பெரிதாக டிவிஸ்ட் எதுவும் இல்லை. கிளைமாக்சில் வரும் டிவிஸ்ட் முன்பே கணிக்க முடிகிறது.
சூர்யா... ம...
கல்வி கொடுக்க ஓடும் சாந்த சொரூபி முனியையும்... பணத்துக்கு பக்காவாக திட்டம் தீட்டி ஆளைத் தூக்கும் அதிரடி மகாவையும் பயணிக்க விட்டு கூடவே வழிப் போக்கனாக ரசிகனையும் அழைத்து செல்லும் மெளனகுரு சாந்தகுமாரின் அதிரடி மிரட்டல் தான் ஆர்யாவின் மகாமுனி.
ஞானவேல் ராஜா தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் 8 ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்ட ஒரு புள்ளி இன்றைக்கு இஸ்ரோவின் சந்திராயன்2 கணக்காய் ரசிகர்கள் நெஞ்சில் தடம் பதிக்க களம் இறங்கி இருக்கிறது.
டேய் யார்ரா இவன்... என்னடா இப்படி இருக்கான்னு ஆர்யாவை பிரேமில் பார்க்கும் போதெல்லாம் மண்டைக்குள் குறுகுறுக்கிறது...
கதாபாத்திர நடிப்பு என்பது வேற... காதாபாத்தரமாவே வாழ்க்கை நடத்துறது வேற...
ஆர்யா... நீ நிஜத்துல யார்யா...
யப்பா நல்ல கதை வைச்சிருக்கும் டைரக்டருங்க எல்லாத்துக்கும் சொல்லிக்கிறேன் இந்த ஆர்யா கிட்ட என்னமோ இருக்கு... கிளாமர் கதை, காமெடி ...