சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி

ஊரடங்கில் தளர்வுகள் எவை? முதல்வர் பழனிச்சாமி அறிக்கை

ஊரடங்கில் தளர்வுகள் எவை? முதல்வர் பழனிச்சாமி அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    *அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை* *அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் சென்னையில் அனுமதிக்கப்படும்* *சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த சார்ந்த நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்* *சென்னையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி* *உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்* *கட்டுமானப் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி* *மொபைல், கம்ப்யூட்டர், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை மையங்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி* *பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்ச...
ஊரடங்கு நீடிப்பா… மே 3ல் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

ஊரடங்கு நீடிப்பா… மே 3ல் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 36 நாட்கள் ஆகியுள்ள போதிலும் கொரானா பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. நாளுக்கு நாள் கொரானா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மாநிலத்துக்கு மாநிலம் உயர்ந்து கொண்டே போகிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிருஷ்ணகிரியைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே 3ம் தேதியுடன் முடிகிறது. ஆனால் கொரானா தாக்கம் குறையாமல் இருக்கிறது. இதனால் ஊரடங்கு  மேலும் நீட்டிக்கப்படுமா? அல்லது சில தளர்வுகள் இருக்குமா? என்று மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 2-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முக்...
தமிழகத்தில் கொரானா பரவல் கட்டுக்குள் உள்ளது – முதல்வர் பழனிச்சாமி

தமிழகத்தில் கொரானா பரவல் கட்டுக்குள் உள்ளது – முதல்வர் பழனிச்சாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் கொரானா பரவல் கட்டுக்குள் உள்ளது முதலமைச்சர் பழனிச்சாமி தமிழகத்தில் கொரானா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை மண்டலத்தில் தொழிற்சாலைகள் இயங்க மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். கொரானா தடுப்பு பணிகளில் தமிழகத்தின் தற்போதைய நிலவரம் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரானா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், குறுகலான தெருக்கள் மற்றும் மக்கள் நெருக்கத்தால் சென்னையில் தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா பரவுவதாக தெரிவித்த முதலமைச்சர், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள்...
பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்குவதற்கு ‘ஆரோக்கியம்’ என்ற சிறப்புத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்!

பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்குவதற்கு ‘ஆரோக்கியம்’ என்ற சிறப்புத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நோய் எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு, கபசுர குடிநீர் அருந்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் திட்டமாக 'ஆரோக்கியம்' என்ற சிறப்புத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் தொடங்கி வைத்து கபசுர குடிநீர் பாக்கெட்டுகளை வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி கபசுர குடிநீரை வழங்கினார். கொரானாவை தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம். நிலவேம்பு, கபசுரக் குடிநீர் கொரானாவுக்கு மருந்து அல்ல; எதிர்ப்பு சக்திக்காக மட்டுமே என்று தமிழக அரசு விளக்கியுள்ளது. சென்னையில் கொரானா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு வீடு வீடாக கபசுரக் குடிநீர் சூரணப் பொட்டலங்கள் வழங...
முதல்வர் உட்பட தலைமைச்செயலக ஊழியர்கள்,பத்திரிகையாளர்களுக்கு கொரானா டெஸ்ட்!

முதல்வர் உட்பட தலைமைச்செயலக ஊழியர்கள்,பத்திரிகையாளர்களுக்கு கொரானா டெஸ்ட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா வைரஸ் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களுக்கும் பரவியதால் அவர்கள் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் சந்திப்புகளில் எந்தெந்த அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கு பெற்றார்கள் அவர்களுக்கும் கொரானா பரவி இருக்கலாமா என்ற பதட்டம் ஏற்பட்டது. மேலும், ஒரு தனியார் தொலைக்காட்சி அலுவலகமே மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த சூழலில் சென்னை தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர் அறை, கூட்டரங்குகள் போன்றவற்றில் கொரானா தொற்று இருக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகின. அதனால் அங்கெல்லாம் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தலைமை செயலகத்தில் பணிக்கு வரும் ஒவ்வொருவருக்கும் நேற்று முன்தினம் பிற்பகலில் ‘ரேபிட் டெஸ்ட்’ உபகரணம் மூலம் கொரானா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அரசு டிரைவர்க...
தமிழகத்தில் கொரானா நிவாரண நிதியாக 161 கோடி வந்துள்ளது!

தமிழகத்தில் கொரானா நிவாரண நிதியாக 161 கோடி வந்துள்ளது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      தமிழகத்தில் கொரானா நிவாரண நிதியாக 161 கோடி வந்துள்ளது! இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 13-ந் தேதிவரை மொத்தம் 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் வரப்பெற்றுள்ளது. கடந்த ஏழு நாட்களில் மட்டும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 26 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 208 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் ஆகும். இதுவரை நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நி...
மறு உத்தரவு வரும்வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு

மறு உத்தரவு வரும்வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மறு உத்தரவு வரும்வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு கொரானா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரசின் ஊரடங்கு உத்தரவு, மக்கள் ஒத்துழைப்பு ஆகியவற்றால் கொரானா பரவல் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே, பிரதமர் மோடி கடந்த 14-ம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஏப்ரல் 20-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். அதன்பின் தளர்வுகள் இருக்கும். ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதிவிலக்குகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி நாட்டில் கொரானாவுக்கு இதுவரை 507 பேர் பலியாகி உள்ளனர்.  இந்தியாவில் கொரானா பாதிப்பு எண்ணிக்கை 15,712 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 1,372 பாதிக்கப்பட்ட நிலையில் 365 பேர் குணம...
விற்பனைக்கு செல்லும் விவசாயிகளை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது – சேலத்தில் முதல்வர் உத்தரவு

விற்பனைக்கு செல்லும் விவசாயிகளை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது – சேலத்தில் முதல்வர் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    விற்பனைக்கு செல்லும் விவசாயிகளை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது - சேலத்தில் முதல்வர் உத்தரவு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கிரிலோஸ்குமார், மஞ்சுநாதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் கொரானா பரவிய 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் கொரானாவை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கொரானா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரானா நிவாரணத் தொகையான ரூ.1,000 குடும்ப அட்டைதாரர்களில் 98 சதவீதம் பேருக்கு...
கொரானா நிவாரண பணிகளால் நீண்ட நாட்களுக்கு பின் சொந்த மாவட்டமான சேலம் சென்ற முதல்வர்!

கொரானா நிவாரண பணிகளால் நீண்ட நாட்களுக்கு பின் சொந்த மாவட்டமான சேலம் சென்ற முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா நிவாரண பணிகளால் நீண்ட நாட்களுக்கு பின் சொந்த மாவட்டமான சேலம் சென்ற முதல்வர்! முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாதத்துக்கு ஒருமுறையாவது தனது சொந்த மாவட்டமான சேலத்துக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். கொரானா தொற்று தமிழகத்தில் நுழைந்த பிறகு அவர் சேலம் செல்லாமல் இருந்தார். கடந்த மாதம் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பிறகும் சென்னையிலேயே இருந்து கொரோனாவை கட்டுப்படுத்த தினமும் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். வருகிற 20-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு ஓரளவு தளர்த்தப்பட உள்ளது. கொரானா தொற்றுவின் தாக்கமும் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து இன்று காலை 8 மணிக்கு தனது சொந்த மாவட்டமான சேலத்துக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார். சேலத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் எத...
சாதி பெயரில் அரசின் நிவாரண செய்தி வெளியிட்ட திருவள்ளூர் கலெக்டர் திடீரென பதிவை நீக்கிய மர்மம்!

சாதி பெயரில் அரசின் நிவாரண செய்தி வெளியிட்ட திருவள்ளூர் கலெக்டர் திடீரென பதிவை நீக்கிய மர்மம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சாதி பெயரில் அரசின் நிவாரணம் செய்தி வெளியிட்ட திருவள்ளூர் கலெக்டர் திடீரென பதிவை நீக்கிய மர்மம்! உலகம் முழுதும் கொரானா பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி எல்லா நாட்டு மக்களையும் வீட்டுக்குள் முடக்கி உள்ளது. தமிழகத்திலும் கொரானா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழக அரசு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் மாவட்டம் தோறும் கலெக்டர் அலுவலகம் மூலமாக செய்யப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில் ஊத்துக்கோட்டை, பேரண்டூர் கிராமத்தில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தின் ஆட்சியாளராக தற்போது பதவியில் இருந்து வருவது மகேஸ்வரி ரவிக்குமார் IAS. நேற்று முன் தினம் திருவள்ளூர் மாவட்டம் , பேரண்டூர் கிராமத்தில் வழங்கப்பட நிவாரண உதவி பற்றிய தகவலை திருவள்ளூர் ஆட்சியரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவில் சில விவரங்களை குறிப்ப...