வலிமை ரிலீசுக்கு பின் நடிகர் அஜீத்தின் புது கெட்டப் வெளியாகி இணையத்தை வைரல் ஆக்கியுள்ளது.
வெள்ளை தாடி, முடியுடன் கருப்புக் கண்ணாடி அணிந்த அஜித் மனைவி ஷாலினி, மகன், மகளுடன் இருக்கும் குடும்பப்படமும் ஏராளமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிநடை போடுகிறது.
அஜித் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ள இந்த படம் வசூலிலும் பல சாதனைகளை படைத்து வருகிறது.
இதனிடையே வலிமை திரைப்படத்தின் தாய் பாசம் பற்றிய பாடல் ஜெயலலிதா நினைவு நாளிலும் திரைப்படம் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று வெளியானது.
இதனால் அஜித் அரசியலுக்கு வருவார் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நடிகர் அஜித்குமார் மனதளவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டவர் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் ஜெயலலிதாவின் மேலளார் பூங்குன்றன் சங்கரலிங்கம் அஜித் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால் அஜித் குறித்த அரசியல் செய்திகள் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வந்தது.
இ...
நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி அஜித்குமார் பெயரில் இருக்கும் இந்த twitter I’d போலியானது. அவருக்கு எந்த twitter கணக்கும் கிடையாது என்று அறிவிப்பு !
பிரபலங்கள் பெயரில் போலியாக சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் உருவாவது வழக்கமான ஒன்றுதான்.
அதிலும் அஜீத் பெயரில் அடிக்கடி இப்படி போலி கணக்குகள் உருஆவதும் அதை சம்மந்தப்பட்டவர்கள் மறுப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.
இப்போது ஒரு சேஞ்சாக அஜீத் மனிவி ஷாலினி பெயரில் ஒரு போலி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சமூக வலைதள பக்கத்துக்கும் ஷாலினி அஜீத்துக்கும் எந்த சமந்தமும் இல்லை. அது ஒரு போலி என அஜீத் மேனேஜர் சுரேஷ் சந்திரா அதே சமூக ஊடகத்தில் விளக்கம் அளித்திருப்பதுதான் இன்றைய ஹாட் டாப்பிக்.
https://twitter.com/SureshChandraa/status/1488728529336352769?s=20&t=_ScW8oJh5Pw0IWYqDCdqtw...
இரவு ஊரடங்கு விலகினால்தான் “வலிமை” ரிலீசாம்... மீண்டும் போனிகபூர்-வினோத் கூட்டணிக்கு ஓகே சொன்ன அஜீத்!
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வலிமை'
இது பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல், இரவு நேர ஊரடங்கு, தியேட்டர்களுக்கு 50 சத்வீத இருக்கை கட்டுப்பாடுகள் காரணமாக பட வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் தள்ளி வைத்தது.
பல ஆண்டுகளாக வலிமை அப்டேட் கேட்டு காத்திருந்த ரசிகர்கள் ரிலீஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் ரிலீஸ் தள்ளிப்போன தகவல் ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த சூழலில் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டால் வரும் மார்ச் மாத இறுதியில் வலிமை திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
...
ரசிகர்களை ஏமாற்றிய அஜீத்! திடீர் போஸ்டரால் பரபரப்பு
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருந்தது.
இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் ஓமிக்ரான் பரவல் தீவிரம் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது என
அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் வெளியாகவில்லை என்ற வேதனையில் அதனை வெளிப்படுத்தும் விதமாக அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பரவிவருகிறது
கோவை ரயில் நிலையம் அருகே அஜித் புகைப்படங்களுடன் அடங்காத அஜீத் குரூப்ஸ் கோவை என ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில் குறிப்பிட்டிருப்பது, "ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது it's ok" என்று அச்சிட்டு அவர்களின் மனக்குமுறல்களை ப...
துப்பாக்கி சுடுதலில் அடுத்த லெவலுக்கு செல்லும் அஜித்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்று அசத்தினார் அஜித்.
மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் அஜித். இந்தப் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இதற்காக படப்பிடிப்பு இல்லாத சமயங்களில், தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார் அஜித். தேசிய அளவிலான போட்டியிலும் அஜித் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் அவருடைய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது....